Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 30, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 13

                                 
அச்சுப்பிச்சுஅப்புமணி !
"அண்ணா ... உங்களுக்கு அம்மா இருக்கிறாங்களா ?"
"ஏன் தம்பி கேட்கிறே ?" என்று அவன் கேட்டதுமே "எங்க அம்மா மாதிரி உங்க அம்மாவும் எப்பவும் அழுதிட்டு இருப்பாங்களான்னு தெரிஞ்சுக்கக் கேட்டேன்" என்றான் அப்புமணி.
இதைக் கேட்டதும் அவனது கண்கள் கலங்கின 
"என்ன அண்ணா நீங்க.! எங்க அம்மா மாதிரி சும்மா சும்மா அழறீங்க ? நான் என்ன கேட்டுட்டேன்னு இப்போ அழறீங்க ? நான் தப்பா ஏதாது கேட்டுட்டேனா ?"
"இல்லே தம்பி .... இத்தனை வருஷத்திலே நான் பார்த்த எத்தனையோ ஆயிரக் கணக்கான மனுஷங்களில் ஒருத்தர் கூட என்னை  "ஏம்பா .. நீ சாப்பிட்டியா ? உனக்கு அம்மா இருக்கிறாங்களா"னு கேட்டதில்லே. முன்பின் பார்த்திராத நீ என்னோட பசியைப் பத்தி பேசறே .. எங்க அம்மா பத்தி விசாரிக்கிறே.. இந்த மாதிரி அன்பா பேசற ஜீவனை என் வாழ்நாளில் பார்த்திருந்தால் இப்படி ரோட்டோரம் விழுந்து கிடக்கிற நிலைமைக்கு வந்திருக்க மாட்டேன். எனக்காக அழவும் சிரிக்கவும் எந்த உறவும் கிடையாது" என்று கண்கள் கலங்க சொன்னான் அவன்.
"அப்படின்னா எங்க வீட்டுக்கு வாங்க "
"கள்ளங்கபடமில்லாத வெள்ளை மனசு உனக்கு. உன் வீட்டுக்கு வர்ற தகுதி எனக்குக் கிடையாதுப்பா.  சரி தம்பி ... நீ நேரத்தோடு வீட்டுக்குப் போ . நானும் இங்கிருந்து கிளம்பறேன் "
"நீ எங்கே போறே ?"
"இப்படியே ரெண்டு நாள் சுத்துவேன். பிறகு எங்க கூட்டத்தோடு போய் சேருவேன் "
"கூட்டமா ?"
"அதெல்லாம் உனக்கு புரியாது தம்பி .. நீ கிளம்பு "
"அண்ணா ... இங்கே தீவிரவாதிங்க சுத்தறாங்கன்னு எங்க ஸ்கூலில் எல்லா பிள்ளைங்களும் பேசிகிட்டாங்க .. நீங்க அவங்க கையிலே மாட்டிக்காமே பத்திரமா போங்க "
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவன், "நீ அவங்களைப் பார்த்திருக் கிறியா  ? அவங்க எப்படி இருப்பாங்க ? " என்று கேட்டான். 
"யூனிபார்ம் போட்டுக்கிட்டு கருப்பு துணியாலே முகத்தை மூடிகிட்டு கையில் துப்பாக்கியோட இருப்பாங்க " என்று விவரித்தான் அப்புமணி.
அதைக் கேட்டு சிரித்த அவன், "தம்பி ... எனக்கு சாப்பாடு தண்ணீர் ஸ்நாக்ஸ் எல்லாம் குடுத்தே... நல்லா இருப்பா ... உன்னைப் பெத்த புண்ணியவதியும் நல்லா இருக்கணும்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த அப்புமணி, அவனால் தன்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. மெதுவாக நடந்து வீடு வந்து சேர்ந்தான் . "என்னடா ... குளிக்கப் போறதா சொல்லிட்டுக் கிளம்பினே .. குளிக்காமே இப்படி வேர்த்து விறுவிறுத்து வந்து நிக்கிறே " என்று கேட்டாள் அம்மா .
"ராமு சோமு பாதி வழியிலேயே என்னை இறக்கி விட்டுட்டுப் போயிட்டாங்க" என்றான் அப்புமணி .
"ஏன் ?" என்று அம்மா கேட்க , நடந்ததை சொன்னான் அப்புமணி.
"இந்த ராமுவும் சோமுவும் என்னை புத்திசாலி ஆக்கிறதா சொன்னாங்க .. ஆனா .... "
"நீ அவங்களை முட்டாள் ஆக்காமே இருந்தால் சரிதான் .. சாப்பாட்டை அவங்களுக்கு குடுத்தியா  ?"
"இல்லேம்மா ... ஆனா வீட்டுக்கு வர்ற வழியில் ஒரு அண்ணா பசியோட இருந்தார் .. அவருக்குக் குடுத்தேன்."
"அப்பாடா ... அந்த அளவுக்காவது மூளை வேலை செஞ்சது சந்தோசம் தான்  " என்றாள் அம்மா 
"ராமு சோமு என்னை அவங்க கூட சேர்க்க மாட்டேங்கிறாங்க .. நான் எப்பதான் புத்திசாலி ஆறது ?"
"நான் உனக்கு நல்ல நல்ல கதைகளா தினமும் சொல்றேன்தானே .. நீ அதைக் கேட்டு அந்த மாதிரி நடக்கப் பழகிக்கோ"
"இன்னிக்கு என்ன கதை ?"
"அரிசந்திர மகராஜன் கதை சொல்லப் போறேன். உண்மை பேசறவனை எல்லாருக்கும் பிடிக்கும் .. ஒருத்தன் நல்லவனா இருந்தால் அவனையும் எல்லாருக்கும் பிடிக்கும். உயிரே போனாலும் உண்மைதான் பேசுவேன்னு சொல்லி பிடிவாதமா இருந்த அரிசந்திரன் கதையை உனக்கு சொல்றேன் . அவரைப் போலவே நீயும் எப்பவும் உண்மை பேசணும் " என்று அம்மா சொல்லும்போதே," இந்தக் கதை எனக்கு ஏற்கனவே தெரியும். பொய்யே பேச மாட்டேன்னு சொல்ற ஒரு ராஜாவை ஒரு முனிவர் வந்து பொய் பேச சொல்லுவாரே .. அந்தக் கதைதானே. அதை எங்க டீச்சர் எங்களுக்கு சொல்லி இருக்காங்க " என்றான் அப்புமணி 
"அந்தக் கதையிலிருந்து நீ என்ன தெரிஞ்சுகிட்டே ?" என்று அம்மா கேட்க, "உண்மைதான் பேசுவேன்னு யாரும் அடம் பிடிக்கக் கூடாது. அப்படி அடம் பிடிச்சா கஷ்டப்படவேண்டி இருக்கும். அதனால் பொய் பேசறது எப்பவும் நல்லது" என்று அப்புமணி சர்வ சாதாரணமாக சொல்ல அவனைக் கோபத்தோடு முறைத்துப் பார்த்தாள்  அம்மா.
------------------------------------- தொடரும் ----------------------
    

Friday, October 23, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 12

                                     
அச்சுப்பிச்சுஅப்புமணி !
"டேய் ... ராமு ... சோமு .... என்னடா நீங்க ... என்னை இப்படி நடுவழியில் இறக்கி விட்டுட்டுப் போறீங்களேடா..நான் வேணும்னா என் வாயாலேயே பலூன் ஊதற மாதிரி ஊதி உங்க சைக்கிளுக்கு காத்து ஏத்தறேன்டா .. என்னையும் கூட்டிட்டுப் போங்கடா " என்ற அப்புமணியின் கெஞ்சல் அவர்கள் காதில்விழவேஇல்லை. திரும்பியே  பார்க்காமல் சைக்கிளை தள்ளியபடி நடந்து சென்றார்கள்.
சாப்பாடு, தண்ணீர் பாட்டில், நொறுக்குத் தீனி இருந்த பையை தலையில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்தான் அப்புமணி.திடீரென்று அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. "டேய் ... என்னை விட்டுட்டா போறீங்க. இதோ பாருங்க குறுக்குப் பாதையில் ஓடி வந்து உங்களுக்கு முன்னாலே நான் ஆத்தங்கரைக்கு வந்துடுவேன் .. குறுக்குப் பாதையில் திருட்டுப் பயம், பேய் நடமாட்டம் இருக்கும்னு எல்லாரும் சொல்றாங்க. என்ன ஆனாலும் சரி ... உங்களை நான் ஜெயிச்சே காட்டுவேன் " என்று மனதுக்குள் சொல்லியபடி ஆள் நடமாட்டம் என்பதே இல்லாத குறுக்குப் பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அப்புமணி . 
மரக்கிளைகளில் பறவைகளின் சலசலப்பு , தேங்கிக் கிடந்த நீரில் தவளைகளின் துள்ளிக் குதிப்பு, மண்டிக் கிடந்த புதர்களின் நடுவில் யாரோ ஓடுவது போல ஒரு அசைவு .. இவற்றையெல்லாம் பார்த்தபடியே வேகமாக நடக்க ஆரம்பித்தான் அப்புமணி. ஒரு மரத்தடியில் ஒருவன் படுத்துக் கிடப்பது அவன் கண்களில் பட்டது. அவனருகில் சென்ற அப்புமணி, "அண்ணா ... நீங்க ஏன் இங்கே படுத்துக் கிடக்கீங்க ? இங்கே பேய் வருமாம்.." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தரையில் விழுந்து கிடந்தவன், "தண்ணீர் .... தண்ணீர் " என்று சைகை செய்தான். 
கொஞ்சமும் யோசிக்காமல் பாட்டிலைத் திறந்து அவன் வாயில் தண்ணீரை மெதுவாக ஊற்றினான் அப்புமணி. நன்றியுணர்ச்சி அவன் கண்களில் வெளிப்பட்டது. மெதுவாக எழும்பி உட்கார்ந்த அவன், தனது இரண்டு கைகளையும் கூப்பி, " நன்றி தம்பி " என்றான்.
"அதெல்லாம் யாருக்கு வேணும் ? நீங்க இங்கே படுத்திருக்கீங்களே . உங்களுக்கு பயமா இல்லையா ?" என்று கேட்டான் அப்புமணி 
"படுத்திருக்கலே ... மயங்கிக் கிடந்தேன் ...தெய்வம் மாதிரி வந்து தவிச்ச வாய்க்குத் தண்ணி குடுத்திருக்கே ... யாருப்பா நீ ?" என்று கேட்டான் அவன்.
"நான் ....அச்சுப்பிச்சு "
"அப்படின்னா ?"
"அப்படித்தான் எல்லாரும் என்னை இங்கே கூப்பிடுவாங்க. வாங்க அண்ணா... எங்க வீட்டுக்குப் போலாம் " என்று கூப்பிட்டான் அப்புமணி.
நான் தீவிரவாதிகள் கூட்டத்தை சேர்ந்தவன்ங்கிறதும், போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிட்டு சோறு தண்ணி இல்லாமே இந்த இடத்தில்  மூணு நாளா மறைஞ்சு கிடக்கிறேன்ங்கிறதும்  இந்தப் பையனுக்குத் தெரிஞ்சால் என்னை அவன் வீட்டுக்குக் கூப்பிடுவானா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தான் அவன் .
"என்னண்ணா ... என்ன யோசிக்கிறீங்க ?" என்று அப்புமணி கேட்க, அவன் முகத்தை அன்போடு பார்த்த அவன், "என்னை 'அண்ணன்'னு சொல்லியா கூப்பிட்டே?" என்று கேட்டான்.
"ஆமாம் .. என்னைவிட பெரியவங்களை, 'அண்ணா' ... 'மாமா'னு மரியாதையா கூப்பிடணும்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க"
"உங்க அம்மா ரொம்ப நல்லவங்க!"
"போங்க அண்ணா .. நீங்க எங்க அம்மாவைப் பார்க்கவே இல்லை. அதுக்குள் அவங்க நல்லவங்கனு எப்படி கண்டு பிடிச்சீங்க.?"
"வழியில் விழுந்து கிடந்த ஒருத்தனை எழுப்பி உட்கார வச்சு, தண்ணி குடுத்து உதவுற ஒரு பிள்ளையைப் பெத்த அம்மா கண்டிப்பா நல்லவங் களாத்தான் இருப்பாங்க. நீ ரொம்ப நல்லவன் தம்பி"
"நீங்க மட்டுந்தான்  இப்படி  சொல்றீங்க .. எல்லாரும் என்னை அச்சுப்பிச்சு அச்சுப்பிச்சுனுதான் கூப்பிடுவாங்க. அண்ணே.. இட்லி இருக்கு சாப்பிட லாமா?" என்று அப்புமணி கேட்க, "இட்லியா?" என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் அவன் .
"நான், ராமு சோமு மூணு பேரும் ஆத்துக்கு குளிக்க கிளம்பினோம் . குளிச்சதும் சாப்பிட எங்க அம்மா இட்லி ஸ்நாக்ஸ் எல்லாம் குடுத்து அனுப்பினாங்க  .. ஆனா அவங்க என்னை பாதி வழியிலேயே விட்டுட்டுப் போயிட்டாங்க . வாங்க அண்ணா ... நாம சாப்பிடலாம் " என்றான் அப்புமணி .
"உங்க அம்மா உனக்கு ஆசையா செஞ்சு குடுத்ததை என்கிட்டே குடுத்திட்டா அதுக்காக உங்க அம்மா கோபப்பட மாட்டாங்களா?"
"மாட்டாங்க. மத்தவங்க சாப்பிடறதைப்   பார்த்தால் எங்க அம்மா ரொம்ப சந்தோசப் படுவாங்க " என்று சொல்லிய அப்புமணி இட்லி பாக்கெட்டை எடுத்து அவனிடம் கொடுக்க வெகு ஆவலாக சாப்பிடத் தொடங்கினான் அவன் .
"இந்தாங்க அண்ணா .. தண்ணி குடிச்சுக்கோங்க . வேகமா சாப்பிட்டா சாப்பாடு தொண்டையில் சிக்கி நாம செத்துப் போயிடுவோம் " என்று அப்புமணி சொல்ல, "அப்படியொன்னு நடந்தால் அதுக்காக அழவோ வருத்தப்படவோ  எனக்கு யாருமே இல்லை " என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
"அண்ணா ... உங்க வீடு எங்கே இருக்குது ? உங்க அம்மா எங்கே இருக்காங்க ?"
"உனக்கு இந்த வயசில் இருக்கிறது போல என்னோட சின்ன  வயசில் எனக்குன்னு ஒரு வீடு .. ஒரு அம்மா ... இருந்திருந்தால் நான் ஏன் இப்படி ஒரு கேடு கெட்ட வாழ்க்கை வாழப் போறேன்.. என்னோட அம்மா முகத்தை நான் பார்த்ததே இல்லை"
"சரி ... இனிமே எங்க அம்மாவை உங்க அம்மாவா வச்சுக்கோங்க " என்று அப்புமணி சொல்ல, அவனை அப்படியே கட்டிப் பிடித்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அவன். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.
"எங்க அம்மாதான் என்னைப் பார்த்துப் பார்த்து எப்பவும் அழுவாங்க . நீங்க ஏன் அழறீங்க  ?"
"உங்க அம்மா ஏன் அழணும் ?"
"எல்லாரும் என்னை அச்சுப்பிச்சுனு கிண்டல் செய்றாங்க. அதைப் பார்த்து எங்க அம்மா அழறாங்க. என்னைத் திட்டறாங்க .எனக்கு சமர்த்தே போதாதாம்"
 "நீயும் மத்த குழந்தைங்க மாதிரி சமர்த்தா நடந்துக்கிறது தானே ?"
"அதுக்குத்தான் ராமு சோமு கூட பிரெண்டா இருந்தேன். அவங்க என்னை பாதியிலேயே கழட்டி விட்டுட்டுப் போயிட்டாங்க "
"அவங்களா விரும்பிதான் உன்னைக் கூட்டிட்டு   வந்தாங்க. அவங்க கோபப் படற  அளவுக்கு நீ என்ன செஞ்சே ?"
"சைக்கிளில் இருந்த காத்தை வெளியில் விட்டேன் "

"ஏன் அப்படி செஞ்சே ?"
"அன்னிக்கு ராமு சோமுவோட  மாமா வீட்டு பங்க்ஷனில் சாப்பிடறப்போ  காத்தில் இலை பறக்குது . பேனை நிறுத்துன்னு சொன்னாங்க. பேன் ஆப் ஆனதும் இலை அப்பளம் எதுவும் பறக்கலே. இன்னிக்கு வெளியில் எதிர்க் காத்து அதிகம் இருக்கிறதாலே சைக்கிளை ஓட்ட முடியலேன்னு அவங்க சொன்னதும்  நான் சைக்கிளில் இருந்த காத்தை நிறுத்தினேன்" என்று அப்புமணி சொன்னதைக் கேட்டு அவன் சிரித்தான். 

"நான் பேசினால் நீங்க சிரிக்கிறீங்க ... எல்லாரும் சிரிக்கிறாங்க .. எங்க அம்மா மட்டும் நான் பேசறதப் பார்த்து ஏன் அழறாங்கனு  தெரியலே " என்று அப்புமணி சொன்னதைக் கேட்டு அவனது கண்களும் கலங்கியது. இந்தப் பையன் இப்படியொரு அப்பாவியாக இருக்கிறானே .மோசக் காரங்க சூழ்ச்சிக் காரங்க இருக்கிற இந்த உலகத்தில் இந்தப் பையனால் எப்படி  எதிர்நீச்சல் போட்டு வாழ முடியும் ?" என்று சிந்திக்க ஆரம்பித்தான். 
------------------------------------------  தொடரும் --------------------------------------

Friday, October 16, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 11

                                     
அச்சுப்பிச்சுஅப்புமணி !
தாத்தாவின் வீட்டை விட்டு வெளியில் வந்ததுமே, "அம்மா எதுக்கு நீ எப்போப் பார்த்தாலும் என் கையைப் பிடிச்சு தரதரனு இழுத்துட்டு வர்றே ? எனக்குத்தான் நடக்கத்தெரியுமே....கையை விடும்மா..வலிக்குதும்மா" என்றான்  அப்புமணி.
"யாருடா உன்னை பெரிய மனுஷன் மாதிரி தாத்தாவை வாழ்த்த சொன்னது. உன்னை தாத்தா காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கத் தானே சொன்னேன்." என்று கோபமாகக் கேட்டாள் அம்மா .
"அம்மா ... நீதானே ராமு சோமுவைப் போல நடந்துக்கணும்னு சொன்னே "
"ஆமாம் "
"அன்னிக்கு அவங்களோட  மாமா வீட்டில் ஒரு குழந்தைக்குப் பிறந்தநாள் நடந்தப்போ அவங்க அப்படித்தான் குழந்தையை வாழ்த்தினாங்க . நானும் அதைப் போலத்தான் தாத்தாவை வாழ்த்தினேன் "
"முட்டாள் .... முட்டாள் ... அன்னிக்கு நடந்தது குழந்தையோட முதல் வயசு பிறந்தநாள். அதனாலே அப்படி வாழ்த்தினாங்க ... இன்னிக்கு தாத்தாவுக்கு தொன்னித்து ஒன்பது வயசு முடிஞ்சு நூறாவது வயசு ஆரம்பம் ஆகுது. அவர்கிட்டே போய் நூறு வயசு வரை நல்லா இருக்கணும்னு சொல்ல லாமா?. இப்படியொரு முட்டாளா இருக்கிறியே. நீ எப்பத்தான் திருந்துவே ?" என்று கோபமாகக் கேட்டாள் அம்மா.
அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ராமு சோமு இருவரும், "என்ன .. அச்சுப்பிச்சு .. ஸ்கூலுக்கு வரலியா ?" என்று கேட்டார்கள்.
"அவன் இனிமே ஸ்கூலுக்கு வரமாட்டான். ஸ்கூலுக்குப் போனா , படிச்சா புத்திசாலித்தனம் வரும்னு நினைச்சு எல்லாரும் படிக்கப் போறாங்க. ஆனால் வடிகட்டின முட்டாள் எந்த ஸ்கூலுக்குப் போனாலும் எத்தனை ஸ்கூலுக்குப் போனாலும் முட்டாளாத்தான் இருப்பான்னு இவன் செய்கையில் காட்டிட்டான். அவன் படிக்க வேண்டாம். நாலு மாடு வாங்கிக் குடுக்கப் போறேன். அவன் அதை மேய்க்கட்டும்" என்றாள் அம்மா.
"ராமு சோமு ... நீங்களே பாருங்கடா ... எங்க அம்மா ரொம்ப மோசம். எனக்கு இருக்கிறது ரெண்டே ரெண்டு கை. நாலு மாட்டை என்கிட்டே குடுத்தா என்னோட ரெண்டு கையாலே ரெண்டு மாட்டைத்தான் பிடிக்க முடியும். மீதியுள்ள ரெண்டு மாட்டை நான் எப்படிப் பிடிக்க முடியும்? அப்புறம் மாடு ஓடிப் போயிட்டா அதுக்கும் என்னைத் தான் திட்டுவாங்க" என்று அப்பாவித் தனமாக சொன்னான் அப்புமணி.
இதைக் கேட்டதும் அம்மாவுக்கு சிரிப்பு வந்து விட்டது. அதைப் பார்த்த அப்புமணி, "டேய் ... ராமு ... சோமு ... சிரிக்கும்போது எங்க அம்மா எவ்வளவு அழகா தெரியிறாங்கனு  பாருங்கடா .. ஆனா எங்க அம்மா இந்தமாதிரி எப்பவோ ஒருக்கதான் சிரிப்பாங்க " என்றான் .
"சரி ... சரி ... நீ அவங்களோடு சேர்ந்து ஸ்கூலுக்குக் கிளம்பு " என்று சொன்ன அம்மா, அங்கிருந்து கோவிலுக்குக் கிளம்பிப் போனாள் .
இரண்டு நாட்களுக்குப் பின் ...
"அப்புமணி .. ராமு சோமுவோட சேர்ந்து ஆத்துக்குக் குளிக்கப் போறதா சொன்னியே ..  இன்னிக்கு லீவு நாள்ங்கிறதாலே அவங்க ரெண்டு பேரும் ஆத்திலே இறங்கி நல்லா ஆட்டம் போட்டுட்டு மெதுவாத்தான் வீட்டுக்கு வருவாங்க. நீ பசி தாங்க மாட்டே . நிறைய இட்லி சட்னியும் பாட்டிலில் தண்ணியும் தர்றேன். மூணு பேரும் நல்லா வயிறு நிறைய சாப்பிட்டுட்டு மெதுவா வாங்க.. முறுக்கு சீடை ஒரு கவரில் போட்டு வைக்கிறேன். மறக்காமே அதை சாப்பிடணும்"என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்க ராமுவும் சோமுவும் அங்கு வந்தார்கள் . 
வீட்டை விட்டு வெளியில் வந்ததும் "வாடகை சைக்கிள் எடுத்துக்கலாமா ?" என்று கேட்டான் சோமு. 
"அச்சுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதே" என்று சொன்ன ராமு, " சோமு நீ சொல்ற மாதிரியே நாம  வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போகலாம்டா . எல்லாருக்கும் தனித்தனி சைக்கிள் எடுக்க வேண்டாம். ஒரே சைக்கிளில் நாம மூணு பேரும் போவோம் "என்றான்.
வாடகைக்கு சைக்கிள் ஒன்றை எடுத்துக் கொண்டு மூவரும் ஆற்றுக்குப் போக தொடங்கினார்கள்.
சிறிது நேரத்தில் சைக்கிளை நிறுத்தினான் சோமு.
"ஏன்டா நின்னுட்டே ?" என்று அப்புமணி கேட்க "எதிர்காத்தோட வேகம் அதிகமா இருக்குது. சைக்கிளை மிதிக்க முடியலே " என்றான் சோமு. பின் சீட்டிலிருந்து குதித்துக் கீழே இறங்கிய அப்புமணி, நொடிப் பொழுதில் சைக்கிள் டுயூப்பிலிருந்து காற்றை வெளியேற்றினான் 
"டேய் .. என்னடா செய்றே ?" என்று இருவரும் பதட்டமாக கேட்க, "வெளியே நிறைய காத்து அடிக்கிறப்போ உள்ளே காத்து இருந்தா ஓட்டறது கஷ்டந்தானே. அதான் உள்ளே இருக்கிற காத்தை வெளியில் விட்டேன்" என்று சொன்னான் அப்புமணி 
"போடா முட்டாள் ... உன்னோட கூட்டு சேர்ந்ததே தப்பு.. இந்தா உன்னோட சாப்பாட்டு மூட்டை. நீ வீடு போய் சேரு ... நாங்க ஆத்துக்குப் போய்க்கிறோம்" என்று சொல்லி அப்புமணியை அங்கேயே விட்டு விட்டு சைக்கிளைத் தள்ளியபடியே ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் ராமுவும் சோமுவும். 
------------------------------------------------  தொடரும் -----------------------------------------------

Monday, October 12, 2015

சிந்திச்சுப் பார்த்து செய்கையை மாத்துங்க !

ஹாய் பிரெண்ட்ஸ், வியூயர்ஸ் 
இப்போ நான் உங்க கிட்டே பேசப் போறது என்னுடைய தனிப்பட்ட எண்ண ஓட்டங்கள் பற்றியது. இதில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். எங்க வீட்டுப் பையன் சொல்றது போல சப்பை மேட்டராக தோணலாம். இது எந்த விதத்திலும் உங்களுக்கு கொஞ்சம்கூட சம்பந்த மில்லாத ஒன்றாகக்கூட இருக்கலாம். இதைப் படிக்கிறது படிக்காததும் உங்களோட தனிப்பட்ட உரிமை. என்னுடைய எண்ண ஓட்டங்களைப் பகிர்ந்துக்கணுங்கிற ஆசை வந்துச்சு. பதிவு செய்றேன். அவ்வளவுதான்.
பஸ்ஸில் வெளியூர்களுக்குப் பயணிக்கும் போது ஏதோ ஒரு கிராமத்தின் ஒரு பஸ் ஸ்டாப்பில், பஸ் சில நொடி நேரம் மட்டுமே  நிற்கும். அங்கு கண்டிப்பாக ஒரு டீக்கடை இருக்கும். அதில் ஏதோ ஒரு சினிமாப் பாட்டு ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும். பாட்டின் அனுபல்லவி அல்லது சரணம் ஒலித்துக் கொண்டிருக்கும். அது நமக்கு ரொம்பவும் தெரிந்த பாட்டாக இருக்கும். ஆனால் தொடக்க வரிகள் என்ன என்பது சட்னு நினைவுக்கு வராது. அல்லது இரண்டு para க்களுக்கும் நடுவில் வரும் tune மட்டும் நம் காதில் விழும். அந்த டியுனை ரசித்தபடி அது என்ன பாட்டு என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே பஸ் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடும். நாம் கேட்டது எந்தப் பாட்டு என்பது தெரிந்து கொள்ளாவிட்டால் தலையே வெடித்து விடும் என்பது போன்ற பீலிங்க் .அது எந்தப்  பாட்டு என்பதை ஆராய்ச்சி செய்வதிலேயே நமது பயணத்தின் மொத்த நேரமும் கழியும்.
சில சமயம் சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு சினிமாப் பாட்டின் ஏதோ ஒரு சில வரிகள் நம் நினைவில் வந்து நம்மை டிஸ்டர்ப் பண்ணும். அது ஒரு இன்ப அவஸ்தை . அதை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் போது அதே வரிகள் டீவீயில் ஒலி / ஒளி பரப்பாகிக் கொண்டிருக்கும். அல்லது காற்றில் மிதந்து வந்து நம் காதைத் தொடும். இரண்டு நாட்கள் முன்பு அதாவது 10.10.2015 அன்று காலையில் படுக்கையை விட்டு எழும்போதே "ஒருசாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை " என்ற வரியில் அடுத்த வார்த்தை என்ன வரும் ? "ஊரார் நினைப்பது சுலபம்"னு வருமா இல்லாட்டா "துரும்பாய் நினைப்பது உலகம்"னு வருமானு ஒரு குழப்பம். வேறு எந்த வேலையும் செய்ய விடாமல் இது என்னைக் குழப்பிக் கொண்டிருந்தது.எங்கள் வீட்டு டீவீயில், பாடல்கள் அதுவும் பழைய சினிமாப் பாடல்கள் ஓடிக் கொண்டிருக்கும் நேரந்தான் அதிகம். டீவீ முன்பாக உட்கார்ந்து கேட்கும் பழக்கம் கிடையாது. அதுபாட்டுக்கு அது வேலையை செய்யும். நான் என்னோட வேலையை பாட்டைக் கேட்டபடி செஞ்சிட்டு இருப்பேன். வீட்டுக்குள் புதிதாக காலடி எடுத்து வைப்பவர்கள் "என்னங்க டீவீ பாட்டுக்கு ஓடிட்டு இருக்குது. யாரையும் காணும் " என்பார்கள். "ஓடினால் பிடிச்சு நிறுத்துங்க. என்னைப் பொறுத்தவரை அது ஒரு ரேடியோ.  அதுதான் என் உலகம்" என்பேன். ஒரு சில பாடல்கள் காதில் விழும்போது என்னதான் தலையே போகிற வேலையாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஓடி வந்து டீவீ முன்பாக உட்காருவேன். "அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் ", "உலகம் பிறந்தது எனக்காக ", "பூவே பூச்சூட வா ", "அழகே வா அருகே வா ", "காற்று வாங்கப் போனேன் ", "தரைமேல் பிறக்க வைத்தான்" இந்தப் பாடல்கள் ஒளிபரப்பாகும்போது வீட்டிலோ அல்லது வெளியிலோ யார் என்ன கத்தினாலும் அது என் காதில் விழாது. நான் பாட்டில் லயித்திருப்பேன். (இந்த வரிசையில் இன்னும் சில பாடல்கள் உண்டு ). இப்போ பழையபடி மேட்டருக்கு வருவோம். காலையில் இருந்தே அந்த பாடல் வரி என்னை குழப்பியதுன்னு சொன்னேன்தானே. இவ்வளவுக்கும் எத்தனையோ ஆண்டு காலமாக நான் கேட்கும் ஒரு பாடல் . இது ஏன் இப்படி டிஸ்டர்ப் பண்ணுது. அடுத்த வார்த்தை என்னவென்பது தெரிந்தால்தானே நமக்கு வேலையே ஓடும் என்ற குழப்பத்தில் இருந்த நான், சரி ... மெயில் பார்க்கலாம் என்ற நினைப்புடன் கம்ப்யூட்டர் முன்பாக உட்கார்ந்தேன். வழக்கமாக மெயில் பார்த்துவிட்டு மற்ற மேட்டருக்குப் போவேன். அன்று facebook login என்பதை  press பண்ணினேன். என்னோட குழப்பத்துக்கு விடை சொல்றமாதிரி  "தரைமேல் பிறக்க வைத்தான்" என்ற பாட்டின் முழுமையை  சலீம் துரானி என்பவர் பதிவு செய்திருந்தார். அவர் பதிவு செய்திருந்தது  09.10.2015 இரவு 8 மணிக்கு மேல். நான் பார்த்தது 10 ந் தேதி.
பாட்டின் முழுமையும் தெரிந்ததில் அளவற்ற சந்தோஷம் . அது எதனால் என்பது பற்றிய விவரம் , இதை தொடர்ந்து வருகிறது.
உங்க  கிட்டே ஒரு விஷயம் கேட்க ஆசைப் படுகிறேன். கடவுள் உங்க முன்னாலே வந்து நின்னுகிட்டு"இன்றைய special offer ஒன்றை உனக்குத் தர்றேன்.  நீ யார் உடம்பில் வேண்டுமானாலும் புகுந்து கொண்டு அவர்கள் வாழ்கிற வாழ்க்கையை  வாழ்ந்து பார்க்கலாம் " என்று சொன்னால் உங்களோட choice என்னவாக இருக்கும் ?
என்னோட choice "யாராவது ஒரு மீனவன் உடம்பில் புகுந்துகொண்டு அலையோடு போராடி வெளியில் வரணும் " என்பதுதான். 
மனிதன் எதையெல்லாமோ கண்டு பிடித்து விட்டான். பஞ்ச பூதங்களை அடக்க மட்டும் அவனால் முடியவில்லை. அது மட்டுந் தெரிந்துவிட்டால் அதன்பிறகு மனிதன்தான் தெய்வம். " பஞ்ச பூதம் " என்னும் சூட்சுமக் கயிறை தன்னுடைய கையில்  வைத்துக் கொண்டு மனிதனிடம் கடவுள் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார். AIR, LAND, SKY, WATER, FIRE - என்ற இந்த ஐந்தும் தானே பஞ்ச பூதங்கள். இவற்றை வெல்ல முடியாது என்று புராணக் கதைகள் கூறுகின்றன. வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப் படாமல் தினந்தினம் நீரில் போராடும் வகையில்தானே மீனவர்கள் வாழ்க்கை இருக்கிறது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன் " நாவலைப் படித்திருக்கிறேன். அதில் வரும் பூங்குழலி என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். எதைப் பற்றியும் கவலைப் படாமல் நினைத்த நேரத்தில் கடலில் படகை செலுத்தும் முரட்டுத் தனமான பெண் அவள். நானும் அவளைப் போலவே பௌர்ணமி நாளில் கடலில் படகில் சுற்றி வருவேன் ... கற்பனையில் ... கனவில் ... எனக்கு ரொம்பவும் பிடித்த ஒரு விஷயம் கடல். கடற்கரையில் உட்கார்ந்துகொண்டு கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது கட்டுமரத்தைக் கடலில் மிதக்க வைத்து , அதில் தாவி ஏறும் இளைஞர்கள் நொடிப் பொழுதில் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்து பிரமித்துப் போவேன். வீட்டில் தண்ணீர்க் குழாய் உடைஞ்சு போயிட்டா அதை ஒரு துணியால் அடைக்க எவ்வளவு போராட வேண்டியிருக்குது. ஆர்ப்பரித்து ஆட்டம் போடும் அலைகளை இவர்கள் என்னமாய் சமாளிக்கிறார்கள் என்பது பற்றி ஆச்சரியப் படுவேன்.  அடிக்கடி நான் யோசிக்கும் இன்னொரு விஷயம் : நாம பயணம் போகிற பாதையில் ஏதாவது ஒரு பிரச்னைனா, ஓடி ஒளிய  ஏதாவது ஒரு இடம் கிடைக்கும்.  ஒரு வழி இருக்கும். விபத்து என்றால் கூட அந்த வழியில் போறவங்க,  ஒண்ணு ஆஸ்பத்திரியில் அடிபட்டவங்களை சேர்த்துட்டுப் போவாங்க. இல்லாட்டா தகவலாவது சொல்லிட்டுப் போவாங்க . கடலில் எந்தவொரு விபத்து நடந்தாலும் அது வெளியில் தெரிய வருவதே  கஷ்டமான ஒன்றாச்சே.--- இப்படியெல்லாம் நினைச்சு வருத்தப் படுவேன். BRAVE என்ற வார்த்தைக்கு அர்த்தம் அல்லது உதாரணம் சொல் என்று என்னிடம்  யாராவது கேட்டால், அதற்க்கு "அலையோடு போராடுபவர்கள் " என்றுதான்  உதாரணம் சொல்வேன் .அவலம் நிறைந்த அந்த போராட்டத்தை 
" வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை" என்று 
வார்த்தையில் வெகு அழகாக வர்ணிக்கிறார் கவிஞர் வாலி.
அவலங்களை நறுக்குத் தெறித்தாற்போல ஒன்றிரண்டு வார்த்தைகளால் சொல்ல ஒரு சிலரால்தான் முடியும். 
தமிழில் உள்ள எத்தனையோ சுவைகளில் "அவல சுவை"யும் ஒன்று . ஒரு நாட்டுப் புறப் பாடலில் இது எவ்வளவு அழகாக படம் பிடித்துக் காட்டப் படுகிறது என்பதை பாருங்கள். 
இரண்டு குருவிகள் பேசிக் கொள்வதுபோல அமைந்த பாடல் இது. வெகு நேரமாகியும் வீடு திரும்பாத தனது தாயைப் பற்றி கொஞ்ச நேரத்துக்கு ஒரு தரம் ஒரு குருவி கேட்க , மற்றொரு குருவி பதில் சொல்வது போல பாடல் அமைந்துள்ளது. ஒரு குருவி கேட்கிறது :
 " அக்கக்கா ... பொற்குருவி .. நம் ஆத்தாளை எங்கக்கா?"
" பறவனார் வலையிலே பட்டிருப்பாள் இந்நேரம் !"
 " அக்கக்கா ... பொற்குருவி .. நம் ஆத்தாளை எங்கக்கா?"
"குறவனார் கூடையிலே குந்தியிருப்பா இந்நேரம் "
  " அக்கக்கா ... பொற்குருவி .. நம் ஆத்தாளை எங்கக்கா?"
"எச்சிப்பய புள்ளைஎல்லாம் அன்னத்தைக் கீழே வச்சு 
 நம்ம ஆத்தாளை மேலே வச்சு பிச்சுப் பிச்சு தின்னும் இப்போ !"
இதுதான் பாடல். மொத்தமாக சொல்லும்போது  :
 " அக்கக்கா ... பொற்குருவி .. நம் ஆத்தாளை எங்கக்கா?"
 " பறவனார் வலையிலே பட்டிருப்பாள் இந்நேரம் !
    குறவனார் கூடையிலே குந்தியிருப்பா இந்நேரம் 
    எச்சிப்பய புள்ளைஎல்லாம் அன்னத்தைக் கீழே வச்சு 
   நம்ம ஆத்தாளை மேலே வச்சு பிச்சுப் பிச்சு தின்னும் இப்போ !" - என்று முடியும். ஒரு பீலிங்கை வார்த்தையில் என்னமா படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்கள் என்பது பற்றி ஆச்சரியப்படுவேன். (இதில் கூட ஏதோ ஒரு தெருவின் பெயரை சொல்லி, அங்கு விலை போயிருப்பாள் இந்நேரம்.... (யார் வீட்டுக்) குழம்பிலேயோ கொதிச்சிருப்பா இந்நேரம் " என்றெல்லாம் வார்த்தைகள் வரும். அது நினைவுக்கு வரவில்லை.)
மீனவர்கள் தாக்கப் படுவது பற்றி செய்தி படிக்கும்போதெல்லாம் மனம் மிகவும் அலைபாயும். அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக வேண்டு மானாலும்  இருக்கட்டும் . நமக்கு எதிரியாகக் கூட இருக்கட்டும். உயிர் என்பதும் மரணபயம் என்பதும் எல்லோருக்கும் பொதுதானே. தினமும் அலைகடலில் போராடும் இவர்கள் வாழ்வோடு மற்றவர்கள் போராடுவது ஏன் ?
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அதில் ஒரு மீனவனாகப் பிறக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இந்த ஜென்மத்தில்...... நான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது யாராவது மீன் என்று சொன்னாலே போதும். கையில் எடுத்த கவளம் வாயில் போகாது.அந்த அளவு pure veg. 

Saturday, October 10, 2015

ANSWER OF TAMIL WORD PUZZLES - 021 - 025

வார்த்தை விளையாட்டுப் புதிரின் விடை : 021

போ கா தோ 
ப க டை 
கா ன ல் க ன்  ன 
தோ ல் வி டை ன மோ 

கோ பூ ஜை 
பூ  சி  ன 
ஜை ன ம் 
பா து ஷா 
பு தி து 
து ளி ர் தி ர வ 
ஷா ர் ஜா து வ ரை 

1 பூசின  2 தோல்வி  3 துளிர்  4 துவரை  5  பகடை 6 புதிது  7 பாதுஷா  
8 கன்ன  9 கோபூஜை   10  கானல்   11 டைனமோ   12  போகாதோ  13 ஜைனம்  14  ஷார்ஜா   15 திரவ 


 விடை : 022

ம த கு 
மா யா வி 
த கு தி யா க ம் 
கு தி ர் வி ம் மு 

அ வ தி 
வ ட் ட 
தி ட ல் 
ஆ தா ர 
கோ து மை 
தா ர க து ற வி 
ர க ம் மை வி ழி 

1 துறவி   2 வட்ட   3 விம்மு   4 குதிர்   5  தராசு   6  மாயாவி   7 ரகம்  
8 கோதுமை   9 திடல்   10  தகுதி   11 அவதி   12  யாகம்    13 மதகு   14  ஆதார   15 மைவிழி 

 விடை : 023

அ நீ தி 
ஆ க வே 
நீ தி யா க ட ம் 
தி யா கி வே ம் பு 

வ ச தி 
ச ர் வ 
தி வ லை 
மி த வை 
உ த வி 
த க் க த கு மா 
வை க றை வி மா னி 

1 வேம்பு   2 சர்வ  3 தியாகி  4 நீதியா  5  தக்க  6  உதவி 7 வைகறை   8 வசதி    
9 கடம்  10  தகுமா 11  மிதவை  12 ஆகவே  13 திவலை  14  விமானி  15 அநீதி   


 விடை  : 024

ஆ சா மி 
பா தா தி 
சா ந் த தா ர க 
மி த வை தி க ழ் 

க போ தி 
போ வா யா 
தி யா னி  
ப கு தி 
சு தே சி 
கு தி ல் தே வ தை 
தி ல் லை சி தை வு 

1 சிதைவு  2 சாந்த  3 தராசு  4 கபோதி  5 தில்லை  6  பகுதி 7 தியானி 
8 தேவதை  9 மிதவை 10  திகழ்  11 ஆசாமி 12 பாதாதி  13 போவாயா 
14 குதில் 15 சுதேசி    

விடை : 025 

உ பா தை 
அ ல சு 
பா ல் ய ல ட் டு 
தை ய ல் சு டு ம் 

அ மு து 
மு கா ரி 
து ரி த 
போ கு மா 
ப த வி 
கு த் து த ள் ளா 
மா து ளை வி ளா சு 

1 குத்து   2 லட்டு    3 பதவி   4 துரித    5  பால்ய    6 விளாசு   7 முகாரி    
8 மாதுளை    9 தையல்   10  சுடும்   11  உபாதை   12 போகுமா   13 அலசு   
14  அமுது   15 தள்ளா     

Friday, October 09, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 10

                                               
  அச்சுப் பிச்சு அப்புமணி !
அத்தையின் கோபத்தைக் கண்டு அம்மா பயந்து போனாள். " அத்தை, அவன் ஒரு ரெண்டுங் கெட்டான்னு உங்களுக்குத் தெரியாதா ? அவன் பேச்சை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கிறீங்களே " என்று கேட்டாள்.
"அவன் ரெண்டுங் கெட்டானா இருக்கிறதில் தப்பே இல்லே. அவனை ஒரு ஆளா மதிச்சு அவனை இங்கே நீ கூட்டிட்டு வந்ததுதான் தப்பு. இப்படி யொரு பைத்தியக்காரப் பிள்ளையை  ஏன் வெளியிடத்துக்கு கூட்டிட்டு வரணும் ?" என்று கோபமாக இரைந்தாள் அத்தை.
"என்னை மன்னிச்சிடுங்க அத்தை. இவன் புத்தி தெரிஞ்சுதான் நான் எந்த ஒரு நல்லது கெட்டதிலும் கலந்துக்கறதே கிடையாது. இருந்தும் மனசு கேட்காமே இங்கே வந்தேன். என்னை  மன்னிச்சிடுங்க அத்தை " என்ற அம்மா, அப்புமணியின் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.
"அம்மா ... இப்போ எதுக்கு என்னை இவ்வளவு வேகமா இழுத்துட்டு நடக்கறீங்க? கையை விடுங்க .... வலிக்குது " என்றான் அப்புமணி.
"நான் உன்னை வீட்டில்தானே இருக்க சொன்னேன். கேட்டியா ? அடம் பிடிச்சு வந்ததுதான் வந்தே. வாயை மூடிட்டு  இருந்திக்கலாம்தானே. ஏன் குறுக்கே புகுந்து பேசினே ?"
"நான் பேசினதுக்கா நீ கோபப் படறே ?"
"இல்லே .. குளிர்ந்து போய் நிக்கிறேன் "
"நீ சொல்றதப் பார்த்தா கோபப் படற மாதிரி இருக்குது "
"கல்யாணம் ஆன ஒரு வாரத்துக்குள்ளேயே ஒரு பொண்ணு, அவ புருஷனை இழந்துட்டு நிக்கிறா. எல்லாரும் வயித்தெரிச்சலில் இருக்கிறாங்க. அவங்க கிட்டே போய் "நல்லவேளை .. கல்யாணம் நடந்த பிறகு மாப்பிள்ளை செத்தார்னு சொல்லலாமா ?"
"காளிமுத்து வீட்டில் அவன் பாட்டி செத்துப் போனப்போ அவனோட அப்பா கிட்டே எல்லாரும் இந்த மாதிரிதான் சொன்னாங்க. அவர் கோபப் படவே இல்லை. இந்த அத்தைக் கிழவி மட்டும் ஏன் கத்துது ?"
"அட மண்டு . காளிமுத்து வீட்டிலே செத்துப் போனது ஒரு வயசான பாட்டி . எண்பது  வயசுக்கு மேலே ஆகுது .எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சிட்டு  செத்தாங்க. அத்தை வீட்டில் இறந்து போனது இருபத்தஞ்சு வயசுப் பையன். "
"அப்போ வயசானவங்க செத்தால் பரவாயில்லையா ?" என்று அப்புமணி கேட்க , " அட கடவுளே, இவனுக்கு நான் எதை சொல்லி புரிய வைக்க முடியும்  ?" என்றாள்.
"நீங்க எதையும் சொல்ல வேண்டாம். இனிமே யார் செத்தாலும் அவங்க வீட்டுக்கு நான் போக மாட்டேன். அப்படியே தெரியாத்தனமா போனாலும் வாயைத் திறந்து எதுவும் சொல்ல மாட்டேன் .போதுமா ?" என்றான் .
"அப்படியே இருடா என் செல்லம் " என்றாள் அம்மா.
மறுநாள் ....
"அப்புமணி .. நம்ம கோடி வீட்டுத் தாத்தாவுக்கு இன்னிக்குப் பிறந்த நாளாம். அவருக்கு நூறு வயசு நிறையுதாம். பெரியவங்க கிட்டே ஆசீர்வாதம் வாங்கினா ரொம்பவும் நல்லது. நீ ஸ்கூலுக்குப் போற வழியிலே தாத்தா கிட்டே ஆசீர்வாதம் வாங்கிக்கோ. அவர் காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணு. "எல்லார்கிட்டேயும் நான் ரொம்ப நல்ல பேர் வாங்கணும்"னு ஆசிர்வாதம் பண்ணுங்கன்னு அவர்கிட்டே சொல்லு. நாலு பெரியவங்க ஆசீர்வாதத்திலேயாவது நீ நல்லபடியா முன்னுக்கு வருவியான்னு பார்க்கலாம்" என்றாள் அம்மா.
"நீயும் வாம்மா. நீயும் ஆசீர்வாதம் வாங்கிக்கோ." என்றான் அப்புமணி 
"நான் அப்புறம் போய்க்கிறேன். நீ கிளம்பு. ஸ்கூலுக்கு நேரமாயிடும் "
"ஊஹூம் ... நீ வந்தால் நான் தாத்தா வீட்டுக்குப் போவேன். இல்லாட்டா நான் ஸ்கூலுக்குக் கூட போக மாட்டேன்  " என்றான் அப்புமணி.
வேறு வழியில்லாமல் அம்மாவும் கிளம்பிப் போனாள் . தாத்தாவின் வீட்டில் அவரது உறவினர் நண்பர்கள், ஊர்க்காரர்கள் என்று கூட்டம் அதிகம்  இருந்தது. அவர்கள் தாத்தாவிடம் கேலி பேசுவதும் வணங்குவது மாக இருந்தார்கள். இதையெல்லாம் பார்த்ததும், ராமு சோமு மாமாவின் வீட்டில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சி அப்புமணியின் நினைவுக்கு வந்தது.  தாத்தாவின் அருகில் சென்ற அப்புமணி , அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு "நீங்க நூறு வயசு வரைக்கும் நல்ல,சௌக்கியமா இருக்கணும். சந்தோசமா இருக்கணும் " என்றான். இதைக் கேட்டு தாத்தா சிரிக்க, அங்கு இருந்த உறவினர்களும் நண்பர்களும் அப்புமணியை முறைத்துப் பார்க்க அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியில் வந்தாள்  அம்மா. 
-------------------------------------------  தொடரும் -------------------------------------------

Saturday, October 03, 2015

வார்த்தை விளையாட்டுப் புதிர் - 021 - 025

புதிர் குறித்த விவரம் அறிய வார்த்தை விளையாட்டுப் புதிர் எண் - 01 ல் கிளிக் செய்யவும்.
புதிர் எண் - 21












 





ன 
















து





து



1 பூசின  2 தோல்வி  3 துளிர்  4 துவரை  5  பகடை 6 புதிது  7 பாதுஷா  
8 கன்ன  9 கோபூஜை   10  கானல்   11 டைனமோ   12  போகாதோ  13 ஜைனம் 14  ஷார்ஜா   15 திரவ

புதிர் எண் - 22









  
தி

 க





 



தி
















வி




1 துறவி   2 வட்ட   3 விம்மு   4 குதிர்   5  தராசு   6  மாயாவி   7 ரகம்  
8 கோதுமை   9 திடல்   10  தகுதி   11 அவதி   12  யாகம்    13 மதகு   14  ஆதார
15 மைவிழி  

புதிர் எண் - 23









  


 

தி



 























1 வேம்பு   2 சர்வ  3 தியாகி  4 நீதியா  5  தக்க  6  உதவி 7 வைகறை   8 வசதி    
9 கடம்  10  தகுமா 11  மிதவை  12 ஆகவே  13 திவலை  14  விமானி  15 அநீதி

புதிர் எண் - 24









  

தா
 




 





போ












தி







1 சிதைவு  2 சாந்த  3 தராசு  4 கபோதி  5 தில்லை  6  பகுதி 7 தியானி
8 தேவதை  9 மிதவை 10  திகழ்  11 ஆசாமி 12 பாதாதி  13 போவாயா
14 குதில் 15 சுதேசி    
புதிர் எண் - 25









ல்  


ட்  





 



து














து

ள்  





1 குத்து   2 லட்டு    3 பதவி   4 துரித    5  பால்ய    6 விளாசு   7 முகாரி    
8 மாதுளை    9 தையல்   10  சுடும்   11  உபாதை   12 போகுமா   13 அலசு   
14  அமுது   15 தள்ளா     
புதிருக்கான விடை ANSWER OF WORD PUZZLES IN TAMIL என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்.  )