இந்தப் புதிரை நீங்கள் on - line ல் solve பண்ண முடியாது. காப்பி எடுத்தோ அல்லது கட்டங்கள் வரைந்தோ புதிரை விடுவிக்க வேண்டும். முக்கியமான ஒரு விஷயம், இந்தப் புதிருக்குள் ஒளவையார் சொன்ன ஆத்திசூடியில் ஒன்று உள்ளது. கண்டுபிடியுங்கள்.
புதிர் - 01
இடமிருந்து வலம்
1 தெய்வப்புலவர் (7)
2 சேனை (2)
3 மரவேலை செய்பவர் (4)
வலமிருந்து இடம்
4 கவித்துவம் - வேறு பெயர் (3)
5 வீட்டு சுவரில் சுதந்திரமாக ஊர்ந்து செல்லும் ஜந்து (3)
6 தவமிருந்து இறைவனிடம் கேட்பது (3)
மேலிருந்து கீழ்
4 கிரகப்பிரவேசம் (8)
7 பிடிவாதம் (3)
8 கடுஞ்சினம் (4)
9 விலாசம்
10 சூழ்ச்சி (5)
11 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.க்குரிய மற்றொரு சிறப்பு பெயர் - - - - - - செம்மல் (6)
12 பயணிக்கும் வண்டி, பேருந்துகளின் பொதுப் பெயர் -(4)
13 இளங்கன்று - - - - - - (6)
14 அழைப்பை ஏற்று வருபவர் ( 6)
15 நோன்பு (4)
16 மிகுந்த அழகு (5)
17 கரிய மேகம் (5)
கீழிருந்து மேல்
5 வேலை / அலுவல் - வேறு சொல் (2)
6 வாணிபம் - வேறு சொல் (6)
7 தாய்-தந்தை - வேறு சொல் (6)
9 யானையின் காதுகளுக்கு உதாரணமாக சொல்லப்படும் வீட்டு உபயோகப் பொருள் ( 3)
11 சிவப்பு நிற மணல் - வேறு சொல் (4)
12 சந்தர்ப்பம் - வேறு சொல் (4)
13 தாயம் (3)
14 அகோரம் (பார்க்க சகிக்காத தோற்றம்) (4)
15 ஆசை ( 5)
18 மகாகவி என்கிற பெருமைக்குரியவர் (3)