திருப்பாவை - 16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்
திருவெம்பாவை - 16
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
-
- என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
-
- பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்ன சிலைக்குலவி நந்தம்மை ஆளுடையாள்
-
- தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
-
- என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்