திருப்பாவை - 04
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியம் தோளுடைய பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
திருவெம்பாவை - 04
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
-
- வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
-
- கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
-
- கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
-
- எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்
No comments:
Post a Comment