Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, February 28, 2012

DEAR VIEWERS ,


குறுக்கெழுத்துப் புதிர் எழுதுவதில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பாணி (STYLE ) என்ற ஒன்று உண்டு. ஏதாவது ஒரு குறிப்பிட்ட SUBJECT ல் அனைத்து கட்டங்களும் நிரம்பும் விதத்தில் புதிர் எழுதுவது எனது தனிப்பட்ட பாணி. அந்த வரிசையில் இதுவரை 6 புதிர்கள் வெளியாகியுள்ளன. இன்னும் 44 புதிர்கள்  வெளியாக உள்ளது.  ( அனைத்து புதிர்களும் பிரசுரமானதும் விடைகள் தனியாக பிரசுரமாகும்.)


 ஒரு குறிப்பிட்ட SUBJECT ல் அனைத்து கட்டங்களும் நிரம்பும் விதத்தில் தமிழ் மொழியில்  குறுக்கெழுத்துப் புதிர் எழுதும்  முதல் நபர் , ஒரே ஒரு நபர் நான்தான்   என்று எனது நண்பர்கள் சொல்கிறார்கள். அது உண்மைதானா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.  எனக்கு முன்பாக இதே முயற்சியை வேறு யாராவது செய்திருந்தால், அது பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியுமானால், அதை எனக்கு தெரிவிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.  
தொடர்பு கொள்ள : 9840360475  ( INDIA )
arunasshanmugam@gmail.com 
                                                                             நன்றியுடன், 
                                                             அருணா S சண்முகம் 

குட்டிப் பாப்பாவிற்கு குறுக்கெழுத்து புதிர் ! ( Puzzle Number - 06 )


                         பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
                        எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்
   
 (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது 8  x  8  என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு  பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

                 (இந்த புதிர் 21 .11 .2008  அவள் விகடனில் வெளியாகியுள்ளது )
                                
 
   யாரோ யாரோடி ?   (செயலை வைத்து அதை செய்கிறவர் யார் என்பதை             கண்டுபிடிக்க வேண்டும் )
           
       
                             
   01 
 
     11
     

 


    
 
 
   
    
    02
 

  

   
  
   
12 
     
  
 

 
   
 
   
  

 
 

  
 13 
  
 

  

    

 
  
    03

   
 


 

    
   

 

  

 
   10

 
   

 
 
   

   
   08
 

 
  04
  
     
   06
 
 
   07 
   

 

   
   
   14
  
  05
 

  

 
   
   

   

     09
 
    
 


மேலிருந்து கீழ்

1 நகைகளின் வடிவமைப்பு இவரின் கை வண்ணம்     ( 6 )
2 சமுதாய நலனுக்காக பொது சேவை செய்கிறவள் ( 6 )
3 மரவேலைகள் செய்பவர் ( 4 )
4 ஆகாய விமானத்தை செலுத்துபவர்  ( 3 )

கீழிருந்து மேல்
 
  5  கலை / வித்தை கற்று தருவார்  ( 2 )
 6  நோய்க்கு மருந்து தருபவர் ( 6 )
 7   பேருந்து / வாகனங்கள் இயக்குபவர் ( 5 )
 8  கலை / வித்தை கற்றுக்கொள்பவன்   ( 3 )
 9 வரவு செலவு கணக்கை சரிபார்ப்பவர்    ( 5 )
10  பாடம் கற்று தருவார் ( 5 )

இடமிருந்து வலம்

  5 பூஜை செய்கிறவர்    ( 5 )  
11 பெற்று வளர்த்து பேணிக்காப்பவர் ( 7 )      

வலமிருந்து இடம்    

 9  பாடல் / கவிதை இயற்றுபவர்   ( 2 )
12  வழக்காடு மன்றத்தில் தீர்ப்பு சொல்பவர்  ( 4 )
13 சட்டம், ஒழுங்கை காப்பவர்  ( 4 )
14  பாடம் கற்றுக்கொள்பவன் ( 4 )
 

                                  
.

Friday, February 24, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 13


    
                                                                                  வழிகாட்டி  !?
( நான் எழுதிய இச்சிறு கதை அவள் விகடனில் வெளியாகியுள்ளது )

"பஸ் பத்து நிமிஷம் நிற்கும். அதற்குள்ளே சாப்பாடுக்கு போறவங்க போயிட்டு வந்திடலாம்" என்ற கண்டக்டரின் அறிவிப்பைத் தொடர்ந்து "நான், நீ" என்று போட்டி போட்டுக்கொண்டு பயணிகள் பஸ்சிலிருந்து இறங்க ஆயத்தமானார்கள். 
சூடாக ஒரு கப் பால் குடித்துவிட்டு வரலாமென்ற நினைப்பில் மனைவியின் பக்கம் திரும்பியவர்  அவளது ஆழ்ந்த உறக்கத்தைக் கண்டு, பஸ் கிளம்ப ஆரம்பித்ததிலிருந்தே தன்னுடன் பேச்சுத் துணையாக இருந்தவரிடம், "வாயிலே கொசு போறதுகூட தெரியாமே தூங்கிறதப் பாருங்க சார். வீட்டிலிருந்து கிளம்பி பஸ் ஸ்டாண்ட் வரை என் தம்பி மகன் காரில் அழைச்சிட்டு வந்தான், ஒரு நிமிஷங்கூட வாய் மூடாமே, " அப்பிடிப் பார்த்து ஓட்டு. எதிரே சைக்கிள்காரன் வர்றான். அவன் மேலே மோதிடாதே"னு பஸ் ஸ்டாண்ட் வர்றதுக்குள் அவனை ஒரு வழி பண்ணிட்டா.  இப்ப யாரோ ஒருத்தன் வண்டி ஓட்டறான், எதைப்பத்தியும்  கவலைப் படாமே என்ன ஒரு நிம்மதியா தூங்கிறா பாருங்க " என்றார் சந்திரசேகர். 
" அதான் சார் உலகம். முன்னே பின்னே தெரியாத எவனோ ஒரு மூன்றாம்  மனுசனை நம்புகிற மனம் நம்ம வீட்டு மனுசங்களை நம்ப மறுக்கிறது. தெரியாமலா சொன்னாங்க, தோட்டத்து பச்சிலைக்கு மவுசு குறைவுதான்"னு என்றார் சக பயணி.
மூளையில் பொறி தட்டியது போன்ற உணர்வு.
"நமக்கு தெரிஞ்சு பிறந்த வளர்ந்த பையன் ரமேஷ். அவனிடமிருந்த ஒரு சில பிடிவாத குணத்தை பெரிய விசயமா நினைச்சு அவனை ஒதுக்கு வச்சிட்டு தரகர் சொன்ன வரனைப் பார்க்க கிளம்பி வந்திட்டோம். அந்த வரன் மட்டும் எல்லா வகையிலும் ஒழுங்கா இருப்பான் என்பது என்ன நிச்சயம்.  புனிதம்னு நினைச்சு முன்னே பின்னே தெரியாத கங்கையில் ஆழம் தெரியாமல் இறங்கி, அவஸ்தைப் படறதைவிட, நமக்கு நல்லா   தெரிஞ்ச சாக்கடையில் இறங்கி அதை சுத்தம் செய்யலாமே " என்று அறிவு அலார மணி அடித்தது.
உடனே   தூங்கிக் கொண்டிருந்த மனைவியை வேகமாகத் தட்டி எழுப்பி " எழுந்திரு. சீக்கிரம் இறங்கு" என்றார்.
அதுக்குள்ளே  ஊர் வந்துட்டுதா?" என்று கண்ணைக் கசக்கியபடி கேட்ட மனைவியிடம், " இல்லே, நாம போக வேண்டிய ஊர் எதுன்னு தெரிஞ்சிட்டுது. நாம போய் பார்க்க நினைச்ச நாகர்கோயில் வரன் வேண்டாம்; நீ சொன்னபடி உன் அண்ணன் மகனுக்கே நம்ம வசந்தியைக்  குடுக்க முடிவு பண்ணிட்டேன்" என்றார்.
" ஏனுங்க, நானும் வருசக் கணக்கா, மாசக் கணக்கா உங்ககிட்டே சண்டை போட்டு பார்த்தேன். அப்பல்லாம் வேண்டாம்னு சொல்லி பிடிவாதமா இருந்தீங்க.  வேறே ஒரு வரனை பார்க்கிறதுக்காக கிளம்பி வந்து பஸ்சில் ஏறி உட்கார்ந்து, பாதி தூரம் வந்த பிறகு, என் அண்ணன் பையனுக்கே வசந்தியைக் குடுக்கலாம்னு சொல்றீங்க. எப்படி மனசு மாறுனீங்க?"  என்று ஆச்சரியமாகக் கேட்ட மனைவியிடம், " எல்லாத்துக்கும் காரணம் சார்தான். நாம போக வேண்டிய இடம் எதுன்னு நமக்கு வழி காட்டியது சார்தான். உன் அண்ணன் வீட்டு சம்பந்தம் செட்டில் ஆகிறதுக்கு நீ சாருக்குத்தான் நன்றி சொல்லணும்" என்ற சந்திரசேகர், கையில் லகேஜ்ஜை எடுத்துக் கொண்டு, " ரொம்ப நன்றி சார். நாங்க இங்கே இறங்கி, வர்ற பஸ்ஸை பிடிச்சு ஊர் போய் சேருகிறோம்" என்று சொல்லி மனைவியுடன் பஸ்ஸை விட்டு இறங்கினார்.
"அப்படி பெரிசா என்னத்தைப் பண்ணிட்டோம் ?" என்ற குழப்பத்தில் இருந்தார் சக பயணி.


.


.


Saturday, February 18, 2012

குட்டிப் பாப்பாவிற்கு குறுக்கெழுத்து புதிர் ! ( Puzzle Number - 05 )


                        பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
                        எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்
 
   (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது 8 x 8   என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

தெய்வங்கள்,  தேவர்களுடன்  சம்பந்தப்பட்ட      பூ, பறவை, மிருகங்கள் பெயரை சொல்லுங்களேன் !

   ( இந்த புதிர்   ஆகஸ்ட்  2011   'கோகுலம்'  மாத இதழில் வெளியாகியுள்ளது  )
                                   
                    
                             
    11
 
   
     

 


    15
 
 
   
    
    
 
     16
  

   
     04
   

     
   05
 

 
    01
 
    02
  
     03
 
 

  
  
 

  

    

 
  


   
 


 

    
   
    08
 

  

 


 
    07
     12
 
 
   

   

 

 

  
     06
     13
   
 

   

 

   
   

  
     14
 

  

 
   
   

   
    17
     09
 
     10
 

மேலிருந்து கீழ்

1  அங்காரகன்                ( 2 )
2  முருகன்                      ( 3 )
3 தேவலோக பசு         ( 4 )
4  அம்பிகை அருகில் ( நளனுக்கு தூது சென்றது )     ( 4 )
5  சபரிமலை ஸ்ரீ ஐயப்பன்           ( 2 )

கீழிருந்து மேல்
  
 3  சனி பகவான்                                ( 3 )
 6  திருமகளின் இருக்கை             ( 5 )
 7  பைரவர்                                           ( 2 )
 8  காளியின் வாகனம்                   ( 4 )
 9 சூரியனின் ரதத்தை இழுப்பது   ( 7 )
10 திருமாலின் பாம்பணை          ( 5 )

இடமிருந்து வலம்  

11  சிவன் பார்வதியை சுமந்து நிற்பது ( 4 )
12  ராம தூதன்        ( 4 )
13  கலைமகளின் இருக்கை     ( 5 )
14  பிள்ளையார் காலடியில்     ( 4 )

வலமிருந்து இடம்

15 தேவேந்திரனின் வெள்ளை யானை  ( 5 )
16 கிருஷ்ணரின் வாகனம்         ( 4 )
17 மதுரை மீனாக்ஷி கையில்   ( 2 )

                    

                                                



Friday, February 17, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 12

                                                               
 
                                                                         பொறுப்பு  !  

கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டாள் சாந்தி. வீட்டுக்குள் நுழையும்போதே, "கட்டிலிலிருந்து குழந்தை கீழே விழுந்துவிட்டான்" னு  சொன்னவளை தூக்கிப்போட்டு நாலு மிதி மிதிக்காமல் "அப்படியா ? குப்புற விழுந்தானா? இல்லே மல்லாக்க விழுந்தானா"ன்னு கதை கேட்டுக்கொண்டிருந்ததும் இல்லாமல், இரவு சாப்பாட்டுக்காக வாங்கி வைத்திருந்த பூரி செட்டை ஹான்ட் பேக்கைத் திறந்து எடுத்து " இந்தா, இதை வீட்டுக்கு எடுத்துட்டு  போய் சாப்பிடு" என்று சொன்ன கணவனை எரித்து விடுவதுபோல்  பார்த்தாள் சாந்தி.
குழந்தை கீழே விழுந்துட்டான்னு இன்பர்மேசன் சொல்றதுக்கா ஆயிரக் கணக்கில் சம்பளம் கொடுத்து வேலைக்காரி வைத்திருக்கிறோம் என்ற எரிச்சல் வந்தது. வேலைக்காரப் பெண் மீது இவருக்கு ஏன் இவ்வளவு கரிசனம் என்ற சந்தேகமும் எழுந்தது. காதல் மோகத்தில் ஏமாந்து விட்டோமோ என்ற பயமும் எழுந்தது.
வேலைக்காரப் பெண் கிளம்பிப் போனதுமே  " சாந்தி, சீக்கிரம் குழந்தையை எடுத்துட்டு கிளம்பு. டாக்டர் வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம் " என்றான்  சரவணன்.  
"வேலைக்காரி நடந்து போறாளே. அவளை உங்க வண்டியில் வச்சு வீட்டில் கொண்டு போய் விட்டுட்டு வரலாமே? அப்புறமா குழந்தையை கவனிக்கலாமே ?" என்றாள் சாந்தி இளக்காரமாக.
 " உன்னோட கோபத்துக்கு காரணம் புரியுது சாந்தி. நாம ரெண்டு பேரும் பெத்தவங்களை எதிர்த்து காதல் கல்யாணம் பண்ணிட்டோம். நம்ம ரெண்டு வீட்டு சப்போர்ட்டும் நமக்கு கிடையாது. உதவி செய்ய நண்பர்கள் இருக்கிறாங்க, குழந்தையை கவனிச்சுக்கிறதைத்  தவிர. உன்னாலே வேலையை விடவும் முடியாது.வேலைக்காரங்களை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை நமக்கு. குழந்தை கீழே விழுந்ததை அவ ஒளிவு மறைவு இல்லாமே சொல்லிட்டா. அதற்குப் போய் நாம அவளை திட்டினா, இனிமே எது நடந்தாலும் அதை நமக்கு சொல்லாமே மறைக்கப் பார்ப்பா. குழந்தை கீழே விழுந்ததை அவ மறைச்சிருந்தா, ராத்திரி குழந்தை வலியில் அழுதால் கூட, எதற்கு அழுகிறது என்பது தெரியாமல் அதை தூங்க வைக்கத்தான் முயற்சி பண்ணிட்டு இருப்போம். நடந்தது என்னன்னு இப்போ தெரிஞ்சு போச்சு. கீழே விழுந்ததில் குழந்தைக்கு எதுவும் ஆகாட்டாலும்கூட நம்ம திருப்திக்கு டாக்டரிடம் காட்டி விட்டு வந்திடலாம்.  சீக்கிரம் கிளம்பு. வர்றப்போ வெளியில் டிபன் சாப்பிட்டு விட்டு வந்திடலாம்" என்றான் சரவணன் குழந்தையை தோளில் தூக்கியபடியே..
"  சாரிங்க " என்றாள் சாந்தி.
"எதற்கு?" என்று ஒன்றும் புரியாதவனாகக் கேட்டான் சரவணன்  




 

Thursday, February 16, 2012

Stories told by Grand -Ma ( Story number - 9 )



                                          எல்லாம் நன்மைக்கே !!

     ( இந்த  சிறுகதை  " சுபவரம் " மாத இதழில் வெளியாகியுள்ளது )

" ஆச்சரியமாயிருக்கே!. ரெண்டு பேரும் ஒரே இடத்தில இருந்தும் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் வீடு இவ்வளவு அமைதியா இருக்கே?" என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் பாட்டி.
" பாட்டி, நான் ரொம்ப கோபமா இருக்கிறேன்" என்றான் பிரபு.
" அவன் கோபத்திலே இருக்கிறான். உனக்கு என்னடி ஆச்சு? நீயும் 'உம்'ன்னு இருக்கியே, ஏன் ?'
"அவனுக்கு என்ன கோபம்? யார் மேலே கோபம்னு கண்டு பிடிக்க என்னோட மூளையை கசக்கி பிளிஞ்சிண்டு இருக்கிறேன்" என்று பதில் வந்தது மனோவிடமிருந்து.
"இல்லாத ஒன்றை எப்படி பாட்டி கசக்கி பிழிய முடியும்?" என்று கேட்டான் பிரபு.
" பாரு பாட்டி, எனக்கு மூளை இல்லேங்கிறான்" என்று சொல்லி அழ ஆரம்பித்தாள் மனோ.
"அழாதேடி. அண்ணன்தானே. விளையாட்டுக்கு சொல்றான். அதை பெரிசா எடுத்துக்கலாமா?" என்று சமாதானம் செய்தாள் பாட்டி.
"நிஜந்தான் பாட்டி. இவளுக்கு முன்னே தலையை எக்ஸ்ரே எடுத்தோம். எக்ஸ்ரே ரிப்போர்ட் பார்த்ததுமே டாக்டர் ' இவளுக்கு தலையில் எதுவுமே இல்லைன்னு சொன்னார் பாட்டி"
" போடா. எனக்கு அடிக்கடி தலைவலி வந்துட்டு இருந்தது. தலையில் ஏதாவது கட்டி இருக்குமோனு மம்மி பீல் பண்ணினாங்க. அதனாலே டாக்டர்ட்ட அழைச்சிட்டு போனாங்க. என்னை டெஸ்ட் பண்ணின டாக்டர் எக்ஸ்ரே எடுக்க சொன்னார். ரிபோர்ட் நெகடிவா வரலே. மம்மிக்கு தைரியம் சொல்றதுக்காக டாக்டர் தலையில் எதுவும் பயப்படும்படியா இல்லே'ன்னு சொன்னார். அதை நீ இப்போ மாத்தி சொல்றே. பாட்டி அவன் ஏன் கோபமா இருக்கிறான்னு கேளேன் பாட்டி. அதை தெரிஞ்சுக்காட்டா எனக்கு போன தலைவலி திரும்பவும் வந்துடும் பாட்டி" என்றாள் மனோ.
 பிரபுவின் தலையை செல்லமாக வருடிவிட்ட பாட்டி, "என்னடா கோபம் ? யார் மேலே கோபம்?" என்று கேட்டாள்.
" பாட்டி, நீ கேட்கிறதாலேதான் சொல்றேன். இந்த மனோ கழுதைக்காக இல்லே."
"எப்படியோ, நீ விஷயத்தை சொன்னா போதும். சொல்" என்றாள் மனோ.
" பாட்டி, இந்த கிராமத்து பசங்க எல்லாரும் சேர்ந்து டவுனுக்கு போறாங்க. அங்கே போய் எக்சிபிசன், சினிமா எல்லாம் பார்த்துட்டு வருவாங்களாம். நானும் வர்றேன்னு சொன்னேன். அதுக்கு, 'நாங்க செகண்ட் ஷோ சினிமா பார்த்துட்டு வர மிட் நைட் ஆயிடும். திரும்பி வர பஸ் கிடைக்காது. நாங்க நடந்து வருவோம். நீ பட்டணத்து பையன். உன்னாலே ரொம்ப தூரம் நடக்க முடியாது. அதனாலே நீ வேண்டாம்'ன்னு சொல்லிட்டு அவங்க எல்லாரும் போய்ட்டாங்க பாட்டி. எனக்கு அழுகை அழுகையா வருது" என்றான் பிரபு.
" அட அசடே, இதுக்கு போய் அழலாமா? உன்னோட நல்லதுக்குதானே சொல்லி இருக்காங்க. எதையும் ஈசியா எடுத்துக்க பழகிக்கணும். எது நடந்தாலும் அது நன்மைக்குதான்னு நினைக்க பழகிக்கணும்" என்றாள் பாட்டி.
" டேய் அண்ணா. பாட்டி அதுக்கு கூட ஒரு கதை வச்சிருப்பா" என்று மனோ சொல்ல "அப்படியா?" என்பதுபோல் பாட்டியை பார்த்தான் பிரபு.
" ஆமாம்" என்ற பாட்டி, எழுந்து போய் ஒரு தட்டில் அதிரசம், முறுக்கு எல்லாம் கொண்டு வந்து வைத்து விட்டு, " இதை சாப்பிட்டுகிட்டே கதை கேளுங்க" என்றாள்.
"ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் கடல் கடந்து போய் அந்நிய நாடுகளில் பொன், மணி, முத்து இவற்றை எல்லாம் விற்று காசாக்கி விட்டு வருவான். ஒரு தடவை இவன் கப்பலில் போயிட்டு இருக்கும் போது பயங்கர மழை, சூறாவளி காற்று தாக்கியதில்  இவன் பயணம் செய்த கப்பல் கவிழ்ந்து போச்சு. பயணிகள் நாலா பக்கமும் போய் விழுந்தார்கள். கடல் அலையும், காற்றும் அவர்களை  ஒவ்வொரு  திசைக்கு இழுத்துட்டு போச்சு. நம்ம வியாபாரி கையில் கிடைச்ச ஒரு மரக்கட்டையை கெட்டியா பிடிச்சுகிட்டான். அலைகள் அவனை ஒரு தீவில் கொண்டு போய் தள்ளியது. மனுசங்க யாருமே இல்லாத தீவு அது. காடு முழுக்க மூங்கில் மரங்கள், காட்டு செடிகள், பழ மரங்கள்தான் இருந்தது. தன்னோட நிலையை நினைச்சு அழுத வியாபாரி, பிறகு மனசை தேத்திகிட்டு, அங்கு கிடைச்ச கம்பு, செடி கொடியை வச்சு ஒரு கூடாரம் போட்டு கிட்டான், கடலில் மீன் பிடிச்சு சாப்பிட்டான், அந்த தீவில் கிடைத்த காய், கனியை சாப்பிட்டு நாளையும் பொழுதையும் ஓட்டிட்டு இருந்தான். ஒருநாள் அவன் காட்டுக்குள்ளே போய் பழம் எடுத்துட்டு வாறதுக்குள், இவனோட கூடாரம் தீ பிடிச்சு எரிஞ்சு போச்சு."
  "ஆளே இல்லாத இடத்தில் கூடாரத்துக்கு நெருப்பு வச்சது யார் பாட்டி?" என்று பிரபு கேட்க, " அதானே! வெரி குட் கொஸ்டின் " என்றாள் மனோ.
" நான்தான் முதலிலேயே சொன்னேனே. அந்த தீவில் மூங்கில் மரங்கள் நிறைய இருந்துதுன்னு. மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று காற்றில் உரசும் போது தீப் பற்றி கொள்ளும். அப்படி பற்றிய நெருப்புதான் இவன் கூடாரத்தில் விழுந்ததில், கூடாரம் எரிஞ்சு போச்சு. இதை பார்த்த வியாபாரி அழுதான். ஊரும் உறவும் மெச்ச ராஜ வாழ்வு வாழ்ந்த நான், இன்னிக்கு இந்த தீவில் யாருமில்லாத அனாதையா, ஒரு பிச்சைக்காரனைவிட கேவலமான நிலையில் இருக்கிறேன். நான் இங்கு உயிரோடு இருக்கும் விஷயம் இன்னும் யாருக்கும் தெரியாது. வெயில் மழையிலிருந்து தப்பிக்க கையில் கிடைச்ச செடி கொடியை வச்சு ஒரு கூடாரம் போட்டிருந்தேன். அதுவும் எரிஞ்சு போச்சு. கடவுளே, எல்லாரும் உன்னை கருணாமூர்த்தின்னு சொல்றாங்க. அது பொய். நீ கண்ணற்ற பாவி. உன்னை கும்பிடறது, நம்புவது எல்லாமே வீண்தான்"னு சொல்லி கதறி அழுதான். அழுதழுது மயக்கமாயிட்டான். அப்படி எவ்வளவு நேரம் கிடந்தான் என்பது அவனுக்கே தெரியாது.
அவன் முகத்தில் குளிர்ந்த தண்ணீர் படவும் கண்களை திறந்து பார்த்தான். அவனை சுற்றி மனித முகங்கள். சுவையான உணவின் மணம். இவனுக்கு எதுவுமே புரியலே. இவன் முகத்தை துடைத்து விட்ட ஒருவர், " ஐயா நீங்க யார்? தனியாக இந்த தீவில் என்ன செய்றீங்க? நாங்கள் எல்லோரும் வியாபாரிகள். நிலத்தை விட்டு கிளம்பி வந்து நீண்ட நாட்களாகி விட்டது. அதனால் ஏதாவது ஒரு தீவில் சில நாள் தங்கி விட்டு பிறகு பயணத்தை தொடர
நினைத்தோம். எதாவது தீவு  தெரிகிறதா என்று தேடியபோது இந்த தீவு கண்ணில் தட்டுப்பட்டது. இங்கிருந்து நெருப்பும் புகையும் வருவது தெரிந்தது. மனிதர்கள் வாழும் தீவு என்று நினைத்துக்கொண்டு இங்கு வந்தோம். ஆனால் இங்கு உங்களை தவிர வேறு யாருமே இல்லையே!" என்றார்.
ஆனால் இது எதுவுமே நம்ம வியாபாரி காதில் விழவில்லை. "கடவுளே, நீ உண்மையிலேயே கருணாமூர்த்திதான். இன்னிக்கு இந்த கூடாரம் மட்டும் எரிஞ்சிருக்காட்டா, நான் இங்கு இருக்கும் விஷயம் வெளி உலகுக்கு தெரியாமலே போயிருக்குமே. ஒரு சின்ன துன்பத்தை குடுத்து, அது மூலமா ஒரு பெரிய சந்தோசத்தை குடுத்திட்டே. உன் கருணை மனசை அறிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லாமல் போயிட்டதே. உனக்கு நன்றி கடவுளே"ன்னு சொல்லிட்டு, வந்திருந்தவங்க கிட்டே தன்னோட நிலையை எடுத்து சொல்லி, அவங்க உதவியால் அவனோட வீட்டை அடைந்தான்," என்று பாட்டி சொல்லி க்கொண்டிருக்கும் போது "பெரியம்மா" என்ற குரல் கொடுத்துக்கொண்டே, மணியக்காரர் பாட்டி வீட்டுக்குள் வந்தார்.
வந்தவர், "குற்றாலம் டூர் போகணும்ன்னு என் வீட்டு புள்ளைக ரெண்டு பேரும் போன மாசமே டிக்கெட் புக் பண்ணி இருந்தாங்க. பெரியவனுக்கு உடல்நலம் சீரில்லை. அதனாலே போக வேண்டாம்னு சொல்லிட்டேன். அவன் வராமே நானும் போக மாட்டேன்னு சின்னவன் சொல்றான்.  கொடுத்த பணத்தை திருப்பி தர மாட்டாங்க. ரெண்டு டிக்கெட் வீணா போகுது. நீங்க உங்க பேர புள்ளைங்களை  அனுப்புறீங்களா? பட்டணத்து புள்ளைங்க. குற்றாலம் பார்த்திருக்க மாட்டாங்க. சாப்பாட்டுக்கும் சேர்த்துதான் பணம் கட்டி இருக்காங்க. குளிச்சதும் போட்டுக்க கையில் மாற்று துணி மட்டும் எடுத்துக்க சொல்லுங்க.. வேறு எதுவும் வேண்டாம். இன்னும் அரை மணி நேரத்தில் பஸ் கிளம்பிடும். எப்படியும் ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் வீடு திரும்பிடலாம். புள்ளைங்களை அனுப்புறீங்களா?" என்று கேட்டார்.
"குழந்தைகளா, போறீங்களா?" என்று கேட்டபடியே திரும்பிய பாட்டி, "இங்கேதானே நின்னாங்க. அதுக்குள்ளே எங்கே போனாங்க?" என்று தேட ஆரம்பித்தாள்.
பிரபுவும் மனோவும் டிரெஸ்ஸை எடுத்து வைப்பதில்  மும்முரமாக இருந்தார்கள். " மத்த பசங்க உன்னை சினிமாவுக்கு கூட்டிட்டு போகலைன்னு அழுதியே. சினிமா போயிருந்தா டூரை மிஸ் பண்ணி இருப்பேதானே? பாட்டி சொன்ன மாதிரி 'எல்லாமே நன்மைக்குதான்' என்று மனோ சொல்ல,
"அட ஆமாம்டி" என்றான் பிரபு.
அவர்களுடைய சந்தோசம், பாட்டிக்கும் சந்தோசத்தை தந்தது.