Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 30, 2013

Scanning of inner-heart ( Scan Report Number - 84 )

வாழ்க்கை என்பதே ஜாலி ! அதை வாழ்ந்து பார்ப்பதே  ஜோலி !!

கையில் காபியுடன் வந்த கோதாவரி, ஹாலில் வாசுதேவன் இல்லாததால் மெதுவாகப் படியேறி மொட்டைமாடிக்கு வந்தாள். கைப் பிடி சுவரில் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு. விரல்களில் எதையோ எண்ணிக்கொண்டு தனக்குத் தானே பேசியபடி அவர் இருந்த நிலையைக் கண்டு பதறிப் போனாள்.
" என்னங்க, வீட்டில் உட்கார இடமில்லையா என்ன ? இப்படி சுவர் விளிம்பில் உட்கார்ந்திருக்கீங்க. தவறி விழுந்தால் என்ன ஆறது ? என்று கோபமாகக் கேட்டாள்.
" என்ன ஆகிறதா ? போய்ச்சேர்ந்துட்டா நல்லா இருக்கும் !"
இந்த பதிலைக் கேட்டு அழுகையும் ஆத்திரமும் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு, " இப்போ என்ன நடந்துட்டுன்னு இப்படிப் பேசறீங்க ? ஊர் உலகத்தில் நடக்கிறதுதானே. எப்போ வேலையில் சேர்கிறோமோ அப்பவே நமக்கு  நல்லா தெரியும், இந்த வாழ்க்கை, நம்மோட ஆபீஸ் வாழ்க்கை அறுபது வயசுவரை தான்னு. முப்பத்தைந்து வருஷ சர்விசை நல்லபடியா முடிச்சிட்டு கைநிறைய பணத்தோடு வந்துருக்கீங்க. கடவுள் புண்ணியத்தில் நமக்கு எந்த குறையும் இல்லே ......"
அவளது பேச்சை நிறுத்திவிட்டு " ஏண்டீ, என்னோட உட்கார்ந்து பேச இந்த வீட்டில் யாருக்கு நேரமிருக்கிறது ? " என்றார் கோபமாக 
"கோபப்படாமே கொஞ்சம்  பொறுமையா யோசிச்சுப் பாருங்க, நீங்க வேலைக்குன்னு ஓடிட்டு இருக்கிறப்போ, எத்தனை நாள் இந்த  வீட்டிலுள்ளவங்க கிட்டே முகங் கொடுத்து  உட்கார்ந்து பேசியிருக்கீங்க. கேட்ட கேள்விக்கு பொறுமையா பதில் சொல்லி இருக்கீங்க. காலையில் பேச வந்தால், 'வேலைக்குப் போற டென்சனில் இருக்கிறேன். எதுவும் கேட்காதேன்னு கத்த வேண்டியது. ராத்திரி பேச வந்தால், ' தலைவலி. நானே செத்து சுண்ணாம்பா வந்திருக்கிறேன்.நான் இருக்கிற  பக்கத்தி லேயே யாரும்  வராதீங்க'ன்னு கத்த வேண்டியது. அதானே இந்த வீட்டில் இத்தனை நாளும் நடந்திருக்கு. ..."
"ஓஹோ .. இதுநாள் வரை  நடந்ததுக்கு இப்போ எல்லாரும் என்னை பழி வாங்கிறீங்களாக்கும் ?"
"ஏனுங்க, பழிவாங்க நாம என்ன விரோதிங்களா ? உங்களுக்கு இருந்த அதே அவசரம் டென்சன் நம்ம பிள்ளைகளுக்கும் இருக்குதுங்க. இது இப்போனு இல்லே . அவங்க ஸ்கூல், காலேஜ், ஜாப்க்கு போக ஆரம்பிச்ச நாளிலிருந்தே இருக்கு . அதையெல்லாம் நின்று கவனிக்க உங்களுக்கு என்றைக்கு நேரமிருந்திருக்குது ? இன்றைக்கு உங்களுக்குப் பொழுது போகலேங்கிறதுக்காக எல்லாரும் என் கூட உட்கார்ந்து பேசுங்கன்னு நீங்க கூப்பிட்டா அத்தனை பேரும்  அவங்கவங்க வேலையை விட்டுட்டு வருவாங்களா என்ன  ? "
 " போச்சுடா, இதுக்கும் நான்தான் காரணமா ? " என்று எரிந்து விழுந்தார் வாசுதேவன்.
"கோபப்படாமே கொஞ்சம்  பொறுமையாநான் சொல்றதைக்  கேளுங்க. நீங்க ரிடைர் ஆகி வந்துட்டதாலே நீங்க ஆபீஸ் பக்கமே போகக் கூடாதுன்னு சட்டம் இருக்கா என்ன ? தினமும் போங்க . லஞ்ச் டைம்க்கு உங்க பழைய தோஸ்துங்க வெளியில் வருவாங்க தானே . அவங்ககூட கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிட்டு வாங்க "
" போடி இவளே, தோஸ்தாவது மண்ணாங்கட்டியாவது? போனவாரம் பேங்க் போயிட்டு, வீட்டுக்கு  வர்றப்போ, கூட வேலை பார்த்தவங்களை, பிரெண்ட்ஸ்சை எட்டிப் பார்த்துட்டு வரலாம்னு ஆபீசுக்குள் நுழைஞ்சா அவனவன் நம்மள ஏதோ வினோதமான பிராணியைப் பார்க்கிறாப்லே பார்க்கிறான். என்னவோ இவன் சொத்தை நம்ம கொள்ளையடிக்க வந்திட்ட மாதிரி அப்படியொரு எச்சரிக்கை யுணர்வோடு பேசறான். மதிப்பு மரியாதை எல்லாம் சர்வீஸில் இருக்கிறவரைதான்டீ . அதுக்குப் பிறகு நீ யாரோ நான் யாரோதான் " என்று மனம் நொந்து பேசினார் வாசு தேவன். 
"அப்படின்னா  உங்களுக்கு முன்னாடியே  ரிடையர் ஆகிப் போனவங்க இருப்பாங்க தானே.  நீங்க , அவங்களப் போய்ப்பாருங்க. ரிடைர்மென்ட் லைப்பை அவங்க எப்படி  ஹான்டில் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க. அந்த லைப் சரிப்பட்டு வரும்னா அப்படியே இருந்துட்டுப் போங்க "
"சமயத்தில் நீயும் புத்திசாலித் தனமாத்தான் பேசறே. எனக்கு முன்னாடி  ஆபீசை விட்டு வெளியில் வந்தது மொத்தம் மூணு பேர். அதில் ரங்கநாத் அவன் பிள்ளையோட பாரீனில் செட்டில் ஆகிட்டான். லாரன்ஸ் கிறிஸ்டி இப்போ விழுப்புரம் பக்கத்தில் எதோ ஒரு கிராமத்தில் நிலபுலங்களைக் கவனிச்சிட்டு இருக்கிறதா கேள்விப் பட்டேன். இன்னொன்னு கற்பகம் மேடம். ஆயிரம் பேர் வேலை பார்க்கிற இடத்தில் ஒருத்தரையொருத்தர் தெரிஞ்சுக்கிறதே பெரிய விஷயம். அவங்க ரிடைர்மென்ட் ஆகிறப்பதான் அந்த அம்மா எங்க ஆபீசில் வேலை பார்க்கிற விஷயமே எனக்குத் தெரியும். அன்னிக்குத் தான் ஜெயபால் சொன்னான், ' அது சரியான சாவுக் கிராக்கி ஸார். யார்கிட்டேயும் அண்டாது'ன்னு. அவங்க வீடு கூட இங்கே பக்கத்தில்தான். வடபழனி கோயில் பக்கத்தில்தான்னு சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது. இன்னிக்குக் கோயிலுக்குப் போறப்ப அவங்களைத் தேடிக் கண்டுபிடிச்சு பேசிட்டு வந்திடறேன். வெந்நீர் எடுத்து வை. நான் குளிச்சிட்டுக் கிளம்பறேன் " என்று உற்சாகக் குரலில் சொன்னார்.
"அப்பாடா" என்ற நிம்மதிப் பெருமூச்சுடன், ' இந்த மனுஷனை இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி சமாதானம் செய்ய முடியும்? கடவுளே எல்லா சூழ்நிலையிலும் சந்தோசமா இருக்கிற மனப் பக்குவத்தை நீதான் அவருக்கு தரணும் ' என்ற பிரார்த்தனையும் சேர்ந்து வந்தது கோதாவரி யிடமிருந்து.
வாசுதேவன் கிளம்பி வெளியில் சென்றதும் சமையல் கட்டில்   தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டாள் கோதாவரி.
கற்பகத்தின் வீட்டைத் தேடிக்  கண்டுபிடிப்பது அப்படியொன்றும் பெரிய விசயமாக இல்லை வாசுதேவனுக்கு. அந்த அம்மா சர்வீஸில் இருக்கும் போதே  யாரிடமும் அதிகம் பேசமாட்டங்கணு கேள்விப்பட்டிருக்கிறேன் . இப்போது நான் அவங்களைத் தேடி வருவதை அவங்க எப்படி எடுத்துக்கு வாங்களோ தெரியலையே என்ற தயக்க உணர்வுடனேயே வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தார் வாசுதேவன். ஆனால் அவர் எதிர்பார்த்ததுக்கு மாறாக, முகம் மலர ' வாங்க,வாங்க ' என்று வரவேற்றாள் கற்பகம்.
"வாங்க வாங்கக் கடன்தான் !" என்று சொல்லிச்சிரித்தார் வாசுதேவன்.
சிறிது நேரத்திலேயே சுடச்சுட ரவா தோசையும் சட்னியும் அவர் முன்பு வந்தது. " வர்றேன்னு முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் விருந்தே ரெடி பண்ணியிருப்பேன் " என்றாள் கற்பகம் 
" நீங்க ரொம்பவும் ரிசர்வ்ட் டைப்ன்னு கேள்விப் பட்டிருக்கிறேன். நான் வீட்டுக்கு வர்றதை நீங்க எப்படி எடுத்துப்பீங்களோனு பயந்துகிட்டே தான்  வந்தேன் " என்று சொல்லி சிரித்தார் வாசுதேவன்.
"ஸார், நான் யார்கிட்டேயும் அதிகம் பேசறது கிடையாதே தவிர உங்களை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன், நீங்க என்னைக் கவனிக்கா விட்டாலும்கூட. ஆயிரம் பேருக்கு மேலே வேலை பார்க்கிற இடத்தில் இதெல்லாம் சர்வ சாதாரண விஷயம். எப்படி வேணும்னாலும் வாழலாம்னு ஒரு க்ரூப். இப்படித்தான் வாழணும்னு ஒரு க்ரூப் இந்த உலகத்தில் இருக்கு. நான் ரெண்டாவது க்ரூபில் ஆயுள் மெம்பர். நம்மோட பணத் தேவைக்கு ஆபீசுக்கு வேலை பார்க்க வருகிறோம். சம்பளம் வாங்கிற இடத்தில் விசுவாசமா நடந்துக்கணும். வேலை பார்க்க வந்த இடத்தில் வேலையை மட்டும் நாமப்  பார்த்துட்டுப் போகணும்னு என்னை நானே ட்ரைன்  அப்   பண்ணி வச்சிருக்கிறேன். அந்த வட்டத்தை விட்டு என்னால் வெளியில் வரமுடியாது .அவரவர் செய்வது அவரவருக்கு சரின்னு படுது . அப்படி தோணப் போய் தானே   அதை நாம் திரும்பத் திரும்ப செய்றோம் "
"நல்ல பாலிஷிதான் . எனக்கு ரிடைர்மென்ட் லைப் ரொம்ப போரடிக்குது  நீங்க எப்படி அதை ஹாண்டில் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்கத் தான் நான் உங்களைத் தேடி வந்தேன் "
" ரொம்ப சந்தோசமா இருக்கிறேன் "
" அந்த ரகசியந்தான் என்னன்னு எனக்கு சொல்லுங்களேன் "
" நீங்க எதை நினைச்சு வருத்தப் படறீங்கனு முதல்லே சொல்லுங்க "
" கிட்டத் தட்ட மிஷின் மாதிரி ஓடியோடி உழைச்சிட்டு இப்போ ஒரே இடத்தில் நிற்கிறது கஷ்டமா இருக்கு "
" அப்புறம் ? "
" வீட்டில் பேச்சுத் துணைக்கு ஆளில்லே "
" அப்புறம் ? "
" மாசாமாசம் நாற்பதாயிரம் ரூபா சம்பளத்தை சுளையா வாங்கிட்டு இப்போ பென்சன் பணமா வெறும் பத்தாயிரம் வாங்கப்போறத  நினைச்சா ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு "
" அப்புறம் ? "
சிறிது நேரம் யோசித்த வாசுதேவன், " அப்புறம் வேறே எதுவும் இல்லே " என்றார் சோகம் நிறைந்த குரலில். 
"மிஷின் மாதிரி ஓடியோடி உழைச்சிட்டு இப்போ ஒரே இடத்தில் நிற்கிறது  கஷ்டமா இருந்தா, தினமும் எங்காவது போயிட்டு வாங்க "
" தினமும் எங்கே போக முடியும் ? "
" அடடா,இதெல்லாம் ஒரு கேள்வியா? இந்த சென்னையில் போக இடமா இல்லை ? ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பஸ் பாஸ் வாங்கிட்டு ஏதாவது ஒரு பஸ்ஸில் ஏறி உட்காருங்க. அது எங்கே போய் நிற்க்கிறதோ அந்த இடத்தில் இறங்கி வேறொரு பஸ் பிடிச்சு கோயில் குளம்னு சுத்திப் பார்த்துட்டு ராத்திரி வீடு திரும்பிடுங்க. மறக்காமே கையில் பிஸ்கட் பழம் வாட்டர் பாட்டில் வச்சுக்கோங்க. முடிஞ்சா ஒரு பாக்ஸில் சாப்பாடும் கையில் ஸ்பூனும் வச்சுக்கோங்க . பஸ்ஸில் ட்ராவல் பண்ணிட்டே சாப்பிடலாம். பேச்சுத் துணைக்கு ஆள் இல்லைன்னு வருத்தப் படறீங்க. ஏதாவது அநாதை இல்லம், முதியோர் இல்லம்னு போய் அங்குள்ளவங்க கிட்டே ஆறுதலா நாலு வார்த்தை பேசுவாங்க அந்த மாதிரி ஆறுதல் வார்த்தைக்காக நிறைய பேர் தவம் கிடக்கிறாங்க . நீங்க பேசறதைக் கேட்டு அவங்க சந்தோசப் படுவாங்க. அந்த சந்தோசம் உங்களையும் தொத்திக்கும். மாதாமாதம் கைக்கு வரப் போற பணத்தைப் பத்திக் கவலைப் படுறீங்க . ஸார், நீங்க கொஞ்சம் யோசனைப் பண்ணிப் பாருங்க, நாம சர்வீஸில் இருந்த காலத்திலேயும் 'கடன் பிடித்தம், டாக்ஸ் அது இது' ன்னு  போக, இப்போ பென்சனா வரப் போற பணம்தான் அப்போ சம்பளமா வாங்கிட்டு வந்து சந்தோசமா செலவு செய்தோம்  . அப்போ ஓடியோடி உழைச்சு வேலை செய்தால்தான் பணம் கைக்கு வரும் இப்போ ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடாமே, வீட்டில் உட்கார்ந்த இடத்திலேயே சுளையா ஒரு அமௌண்டை கையில் வாங்கப் போறோமே அதை நினைச்சு சந்தோசப் படணும். காலமெல்லாம் கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லணும் "
"மேடம், நீங்க கடைசியா சொன்னீங்க பாருங்க,அது எவ்வளவு அனுபவ பூர்வமான வார்த்தை ! " என்று வியந்து போனார் வாசுதேவன்.
" ஸார், நம்ம வீடு என்பது வெறும் நாலு சுவர்தான். நம்ம இதயம்கிறது வெறும் கைப்பிடி அளவு தான். இந்த சின்ன இடங்களில் தேடிக் கண்டு பிடிக்க முடியாத சந்தோசத்தையா  இவ்வளவு பரந்த உலகத்தில் நாம்   தேடிக் கண்டு பிடிக்க முடியும் ? எப்பவுமே வாழ்க்கைங்கிறது அதில் சந்தோசங்கிறது வெளியில் இல்லை ஸார். நம்மோட எண்ணங்களில்தான் இருக்கு.எண்ணங்களை  சீராக்கிட்டோம்னா வாழ்க்கை யோட்டம் ரொம்ப சீராகிடும் சார் "
 இதைக் கேட்டு அமைதியாக இருந்தார் வாசுதேவன்.
" ஸார், ஏதாவது   தப்பா சொல்லிட்டேனா ? "
"என்னம்மா இப்படிக் கேட்டுட்டீங்க. உங்களோட  வார்த்தைகள் எனக்கு  ரொம்பவும்  ஆறுதலா இருக்கு. இந்த மூணு வாரமா என்னையும் வேதனைப் படுத்திகிட்டு வீட்டிலுள்ள மத்தவங்களையும் படுத்திகிட்டு இருந்தேன் . இப்போ வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா ஆயிரம் ரூபா கொடுத்து பஸ் பாஸ் வாங்கிடறேன். உங்களோட பேசினது டானிக் சாப்பிட்ட மாதிரி இருக்கு. நான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இந்த முருகன் கோவிலுக்கு வருவேன் . அப்படியே வந்து உங்களைப் பார்க்கலாம்தானே. அதில் உங்களுக்கு எந்த அப்ஜெக்சனும் இல்லே தானே ?  "
" என்ன ஸார் இப்படிக் கேட்டுட்டீங்க ? அது எனக்குப் ப்ளெசர் " என்று சிரித்துக் கொண்டே கற்பகம் சொல்ல, " நன்றி " என்றபடி வெளியேறினார் வாசுதேவன்.
இப்போது அவர் மனதில் வருத்தமோ பாரமோ இல்லை. இறகுகள் போல இலேசாகி வானவெளியில் பறப்பதைப் போன்ற உணர்வை அவருக்குள் ஏற்படுத்தியிருந்தது  கற்பகத்தின் சந்திப்பு. 
     

Sunday, August 25, 2013

CHOICE IS YOURS !!



Dear viewers, it may kindly be noted, it has been proposed to publish nearly 200 numbers of  3 letters puzzles and 200 number of  4 letters  puzzles on Sundays ( A WEEK / A PUZZLE ) in my blog " puzzles-timepass.blogspot.com ".

HOW DO YOU FEEL AND WHAT IS YOUR CHOICE = 

A DAY / A PUZZLE or

A PUZZLE ON EVERY SUNDAY  or

5  OR 10 PUZZLES ON SUNDAYS.

LET ME KNOW YOUR CHOICE.

Saturday, August 24, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 83 )

                                                 விதை 

"மேம், அடுத்த வார மீட்டிங்கில் சப்மிட் பண்ண ஒரு அஜந்தா தயார் பண்ண சொல்லி " பாஸ் " சொல்லியிருந்தார். அது கம்ப்ளீட் ஆகலே. ஆபீஸ் அவர்ஸ் முடியற நேரமாச்சு. நாளைக்கு வந்து முடிச்சுத்   தர்றேன்னு மானேஜர் கிட்டே சொன்னேன் .' இல்லே. நீ  இன்றைக்கே முடிச்சுட்டுப் போ'ன்னு மேனேஜர் சொல்றார். மேம், எனக்காக வந்து நீங்க அவர்கிட்டே பேச முடியுமா ? என்று  வார்த்தைகளை மென்று முழுங்கிய படி கேட்டாள் உஷா.
" நோ. உஷா. இந்தப் பழக்கத்தை விட்டுடு . வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகலே . அதற்குள் 'அதை செய்ய மாட்டேன் , இதை செய்ய மாட்டேன்'னு நீ சொல்றது தப்பு. அதை விட தப்பு, உன்னோட இயலாமைக்கு ரெகமெண்ட் பண்ண நீ  என்னைக் கூப்பிடுவது " என்று சொன்னாள்  பத்மினி 
"மேம், அவுட் ஆப் ஆபீஸ் அவர்ஸ் வேலை செய்ய  முடியாதுன்னு நான் சொல்லலே. அந்த வொர்க் முடிய குறைஞ்சது மூன்று மணி நேரம் ஆகும். இப்பவே மணி 6.30. நீங்க எல்லாரும் கிளம்பி போயிடுவீங்க. நான் மட்டும் தனியா ...எப்படி மேம் ?"
"உனக்கு அந்த கவலையே வேண்டாம். நம்ம ஆபீஸ்  ஸ்டாப், அதுவும் ஜென்ட்சில் யாராவது ஒருத்தர் உன் கூடவே இருந்து உன்னைக் கவனிச்சுகுவாங்க. நீ வொர்க்கை முடிச்சுக் கொடுத்துட்டுப் போ . எனக்கு அவசர வேலை ஒன்னு இருக்கு. பெர்மிசனில் போக நினைச்சேன். இன்னிக்கு சந்தர்ப்ப சூழ்நிலை சரியில்லைன்னு பெர்மிசன் கேட்கலே. நீ வொர்க்கை முடிச்சுட்டுப் போ. நான் இப்ப கிளம்பறேன் " என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் பத்மினி.
" ராட்சஷி " என்று அவளை மனதுக்குள் திட்டியபடியே திரும்பவும் தனது இடத்துக்கு வந்து கம்ப்யூட்டரை ஓபன் பண்ணினாள் உஷா. அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளையும் ராகவனையும் தவிர மற்ற எல்லாருமே அங்கிருந்து கிளம்பிப் போனார்கள்  
வேலைப்பளுவில் வீடு மறந்து போயிருந்தாலும் அவ்வப்போது ஒரு பய உணர்வு அவளிடம் 'நீ தனியா இருக்கிறே . துணைக்கு ஒருத்தன் இருக்கிறான் . அவன் என்ன மாதிரி ஆளுன்னு உனக்குத் தெரியாது. நீ ஜாக்கிரதையா இரு ' என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. சிறிது நேரத்துக்கு ஒருமுறை அவளிருக்கும் இடத்துக்கு வந்து எட்டிப் பார்ப்பதும் திரும்ப தன்னுடைய இடத்துக்குப் போவதுமாக இருந்த ராகவனைப் பார்த்து பயம் இன்னும் அதிகரித்தது .
அடுத்த முறை அவன் எட்டிப் பார்த்தபோது " என்ன ஸார் வேணும் ? "ன்னு  எரிச்சலுடன் கேட்டாள் உஷா 
" ஒண்ணுமில்லே . தனியா இருக்கிறதை நினைச்சு நீங்க பீல் பண்ணக் கூடாதேன்னுதான் நான் வந்து வந்து பார்த்துட்டுப் போறேன் " என்று ராகவன் சொன்னதைக் கேட்டு " ச்சே " என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் உஷா 
பாஸ் கேட்ட விவரங்களைத் தயார் செய்து விட்டு அந்த பைலை அவர் மேஜை மீது வைக்கும்போது மணி 10.20. இந்நேரம் பஸ் கிடைக்காது. தனியாக ஆட்டோவில் வருவதை அப்பா விரும்ப மாட்டார். என்ன செய்வது என்ற பயம் பிடித்துக் கொண்டது . இருந்தும் பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ராகவனிடம் " நான் கிளம்பறேன் ஸார் " என்றாள்.
" இதோ ஒரு நிமிஷம், நானும் வந்துட்டேன் " என்றபடி கிளம்பி ஓடி வந்தான் ராகவன்.
" ஸார், ஏற்கனவே லேட் . நான் மெயின் ரோட் போய் அங்கிருந்து பஸ் பிடிச்சு அங்கிருந்து வீட்டுக்குப் போயாகணும்  " என்று சலிப்புடன் கூறினாள் உஷா  
" பஸ்ஸா ? நைட் அவர்ஸில் உங்களுக்கு அந்த பிரச்சினை வரக்கூடாது ன்னு  தானே என்னை உங்களுக்கு துணையா வச்சிட்டு மற்ற எல்லாரும் கிளம்பிப் போயிருக்காங்க, வாங்க. டூ வீலரில் உட்கார்ந்து வந்து பழக்கம் உண்டா ? உட்காருங்க. உங்க வீட்டில் கொண்டுபோய் பத்திரமா சேர்த்து விடுவேன் "
வேண்டாம் என்று சொல்ல நினைத்தாலும், ' இது பெட்டர் ' என்று மனம் சொல்லியதால் ஏறி உட்கார்ந்தாள். அவளை வீட்டில் கொண்டு போய் சேர்த்து விட்டு , அவள் வீட்டுக்குள் நுழைந்ததைப் பார்த்தபின்புதான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்  ராகவன்.
மறுநாள் ஆபீசுக்குள் நுழைந்ததுமே ராகவன் இருக்குமிடத்துக்குச் சென்ற உஷா " ரொம்ப தேங்க்ஸ் ஸார். நேத்து எனக்கிருந்த டென்சனில் உங்களை வீட்டுக்குள் கூப்பிடக்கூடத் தோணலே  " என்றாள்.
" இதெல்லாம் ஒரு மேட்டரா ? " என்று சர்வ சாதாரணமாக் கூறினான் ராகவன்.
வேலையில் மூழ்கியிருந்த உஷாவின் தோளைத் தொட்டு " அப்பப்போ அக்கம்பக்கம் என்ன நடக்குன்னு பார்க்கணும். நான் இங்கே வந்து நின்னு சரியாக மூணு நிமிஷம் ஓடிப் போச்சு. பக்கத்தில் ஆள் நிற்பதுகூடத் தெரியாமல் அப்படி என்னம்மா வேலை? நேற்று வொர்க் முடிஞ்சுது தானே?   " என்றாள் பத்மினி 
" ஸாரி மேடம். நீங்க வந்ததை நான் கவனிக்கலே. நேற்று வொர்க்கை முடிச்சு பேப்பர்ஸ் எல்லாத்தையும் பாஸ் ரூமில் வச்சிட்டுதான் நான் கிளம்பிப் போனேன். வீடு போய்ச் சேரும் வரை எனக்கு உயிர் கையில் இல்லை "
" ஏன் ? "
" இதுக்கு முன்னே ஒரு கம்பெனியில் வொர்க் பண்ணினேன் . கரெக்டா ஒரேஒரு வாரம்தான் அங்கே  வொர்க் பண்ணினேன் . அதற்கான சம்பளம் கூட வாங்கலே. அங்கிருந்த மேனேஜர் சரியான தெருப் பொறுக்கி. அவனைப் பத்தி சரியாக சொல்லணும்னா, அவன் " மகளிர் மட்டும் " சினிமாவில் வர்ற நாசர் மாதியான ஆளு . அவன் இளிப்பு பிடிக்காமே வேலையை ரிஸைன் பண்ணினேன். காண்ட்ராக்ட் அதுஇதுன்னு பயம் காட்டினான் . " நீ வாயைத் திறந்தால் நான் போலீசுக்குப் போவேன்டா ராஸ்கல்"ன்னு பயம் காட்டினேன் . அதன் பிறகுதான் அங்கிருந்து என்னை ரெலீவ் பண்ணினான். இங்கே வந்து இன்னும் பத்துநாள் கூட ஆகலே. அதற்குள் தனியாக லேட் அவர்ஸ் வொர்க் பண்றது பத்தி பயந்து போயிட்டேன் " என்று படபடப்பாக சொன்னாள் உஷா 
இதைக் கேட்டு வாய் விட்டு சத்தமாக சிரித்தாள் பத்மினி 
" என் வேதனை உங்களுக்கு சிரிப்பா இருக்குதா மேம் ? "
" உன் பயம் நியாயமானது. ஆனால் இந்த ஆபீஸைப் பொறுத்தவரை அந்த பயம் அர்த்தமில்லாதது   "
" என்ன மேம் சொல்றீங்க ? எனக்குப் புரியலே ? "
" இந்த ஆபீசில் நான் வேலைக்கு ஜாயின் பண்ணின புதிதில் இதே மாதிரி வொர்க் பண்ண வேண்டிய சூழ்நிலை நிறைய முறை வந்திருக்குது. நான் பயந்துகிட்டேதான் வேலையை முடிச்சு கொடுத்துட்டுப் போவேன். இதை பத்தி ஒரு தடவை என்னோட சீனியர் கிட்டே சொன்னப்போ  அவர் சொன்ன விஷயம் என்னை ஆச்சரியப்பட வச்சுது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இங்கு நடக்கும் சம்பவங்களை கவனித்துப் பார்க்கும் போது தான் அவர் சொன்னது ரொம்ப சரின்னு தோணுச்சுது "
"அது என்ன மேம் ? " 
" இந்த ஆபீஸ் பார்ம் ஆகி 49 வருஷம் ஆறது. அடுத்த வருஷம் நாம 50-ம் ஆண்டு விழா கொண்டாடப் போறோம். இந்த ஆபீஸ் தொடங்கி முதல் பத்து வருஷங்கள் இங்கே ஜென்ட்ஸ் மட்டும்தான் வொர்க் பண்ணிட்டு இருந்திருக்கிறாங்க. முதல் முறையா ஒரு லேடியை அப்பாயிண்ட் பண்ணுவது பற்றி பேச்சு வந்திருக்குது. அதைக் கேட்டு அப்போ இருந்தவங்க ரொம்ப சந்தோசப் பட்டாங்களாம் . அப்போ இருந்த பாஸ் ஒரு மீட்டிங் போட்டு '"நம்ம ஆபீசில் புதுசா ஒரு லேடியை அப்பாயிண்ட் பண்ணப் போறோம். அது சரிப்பட்டு வந்தால்  மேற்கொண்டு நிறைய பேரை வேலைக்கு சேர்க்கும் எண்ணம் இருக்கிறது. புதுசா ஒரு பொண்ணு வர்றதால் உங்க எண்ணம் எப்படி எப்படியோ போகும் . நீங்க அவங்களோட பேசலாம் பழகலாம். அதுக்கு உங்களுக்கு  எந்தவிதத்  தடையும் கிடையாது.  சில விசயங்களை வெறும்  சட்டத்தினாலோ தண்டனையினாலோ சரி பண்ண முடியாது. மனம் ... மனக் கட்டுப்பாடு ... மனப் பக்குவத்தினால் மட்டுமே சீர்படுத்த முடியும். வரப் போகிற பெண்ணிடம் விஷமத்தனம் சில்மிஷம் பண்ணனும்னு உங்களுக்குத் தோணுச்சுன்னா ஒரேஒரு நிமிஷம் உங்களை நீங்களே கேட்டுப் பாருங்க, இந்த மாதிரி சம்பவம் நம்ம வீட்டுப் பெண்ணுக்கு நடந்தால் அதைத் தாங்கும் சக்தி நமக்கு உண்டான்னு.' சக்தி உண்டு , நாம செய்யறது சரின்னு உங்க மனச்சாட்சி சொன்னால் அதன் பிறகு நீங்கள் அந்தப் பெண்ணிடம்  எப்படி வேணும்னா நடந்துக்கலாம். வேலைக்கு வர்ற லேடீஸ், சோசியல் சர்வீஸ் பண்ணவோ டைம் பாஸுக்கு வர்றதில்லே. அவங்கவங்க குடும்ப சூழ்நிலை , வயிற்றுப் பிழைப்புக்காக வேலைக்கு வர்றாங்க.சமுதாயத்தில் கௌரவமாக வாழணும்னு நினைச்சுதான் வீட்டை விட்டு வெளியில் வேலைக்குன்னு வர்றாங்க.  அதைப் புரிஞ்சு கிட்டு அவங்களை கௌரவமா நடத்தப் பழகிக்கோங்க"ன்னு சொல்லி அட்வைஸ் பண்ணியிருக்கிறார். அவர் விதைச்ச விதை எல்லார் மனசிலும் நல்லதொரு மரமா வளர்ந்துட்டுது.  இவர்களுக்குப் பின்னாலே வந்தவங்களுக்கு 'நீங்க இப்படி இப்படி இருக்கணும்'னு யாரும் அட்வைஸ் பண்ணலே.  தன்னோட சீனியர்ஸ், மத்தவங்ககிட்டே நடந்துக்கறதைப் பார்த்து புதுசா வந்தவங்களும் நடக்கக் கத்துக் கிட்டாங்க. இங்கே லேடீஸ்சை ஜென்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க. நம்ம எல்லாருக்கும் ஒரு பட்டப்பேர் வச்சிருப்பாங்க. நாங்களும் அவங்களை கிண்டல் பண்ணுவோம்.  இங்கே சில லவ் மேரஜ்  ஜோடிகூட உண்டு . அது அவங்க பெர்சனல் மேட்டர் . இங்கே உள்ள  ஜென்ட்சை நம்பி வெளியூருக்கு அபீசியல் டூர் கூட போவோம். அது எங்க எல்லார் வீட்டுக்கும் தெரிஞ்ச விஷயந்தான். இங்கே  'சம்திங் ' வாங்கிறவங்க உண்டு. அடாவடிப் பேர்வழி உண்டு. வெளியில் யார்யார் எப்படியோ. அதெல்லாம் எனக்குத் தெரியாது .ஆனா இந்த ஆபீசில் பெண்களை கீழ்த்தரமா நடத்தறவங்க யாரும் கிடையாது. லேட் அவர்ஸில் வொர்க் பண்ற சந்தர்ப்பம் வந்தால் நமக்குத் துணையா ஒரு ஜென்ட்ஸ் இருப்பார் . நம்மள கொண்டுபோய் நம்ம வீட்டில் விட்டுவிட்டுத்தான் ,அவர் தன்னோட வீட்டுக்குப் போவார். நீ தனியாக இருக்கப்  பயந்ததை நேற்றே நான் புரிஞ்சுகிட்டேன். இந்த விஷயங்களை நேற்றே சொல்லும் அளவுக்கு எனக்கு நேரமில்லாதபடி எனக்கொரு அவசர வேலை. விட்டாப் போதும்னு ஓடிட்டேன் . அதான் இன்றைக்கு வந்ததுமே முதல் வேலையா இதை சொல்றேன் . இனிமேல் பயப்படாமல் வேலையைப்  பாரு " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனாள் பத்மினி 
" நன்றி " என்று மானசீகமாக நன்றி சொன்னாள் உஷா, முகந் தெரியாத  " அந்த " யாரோவொரு பாஸுக்கு.

Friday, August 16, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 82 )

                        காசு! பணம் !!  துட்டு !!

சுபா, சாந்தி இருவரையும் கண்டதுமே வாசலில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டி கார்ட் விரைப்பாக நின்று சல்யூட் செய்தான் 
" நாங்க " உங்களுடன் " பத்திரிக்கையிலிருந்து வருகிறோம் " என்று சுபா சொல்லி முடிக்கும் முன்பாகவே, " தெரியும் மேடம். நீங்க வந்ததும் உள்ளே விடச்சொல்லி அம்மா சொல்லியிருக்காங்க " என்ற செக்யூரிட்டி 
மிகப் பணிவாக வாசல் கதவைத் திறந்து விட்டான்.
இவர்களைக் கண்டதுமே பணியாள் ஒருவர் ஓடி வந்து " வாங்கம்மா, உள்ளே வந்து உட்காருங்க. அம்மா பூஜையில் இருக்காங்க. வெயிட் பண்ண சொன்னாங்க. என்ன சாப்பிடறீங்க, கூல் அல்லது ஹாட்?"  என்று  
பணிவாக உபசரித்தான் 
" நோ .. தேங்க்ஸ் " என்றனர் இருவரும் ஒரே குரலில் 
பணியாள் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததுமே " என்ன சாந்தி, அப்படியே மலைச்சுப் போய்ப் பார்க்கிறே ? " என்றாள் சுபா 
" மேடம், இது வீடா இல்லாட்டி அரண்மனையா ? நான் குடியிருக்கிற பிளாட், ப்ளாக் எல்லாத்தையும் அப்படியே கொண்டு வந்து இந்த வீட்டில் வச்சுடலாம் போலிருக்கு. இவ்வளவு காலி இடம் ! " என்று வியந்தவள், " என்ன ஒரு ரத்த்னக் கம்பள வரவேற்பு ! " என்றாள் 
"இந்த மாதிரி  வரவேற்பு எல்லா இடத்திலும் கிடைக்கும்னு நீ  எதிர் பார்க்கக் கூடாது. சில வீடுகளில் நாயை விரட்டுற மாதிரி விரட்டி அடிப்பாங்க.  நாங்க அதை ரொம்பவும்  பாலிஷா "காக்கையை  விரட்டுற மாதிரி விரட்டினாங்கன்னு  சொல்லிக்குவோம் " என்று சொல்லி சிரித்த சுபா, "நீ புதுசு.போகப் போக ஒவ்வொண்ணா தெரிஞ்சுக்கோ. நாம எப்பவும் நம்ம வேலையில்தான் குறியா இருக்கணும். தீயா வேலை செய்யணும் சாந்தி "  என்று சொல்லிச் சிரித்தாள் சுபா 
" மேடம், எனக்கு கடவுள் மேலே கோபம் கோபமா வருது "
" ஏன் கண்ணு ? " 
"ஒரு சிலருக்கு இப்படியொரு அரண்மனை மாதிரி வீட்டைக்  கொடுத்து, அதில் உயிரே இல்லாத பர்நிசர்ஸ், அலங்கார சாமான்களை வைக்க இடம் கொடுத்து விட்டு , உயிருள்ள ஒரு சில மனுஷங்களுக்கு ஒதுங்கக் கூட இடமில்லாத நிலைமையில் வச்சிருக்கிறாரே  " என்று சோகமாகக் கூறினாள்.
" அடடா, என்னவொரு இரக்க குணம்  ! கடவுளா வந்து இவங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். இவங்க உழைச்சாங்க. அந்த காசை உருப்படியா சேர்த்து வச்சாங்க.."
" அப்போ பிளாட் பார்மில் தங்கியிருக்கிறவங்க எல்லாரும் உழைக்காத சோம்பேறிகளா ? "
" இதோ பாரு சாந்தி, நீ சின்னப் பொண்ணு . காலேஜ் வாடையே இன்னும் உன்னை விட்டுப் போகலே. இள ரத்தம். அதான் இப்படிப் பேசறே ? சில விஷயங்களைப் பத்தி நாம விவாதிக்கத்தான் முடியுமே தவிர எதையும் மாற்றி அமைக்க முடியாது . பூமியிலே ஒரு பகுதி எப்பவும் குளிராவும், சில பகுதி எப்பவும் நெருப்பாவும் ஏன் இருக்குன்னு நாம யாரையாவது கேள்வி கேட்டுட்டா இருக்கிறோம் ? அது உலக இயற்கைன்னு தானே நாம நினைக்கிறோம் . அது மாதிரி இந்த  ' இருக்கிறவன் இல்லாதவன் ' விசயத்தையும் அவங்கவங்க தலைவிதின்னு நினைச்சுக்கணும் " என்று சுபா சொல்லிக் கொண்டிருக்கும் போது, " அம்மா உங்களை உள்ளே  வர சொன்னாங்க " என்று வேலைக்காரப் பெண் வந்து அழைத்தாள் 
" உள்ளே வந்து 'கம்'ன்னு உட்கார்ந்து, நான் இண்டெர்வியு பண்றதை வாட்ச் பண்ணு . இந்த அம்மா சினி பீல்டில் கொடிகட்டிப் பறந்து கொண்டு இருந்த காலத்தில் நீ பிறந்தே இருக்கமாட்டே . உன்னோட பிள்ளையார் சுழியே ஒரு வயதான அம்மாகிட்டே தான் " என்று சாந்தியின் காதோரம் கிசுகிசுத்தாள் சுபா  
" மேம், ஓல்ட் இஸ் கோல்டு தானே "
" நீ பொளைச்சுக்குவே " என்ற சுபா, ஒரு காலத்தில் பிரபலமாயிருந்த சினிமா நடிகை ஸ்ரீ யை  பேட்டி எடுக்கத் தயாரானாள் 
இருவரையும் முகம் மலர வரவேற்ற ஸ்ரீ, " உங்களை ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேன் போலிருக்கு " என்றாள் 
" எங்க கேரீர்லே இதெல்லாம் சகஜம், மேம் . மேம், நாங்க " உங்களுடன் " மாகசின்  ரிப்போர்ட்டர்ஸ் . சில VIP ஐ அப்ரோச் அவங்க ஒபினியன் கேட்டு ஒரு ஆர்டிகிள் எழுதணும். கேள்வி என்னன்னா, கடவுள் உங்க முன்னே தோன்றி, அப்படி அவர் வருவாரா என்பது வேறே விஷயம், அவர் வந்துட்டார்னே  ஒருபேச்சுக்கு வச்சுக்குவோம் , கடவுள் உங்க முன்னாலே வந்து நின்னு கிட்டு  கடந்த கால நிகழ்வுகளில் ஒன்றை உனக்குத் திருப்பித் தர்றேன். உனக்கு என்ன வேணும்னு கேட்டால், அவர் கிட்டே நீங்க என்ன கேட்க ஆசைப் படுவீங்க ? "என்று சொல்லிவிட்டு ஸ்ரீயின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். 
அதைக் கேட்டு வாய் விட்டு சிரித்த ஸ்ரீ, "  நான் கஷ்டப் பட்ட நாட்களைத் திரும்பக் கேட்பேன்  " என்றாள் 
"என்ன? ' நான் திரும்பவும் ஒரு ஹீரோயினா ஒரு ரவுண்ட் வரணும்னு கேட்பேன்'னு நீங்க சொல்வீங்கன்னுதான்  நினைச்சோம். எதனாலே அந்த நாட்களைக் கேட்க நினைக்கிறீங்க  ? "
" எங்க அப்பாவுக்கு நாங்க ஆறு குழந்தைங்க. அப்பாவோட வருமானம் தவிர வீட்டில் எந்த வசதியும் கிடையாது. எங்க எல்லோருக்கும் இடையில் ஒரே ஒரு வயது தான் இடைவெளி. மூத்த அக்காவுக்கு எடுக்கும் ட்ரெஸ் , அடுத்த ஒன்றிரண்டு மாதத்தில் அடுத்த அக்காவுக்கு வரும். இப்படியே ஆறுபேரும் அந்த டிரஸ் கிழியும் வரை போடுவோம். வருடத்துக்கு ஒரு முறைதான் எல்லாருக்கும் புதுத் துணி. அதுவும் அது தீபாவளி என்பதால் தான் . அன்றுதான் வடை செய்வாங்க. நாங்க அதற்க் கெல்லாம் ஆசைப்பட்டது கிடையாது. பட்டாசு வெடிக்க ஆசைப் படுவோம். குழந்தைங்க ஆசைப் படறாங்களேன்னு அப்பா கொஞ்சூண்டு பட்டாசு வாங்கி வந்து எங்களுக்குக் குடுத்துட்டு,அம்மாவிடம் நிறையவே வாங்கிக் கட்டிக்குவார். காசை ஏன் இப்படிக் கரியாக்கணும்னு அம்மா சண்டை போடுவாங்க. வாங்கி வந்த பட்டாசை ஆறு பங்காக பிரித்து அப்பா தருவார். ஒருத்தர் தூங்கும் போது , மத்தவங்க, தன்னோட பங்கை சுட்டுடுவாங்களோனு பயந்து போய் நாங்க யாருமே தூங்க மாட்டோம் . மாத சம்பளம் கைக்கு வருகிற அந்த ஒரே ஒரு நாளில் மட்டும் அப்பா ஏதாவது தின்பண்டம் வாங்கி வருவார். அந்த ஒரே ஒரு நாளுக்காக மாதம் முழுக்க காத்திருப்போம். எங்களோட ஒரே ஒரு பொழுது போக்கு கோயிலுக்குப் போறதுதான், அதுகூட அங்கே போக எந்தக் கட்டணமும் கிடையாது என்பதால்தான். வீட்டு வறுமை அக்காவை சினிமாவில் கொண்டுபோய் சேர்த்தது . அப்புறம் விருப்பப் பட்டே நான்  சினி பீல்டுக்கு வந்தேன். நாங்க சம்பாதிக்க ஆரம்பிக்கும் போதே, எங்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நடுவில் பெரிய இடைவெளி வந்து   விட்டது. எப்போதும் ஒரே பரபரப்பு. ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க முடியாதபடி ஒவ்வொருவர் ஒவ்வொரு ஊரில் ஷூட்டிங்கில் பிசியாக இருப்போம். விதம்விதமான உணவு, உடை,ஊர் சுற்றுவது எல்லாமே ரொம்ப போரடித்து விட்டது.அவரவர் தொழில் , குடும்பம் அதுஇதுன்னு மூலைக்கு ஒருவராக பிரிந்து வந்தாச்சு.எங்ககுடும்பத்தைவிட்டு நான் தான் பிரிந்தே னென்றால், என்னுடைய குடும்பமும் படிப்பு, பிசினெஸ் அதுஇதுன்னு பிரிந்துதான் வாழ்கிறோம் . என்னுடைய சிறு வயதில் பணம் இல்லை. உறவுகள், அது தரக் கூடிய ஆனந்தம்  இருந்தது . இப்போ பணம் ... பணம் .. பணம் மட்டுந்தான் இருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன், கடவுளிடம் நான் கஷ்டதிலிருந்த, அந்த சிறு வயது  நாட்களைக் கேட்பேன்னு சொல்றேன் "  என்று சொல்லி முடித்தாள் ஸ்ரீ.
பேட்டியை முடித்துக் கொண்டு இருவரும் வெளியேறினர். இருவருக்கும் நடுவில் மிகப் பெரிய மௌன இடைவெளி. அதைக் கலைப்பதற்காக " ஏன் கண்ணு, எந்தப் பட்டணம் பறிபோச்சு?  என்ன ஒரு கவலை ? " என்றாள் சுபா குறும்பாக 
" மேம், சினிமா இல்லாட்டா அரசியலில் சேர்ந்து நானும் கோடிகோடியா சம்பாதிக்கணும். எல்லாத்தையும் அனுபவிக்கணும். பிறகு, வயதான காலத்தில் " ஒரு ரிப்போர்டராக அலைந்த நாட்கள் எனக்கு வேணும்" ன்னு  ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி குடுக்கணும் " என்றாள் சாந்தி சீரியஸாக 
" அப்புறம் ? "
" மேம். பணம் இருக்கிறதையே ஒரு பாரம் போலவும், அதை சுமக்க    இவங்க  கஷ்டப் படற  மாதிரியும் பேசுறாங்களே, பாரத்தை இறக்கி நம்ம கிட்டே குடுத்துட்டா அதை நாம சந்தோசமா சுமப்போம்தானே ? " என்று சாந்தி கேட்க , " இதுதான் இள வயசுக் குறும்புங்கிறது " என்று சொல்லி அவள் தலையில் செல்லமாக குட்டினாள்  சுபா 

Sunday, August 11, 2013

DEAR VIEWERS

TO VIEW PUZZLES, KINDLY STEP IN TO
" puzzles-timepass.blogspot.com "

Saturday, August 10, 2013

ஒன்பது செய்யும் ஜாலம்

HAAI KUTTEES DEAR VIEWERS,

சென்ற வார புதிருக்கான விடை : 


 9 காட்டும் விந்தையைக் கண்டு   ரசிக்கலாம்.  1 முதல் 9 வரையிலான எண்களை எழுதி, அதை வளையல் வடிவில் ரௌண்டாக வளைத்தாலோ அல்லது  ஒரு வட்டத்தை சுற்றி 1 முதல் 9 வரையிலான எண்களை எழுதினாலோ  எண் 8 க்கும் 1 க்கும் நடுவில் 9 ம்  எண் வரும்தானே. அதே போல  எண் 8 க்கும் 1 க்கும் நடுவில் 9 ம்  எண்ணின் அணிவகுப்பு எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்.

இதே போல நீங்கள் 9 ம் வாய்ப்பாடு ( 9th  TABLE  ) எழுதி, அதாவது 1 x  9  =  9
                                                                                                                  2  x 9  = 18 என்று வரிசையாக எழுதிக் கொண்டு ,அந்த எண்களைக் கூட்டி பார்த்தால் அதன் மதிப்பு 9 தான் வரும். அதாவது 18 என்பதை 1 + 8 என்றும், 27 என்பதை 2 + 7 என்றும் கூட்டிப் பார்த்தோ மானால் அதன் மதிப்பு 9 தான் வரும் . வேறு எந்த எண்ணும் இது போன்று வராது 


 9
 8
 7
 6 
 5 
 4
 3
 2
 1



10
 9 
 8 
 7 
 6 
 5
 4
 3 
 2 
 1 
A 
B 








 9 
X 
9
 =








 8 
 1
  9
 9







 9
 9 
X
9
 =







 8 
 9
 1
18 
 9






 9
 9 
 9
X
9
 =






 8
 9
 9 
 1
27 
 9





 9
 9
 9
 9 
9 
 =





 8
 9
 9
 9 
 1
36 
 9




 9
 9 
 9
 9
 9 
9 
 = 




 8
 9 
 9 
 9 
 9 
 1
45 
 9



 9
 9
 9
 9
 9 
 9 
 = 



 8
 9 
 9
 9 
 9 
 9
 1 
54 
 9 


 9
 9
 9
 9
 9
 9
 9 
 =


 8
 9
 9
 9
 9
 9
 9
 1
63
 9

 9
 9 
 9 
 9
 9
 9
 9
 9 
9 
 = 

 8
 9 
 9
 9
 9
  9
 9
 9
 1
72
 9
 9 
 9 
 9 
 9
 9 
 9 
 9
 9
 9 
X 
 = 
 8
 9
 9
 9 
 9
 9
 9
 9
 9
 1
81
 9