Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, August 28, 2016

புதிர் எண் -08க்கான விடை - 
மொத்த மாடு - 26
கோமனுக்கு கொடுத்தது - 9
மீதமுள்ளது  - 17
ளைப்பசுவின் கன்றைக் கோமனிடம் கொடுத்து விட்டு ஒரு மாட்டை வாங்கினால், இவர்கள் இருவரின்  கணக்கில் சேரும் மாடுகளின் எண்ணிக்கை  மொத்தம் 18. அதை சரி சமமாகப் பிரித்தால் இருவருக்கும் தலா 9  மாடுகள்  கிடைக்கும். பாரபட்சம் இல்லாமல் மூன்று பேருக்கும் சம அளவு கிடைத்தது.
 இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள் 

புதிர் எண் - 09
Image result for images of village boys

"என்னடா ஒரு ஆள் குறையற மாதிரி இருக்கே " என்று  கேட்டார் தாத்தா.
"எப்படி தாத்தா எண்ணிப் பார்க்காமலே, எங்களை பார்த்ததுமே சொல்றீங்க ?" என்று ஆச்சரியமாகக் கேட்டார்கள் குழந்தைகள்.
"கண் சொல்லாததை கை சொல்லிடுமா என்ன ?" என்று எதிர் கேள்வி கேட்டார் தாத்தா.
"சுரேஷ் வரலே ...நாங்க இன்னிக்கு சுரேஷைக் கூப்பிடவே இல்லை"
"ஏன்டா ?"
"அவனுக்கு ரொம்ப தலைக்கனம் ... அவன் இங்கிலீஷில் நிறைய மார்க் வாங்கிட்டதாலே.. நாங்க பெயில் தாத்தா.. இங்கிலீஷ் தெரியலையேன்னு அவமானமா இருக்குது  "
"அட...போங்கடா...இங்கிலீஷ் தெரியலைன்னா   இங்கிலீஷ்காரன் வெட்கப்படணும். அது அவனுக்குத் தாய்மொழி. அவன்  வெட்கப் பட்டா   அதில்  ஒரு  நியாயம் இருக்குது. தமிழில் நிறைய விஷயம் உங்களுக்குத் தெரியாது. அதை நினைச்சு வெட்கப் பட்டால் அதில் அர்த்தம்இருக்குது. இங்கிலீஷ் தெரியாட்டா படிச்சு தெரிஞ்சுக் கோங்க "
"போங்க தாத்தா... எங்களை சமாதனப்படுத்த இப்படிப் பேசறீங்க. படிக்கிற நாங்க அந்த பாடத்தில் பெயில் ஆனா  அது ஷேம் தானே தாத்தா ! என்ன தாத்தா அதுக்கு மட்டும் அப்படியொரு பெருமை ?"
"புள்ளைங்களா ...உலகத்தில் எத்தனையோ நாடுங்க இருக்கு. அந்தந்த  நாட்டுமொழி தெரியாட்டா கூட இங்கிலிஷ் தெரிஞ்சா எங்கே போனாலும் சமாளிச்சிடலாம். ஏன்னா ஒரு காலத்திலே வெள்ளைக்காரங்க உலகம் முழுக்க ஆண்டாங்க. வச்சுக்கிட்டு வஞ்சனை பண்ணாமே எல்லா இடத்திலேயும் அதை பரவலா தூவி விட்டுட்டுப் போயிட்டாங்க. அது முளைச்சு வந்து அவங்க பெருமையை சொல்லுது. "
"அப்படி என்ன தாத்தா பெருமை ?"
"டேய் புள்ளைங்களா ... ஒருத்தனை "நீ "னு ஒருமைலே சொன்னா அவன் கிரீடம் விழுந்துட்ட மாதிரி கோபப்படுவான். அதையே "யூ"னு சொல்லு....பேசாமே இருப்பான். ஒருத்தனை "போ"னு   சொன்னா கோபப்படுவான். "கோ"னு சொல்லு. வாயைத் திறக்காமே போவான். "மூளை இருக்கா"னு ஒருத்தனைப் பார்த்துக் கேட்கிறப்ப அவனுக்கு வர்ற கோபம் அவனை "சென்ஸ்லெஸ்"னு சொல்றப்ப வராது. "உதவாக்கரை"னு சொன்னா  உடனே அங்கே  பிரளயம் வெடிக்கும். "யூஸ்லெஸ்"னு சொன்னா மண்ணு மாதிரி இருப்பான்  
"அப்படின்னா அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியலைனு அர்த்தமா ?" என்று அப்பாவித்தனமாகக் கேட்டார்கள் குழந்தைகள்.
"ஏதோ ஒண்ணு ... இங்கிலீஷ்  தெரியும்னு சுரேஷ் தலைக்கனம் பிடிச்சு அலையறான்னு சொல்றீங்களே..அவன்கிட்டே போய், "நீ உன் அப்பாவுக்கு எத்தனையாவது குழந்தை?'கிறதை இப்போ தமிழில் கேட்கிற மாதிரி இங்கிலீஷில் சொல்ல சொல்லு. அவன் என்ன சொன்னான்னு என்கிட்டே வந்து சொல்லுங்க"என்று தாத்தா சொல்லி முடிக்கும் முன்பே குழந்தைகள் அங்கிருந்து சிட்டாகப் பறந்தார்கள் . உங்களுக்கு விடை தெரியுந்தானே ?"

Wednesday, August 24, 2016

டைம்பாஸ் பண்ணுங்க BOSS ! ( 01 )

Image result for images of men fight in the office

ஒரு அலுவலகம். அங்கு வேலை செய்கிறவர்கள் எல்லோருமே ரொம்பவும் திறமைசாலிகள். வேலை செய்வதில் ஒருவரோடு மற்றவர் போட்டி போடும் அளவுக்கு வில்லங்கத் தனமும் அதைத் தொடர்ந்த வாக்குவாதம் உண்டு. சண்டை உண்டு. ஒரு  சமயம்  அது கைகலப்பில் இறங்கும் அளவுக்கு ஆகி விட்டது. இதைக் கண்ட அதிகாரியின் அந்தரங்க செயலாளர் பதறிப்போய் ஓடிச்சென்று அவருக்கு விஷயத்தை தெரிவித்ததும் அதிகாரி அமைதியாகச் சொன்னார்: -
"ஒரு முடிவு தெரியற வரை என்னை வந்து தொந்தரவு பண்ணாதே. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனது யாரு? போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகப் போறது யாரு ? ஆஸ்பத்திரிக்கு என்ன வாங்கிட்டுப் போகணும். போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறவனைப் பார்க்கப் போறப்ப என்ன கொண்டு போணும்ங்கிறதை ரெடி பண்ணிட்டு வந்து எனக்கு இன்பார்ம் பண்ணு !"



Monday, August 22, 2016

ராமு தாத்தாவும் குழந்தைகளும் ( 09 )

சென்ற வார புதிர் எண் -08 க்கான விடை : அட்டகத்தி ( அட்டை கத்தி )
இனி இந்த வார புதிருக்கு விடை கண்டுபிடியுங்கள்.

புதிர் எண் -09
Image result for images of two boys with cows

ராமனும் சோமனும் ரொம்பவும் சோகமாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்த ராமுத்தாத்தா "என்னப்பா, நீங்க இன்னும் உங்க தாத்தாவை நினைச்சு தான் வருத்தப்பட்டுகிட்டு இருக்கீங்களா? தொண்ணூறு வயசு வரை அவர் வாழ்ந்ததே பெரிய விஷயம். அதை நினைச்சு சந்தோசப்படனும் " என்று ஆறுதலாக சொன்னார்.
" நாங்க தாத்தாவை நினைச்சு வருத்தப்படலே. அவர் பண்ணிட்டுப் போயிருக்கிற காரியத்தை நினைச்சு வருத்தப்படறோம். என்னோட மூணு பேரக்குழந்தைகளையும் சமமாகத்தான் நினைக்கிறேன்னு பேசும் போதெல்லாம் சொல்லிட்டு, இப்போ எங்க அண்ணன் கோமனுக்கு அதிகம் சொத்து கொடுத்திட்டு எங்களுக்குக்  குறைவாக கொடுத்திட்டார் " என்றார்கள் இருவரும்.
" எந்த சொத்தைக் கொடுத்தார் ?" என்று தாத்தா கேட்க, " உங்களுக்குத் தெரியாதா என்ன, அவர்கிட்டே இருந்த 26 மாடுகளில் அண்ணனுக்கு முதலிலேயே 9 மாட்டைப் பிரிச்சுக் கொடுத்துட்டார். சினையாக இருக்கிற வெள்ளைப் பசு இன்னும் இரண்டு மாசத்தில், கன்று போட்டுடும். அதுக்குப் பிறகு கன்னுக்குட்டியை நாங்க கோமனிடம் குடுத்துட்டு ஒரு  மாட்டை அவனிடமிருந்து வாங்கி மொத்த மாட்டை நாங்க ரெண்டு பேரும் சமமாப் பிரிச்சு எடுத்துக்கணுமாம். எங்க தாத்தா பண்ணினது நியாயமே இல்லை " என்றான் சோமன்.
"அட முட்டாள்களா, நீங்க ரெண்டு பேரும் மழைக்காகக்கூட பள்ளிக் கூடம் பக்கம் போய் ஒதுங்கினது கிடையாது.படிக்க வேண்டிய வயசில் படிச்சிருந்தா உங்க தாத்தா எவ்வளவு நியாயமா செஞ்சுட்டுப் போயிருக் கிறார்னு உங்களுக்குத் தெரியும். எங்கிட்டே சொன்ன மாதிரி உங்க கவலையை மத்தவங்ககிட்டே சொல்லி முட்டாள்பட்டம் வாங்கி கட்டிக் காதீங்க. படிப்பு மண்டையில் ஏறாதவனை மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்பார்கள் . முட்டாள்களா , மாடு மேய்க்கவும் படிப்பறிவு கொஞ்சமாவது வேணும். ஒரு வீட்டிலிருந்து எத்தனை மாட்டைக் கொண்டு போகிறோம், எத்தனையை திருப்பிக் கொண்டு வந்து சேர்க்கிறோம் என்ற கணக்குப் பார்க்கத் தெரிய வேண்டுமே " என்று சொல்லிவிட்டு தாத்தா அங்கிருந்து போய் விட்டார். அவர்கள் இரண்டு பேரும் இன்னும் குழப்பத்தில் கவலையில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் புரிய வைக்க உங்களால் முடியுமா ?

Sunday, August 14, 2016

ராமு தாத்தாவும் குழந்தைகளும் ( 08)

சென்ற வார புதிர் எண் - 07 க்கான விடை - செங்கல்பட்டு.
இனி இந்த வாரப் புதிருக்கான விடையை கண்டு பிடியுங்கள்.  


புதிர் எண் - 08
Image result for image of man in running bus"தாத்தா எப்பவும் நீங்கதான் புதிர் போடறீங்க. நாங்க விடை சொல்வோம். விடை கண்டு பிடிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்குத் தெரியணும் தானே. அதனாலே இன்னிக்கு உங்களுக்கு நாங்க புதிர் போடறோம். நீங்க விடை சொல்லணும்" என்றுசரவணன்சொல்ல,"சரி" என்று தலையை  ஆட்டினார் தாத்தா.
"ஓடிக்கொண்டிருத்த பஸ்ஸில் ஒருத்தன் வேகமா ஓடிவந்து, ஏறினான். அவனைக் கோபமாக முறைத்துப் பார்த்த கண்டக்டரிடம்  அவன் " ஸார் கோவிக்காதீங்க. நாடகத்தில்    நடிக்கப்போறேன். லேட் ஆகிட்டுது. அதான் ஓடிவந்து ஏறினேன்" என்றான். "சரி சரி எங்கே போகணும்? ஆமாம் கையில் என்ன கத்தி ? யாரையாவது குத்திக் கிழிச்சிடாமே" என்ற கண்டக்டருக்கு, அவன் சொன்ன பதிலும், டிக்கெட் கேட்ட ஊரும் ஒன்று தான். அது என்னன்னு சொல்லுங்கோ" என்ற சரவணன் கேட்ட அடுத்த நொடியே தாத்தா விடையை சொல்லி விட்டார். உங்களால் சொல்ல முடியுமா ? 

Saturday, August 13, 2016

DEAR VIEWERS,

                              இதை தவிர்ப்பது எல்லாருக்குமே நல்லதுதானே!!
Image result for image of lady crying scenes in court

கலைத்துறையைச் சேர்ந்தவரா நீங்கள்? கதைக்கான ‘கரு’ மற்றும் சூழ்நிலைக்கேற்ற வசனத்தை உணர்ச்சிகரமாக எப்படி சித்தரிப்பது என்றெல்லாம் தடுமாறிக் கொண்டிருப்பவர்களா நீங்கள்?
கவலையை விடுங்கள்... உங்கள் பிரச்னை தீர குறைந்தபட்சம் ஒரே ஒரு வாரம்  உங்கள் பெண்உதவியாளர்களை எலெக்ட்ரிக் ட்ரைனில் பயணிக்க சொல்லுங்கள். நீங்கள் போதும் போதுமென்று சொல்லுமளவுக்கு நிறைய டிப்ஸ் கிடைக்கும்.
நேற்றைய டாபிக் - அப்பன்காரனே ஆள் வச்சு பொண்ணைக் கொலை பண்ணிட்டு என்னமா நாடகம் ஆடறான்!
இன்றைய எலெக்ட்ரிக்  ட்ரைன் பட்டிமன்றம் - நேற்று ஒளி பரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பற்றியது. ரெகுலராக அந்த ப்ரோக்ராம் பார்க்கும் வழக்கம் எனக்குக் கிடையாது. ஒரு சேனலின் விளம்பர இடைவேளையில் மற்ற சேனல்களுக்கு மாறும்போது  ஒரு சில சீன்கள் பார்த்ததுண்டு அவ்வளவுதான்.      
நேற்று ஒளிபரப்பான சீன் நிறைய பேரைக் கோபப்படுத்தி இருக்கிறது என்பது தெரிந்தது. ட்ரெயினில் ஒரு பெண் அதுபற்றி பேச்சை ஆரம்பிக்க, பக்கத்திலிருந்து மற்ற பெண்களும் அழையா விருந்தாளிகளாக அந்தப் பேச்சில் பங்கு பெற்றதிலிருந்தே அவர்களின் கோபமும் அதிலுள்ள நியாயமும் புரிந்தது.
அந்த ப்ரோக்ராமை நான் பார்க்காததால் அதிலுள்ள முழு விவரமும் எனக்குத் தெரியவில்லை.ஓரளவு நான் கெஸ் பண்ணிக் கொண்டேன்.
டாபிக் - ஃபேஸ் புக்கில் பலரை நண்பராக்கிக் கொண்டு, ஒருவர் மாற்றி ஒருவராக பலரைக் கல்யாணம் செய்துகொண்ட பெண்ணை அந்த சேனல் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
அந்த ப்ரோக்ராம் பற்றிய பேச்சு நமக்குத் தேவையில்லாத ஒன்று. ஏனென்றால் ஒரு சிலருக்கு இந்த ப்ரோக்ராம் மூலம் தீர்வு கிடைத்திருப்ப தாக சொல்கிறார்கள். சாட்சிகளே இல்லாத கொலையில், கொலையாளி யை அவனது வாக்குமூலத்தின் மூலமே அடையாளம் காட்டியிருக்கிறார் கள். பாராட்டப்பட வேண்டிய சங்கதி. 
ஆனால் நாலு சுவருக்குள் நடந்த தவறை வெளிச்சம் போட்டுக் காட்டி வியாபாரமாக்குவது சரியா? இது பொழுதுபோக்கும் நிகழ்ச்சியல்ல. சமுதாயத்தினைப் பழுது பார்க்கும்  நிகழ்ச்சி என்றால், ஒரு சில விஷயங்களை சென்ஸார் செய்து ஒளிபரப்பி இருக்க வேண்டும். மாறாக ஹைலைட் பண்ணுவது நியாயமா?
ஒரு பெண்ணோ ஆணோ சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்த தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதால் அவர்கள் வாழ்வு மேலும் சீரழியுமே தவிர, சீர்ப்படாது. ஏனென்றால் இது மனங்கொத்தி மனிதர்கள் வாழும் சமுதாயம். வாய் நமத்துப்போய் இருக்கிறது. மெல்வதற்கு என்ன விஷயம் கிடைக்கும் என்று தேடியலைகிற வக்கிரபுத்தி கொண்ட கூட்டம் எங்கும் நிறைந்து வியாபித்திருக்கிறது. மனிதன் என்ற போர்வையில் மிருகங்கள் வாழும் உலகம் இது. அவல் தேடி அலைகிறவர்களின் வாய்க்குள் ஏன் அவலை நாமே கொண்டுபோய்  வைக்க வேண்டும்?
சந்தர்ப்ப சூழ்நிலையால் கணவன் குழந்தையை விட்டுப் பிரிந்து வந்த பெண் வாழ வழி தெரியாமல், தனக்குத்தானே  ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு (ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு) தனது வாழ்க்கையை நடத்தி இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் அதுபற்றிநீதி கேட்கும் போது நாலு சுவர்களுக்குள் விசாரித்து முடிவு சொல்லி இருக்கவேண்டும். காவல் நிலையங்களில் அதைத்தானே 
செய்கிறார்கள். 
அதை விட்டுவிட்டு ஒரு பெண்ணை உட்கார வைத்து ஏகப்பட்ட கேலி கிண்டலோடு இளக்காரம் பண்ணி படம் பிடித்துக் காட்டும் உரிமையை  இவர்களுக்கு யார் கொடுத்தது?
ஏற்கனவே அவள் தப்பானவள் என்பது தெரிந்துவிட்டதால் இனி அந்தப் பெண்ணை யாராவது வேலையில் சேர்த்துக் கொள்வார்களா? வீட்டில் சேர்த்துக் கொள்வார்களா? இவங்க ரிப்போர்ட்டர் போய் அந்தப் பொண்ணோட புருசன் கிட்டே ஒருநாள் பேசிட்டு வந்துட்டா பிரச்னை அதோடு தீர்ந்துடுமா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவன் குத்திக் காட்டிப் பேசினாலோ அல்லது அக்கம் பக்கத்தினர் அந்தப் புருசன்காரனை குத்திக் காட்டிப் பேசினாலோ அந்தக் குடும்பம் ஒரு தவறான முடிவைத்தானே எடுக்கும். ஏமாத்திப் பிழைக்கிறதை தொழிலா வச்சிருந்தவ, அதுவும் முடியாதபோது விபசாரத்தொழிலுக்குத்தானே போவா. அந்த சூழ்நிலை க்கு அவங்களைத் தள்ளுவது சேனல்கள்தானே. அவ வயித்துப் பொழைப்புக்குக் கேவலமா எதையோ செய்து பிழைக்கிறானு சொன்னா, அந்தக்கேவலத்தைப்படமாக்கிக் காசுபண்றவன்தானே படு அயோக்கியன் என்பதுதான்  ட்ரைனில் பட்டிமன்றம் நடத்திய பெண்களின் வாதம். 
ஒரு குடும்பத்திலே வருஷக் கணக்கா இருக்கிற பிரச்சினை இவங்க கிட்டே உட்கார்ந்து பேசினாலே தீர்த்துடுமாம். செட்டுக்குள்ளே தலை யாட்டிட்டு கிடைச்ச காசை கையில் வாங்கிட்டு வெளியில் போனதும் அவனவன் பழையபடிதான் இருப்பான்.
‘கோர்ட்டில் கேஸ் நடந்தால் ரெண்டு பக்கம் உள்ளவங்க சொல்றதயும் ஜட்ஸ் அய்யா அமைதியா கேட்பார். அவர் முகத்திலே எந்த உணர்ச்சியுமே இருக்காது. இங்கே ஜட்ஜ் அம்மா துள்ளுறாங்க. துடிக்கிறாங்க. ஆவேச ஆட்டம் போடறாங்க. ரொம்ப நல்லா ஆக்ட் பண்றாங்க ’ - இதுவரைதான் என்னால் கேட்க முடிந்தது. அதற்குள் நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதால் முழுப்பேச்சையும் கேட்க முடியவில்லை.

Sunday, August 07, 2016

ராமு தாத்தாவும் குழந்தைகளும் ( 07 )

சென்ற வார புதிர் எண் - 6 ன் விடை : 
பொதுவாக ஆடிப் பெருக்கன்று அதாவது ஆடி மாதம் பதினெட்டாம் தேதியில் விதைத்த நெல்லை புரட்டாசிமாதத்தில் அறுவடை செய்யமுடியாது.நெல் பயிராகி அறுவடை செய்ய மூன்று /ஆறு மாதங்களாகும் அதாவது மூன்று மாதத்திலேயே விளையக் கூடிய நெல் வகையும் உண்டுவளர  ஆறு மாதம் தேவைப்படக்கூடிய நெல் வகையும் உண்டு. அப்படியிருக்க ஆடிமாதம் பதினெட்டாம் தேதியில் விதைத்த நெல்லை புரட்டாசி மாத முதல் வாரத்திலேயே அறுவடை செய்து விட்டதாக வேலன் சொன்னது பொய் என்பது தாத்தாவுக்குத் தெரிந்து விட்டது.இனி  இந்த வாரப் புதிருக்குப் போகலாமா ? 


புதிர் எண் - 7  
தாத்தாவிடமிருந்து புதிரை எதிர்பார்த்து வெகு ஆவலாக அவரருகில் அமைதியாக உட்கார்ந்திருந்தனர்
சற்றுநேர யோசனைக்குப்பிறகு"சரிஇந்தக்கேள்விக்குசரியானவிடையையார் சொல்றீங்கன்னு பார்ப்போம் " என்ற பீடிகையுடன் புதிரை சொல்ல 
ஆரம்பித்தார்.
ஒரு ஆள் வேகமாக ஓடிவந்துஓடிக்கொண்டிருந்த  பஸ்ஸில் ஏறினான். அவன் கண்டக்டருக்கு நன்கு தெரிந்த ஆள்தான் . அவன் சித்தாள் வேலை செய்பவன்அவன் தலையில் ரத்தக்காயத்துடன் கட்டுகட்டப்பட்டிருப்பதைகண்ட மனிதாபிமானம் மிக்க அந்த  கண்டக்டர் " ஏம்ப்பாஏற்கனவே தலையில் கட்டு போட்டிருக்கேஇப்போ ஓடற பஸ்ஸில் ஓடி வந்து ஏறுறே. இருக்கிற காயம் போதாதா ? இன்னும் கீழே  விழுந்து வாரணுமா ? ஆமாம் தலையில் காயம் எப்படிப்பட்டுச்சு ? நீ எங்கே போகணும் ? " என்று கேட்க, பணத்தை எடுத்து நீட்டிஅவன் போக வேண்டிய ஊருக்கு டிக்கெட் வாங்கினான் அந்த ஆள். " காயம் எப்படிப் பட்டதுன்னு சொல்லவே இல்லையே கண்டக்டர் கேட்க, "அதை சொல்லித்தானே  நான் டிக்கெட் வாங்கினேன் "  என்றான் அவன்ஆக மொத்தம் அவன் எந்த ஊர் பெயரை  சொல்லி டிக்கெட் வாங்கினானோ அந்த பெயரில்தான்  காயத்துக்கான காரணமும் இருக்கிறதென்பதை புரிந்து கொண்ட கண்டக்டர் "வேலை பார்க்கும் போதுகவனமாக இருக்க வேண்டாமா? " என்று உரிமையோடு கண்டித்தார்.
இப்போது கேள்வி என்னவென்றால் :
 1. அவன் எந்த ஊருக்கு டிக்கெட் வாங்கினான் ?
 2. காயம் எப்படி ஏற்பட்டது ?
தாத்தா நிறைய க்ளு கொடுத்துதான் புதிரை சொல்லியிருக்கிறார்கொஞ்சம் யோசனைபண்ணிப் பார்த்தால் விடையை சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம்.

Friday, August 05, 2016

DEAR VIEWERS,

.கேள்வி கீழே வருது. படிச்சிட்டு பதிலை சொல்லணும்.

இந்த மாதிரி தலையைத் தொங்கப் போட்டுட்டு நிற்க கூடாது.
                        சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!.
சமையல் / சமைக்கிறதுங்கிறது ஆம்பிளைங்களும் சம்பந்தப்பட்ட விஷயமா இல்லாட்டா அது  பொம்பளைங்களுக்கு மட்டுமேயான வேலையா?  
(அவனவன் காணாம போன விமானத்தைத் தேடுறதுலயும், ‘தண்ணி’ப் பிரச்னையை வச்சு  எப்படி விளையாடலாம்னு (அட. நான் சொல்றது விவசாயத்துக்கான தண்ணி பத்திதான். நம்புங்க!) அல்லாடிட்டு இருக்கிறான். சமையலைப் பத்தி கேக்க வந்துட்டியா.. ஏன்...? ஐ.நா. சபைக்கு எடுத்துட்டுப் போறதுதானேனு கேக்கிறவங்க யாராவது இருந்தா, அவங்க காதுல முதல்லயே ஒரு சங்கதியப் போட்டு வச்சிடறேன்.
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே இந்த கேள்வி என் காதுல விழுந்துட்டே இருக்கு. இதக் கேட்டுக்கேட்டேதான்  நான் வளந்தேன்னு சொன்னா கொஞ்சம் பெட்டரா இருக்கும்னு தோணுது.
‘காய் வாங்கிட்டு வந்துடறேன். அடுப்பில் இருக்கிறது தீஞ்சு போகாமே பார்த்துக்கோ. அஞ்சு நிமிஷம் கழிச்சு ஸ்டவ்வைஆஃப் பண்ணிடு’னு சொன்னா போதும்.உடனே, ‘இதப்பாரு. இதெல்லாம் எங்க வேலையே இல்லே. ஒண்ணு இருந்து அடுப்பு வேலையை முடிச்சிட்டு வெளியே போ. இல்லாட்டா காயே வாங்க வேண்டாம். அப்பளம் போதும்’னு சொன்னாங்க வீட்ல இருந்த, தலைக்கு மேலே வளர்ந்த ஆம்பளப் புள்ளைங்க. இதே டயலாக்கைத்தான் இப்போ அவங்க புள்ளைங்க சொல்லுதுங்க.
புள்ளைங்க என்னை ரொம்பவே கலாய்க்கிறாங்க. இந்த வார்த்தை கூட அவங்க கிட்டே யிருந்து படிச்சுக் கிட்டதுதான்.(எல்லா வீட்டுலயும் இதே லட்சணந்தான்னு யாரோ ஒரு சில அனுபவசாலிகளின் முணு முணுப்பு எனக்குக் கேட்கத்தான் செய்யுது. நமக்குப் படிப்பறி வெல்லாம் ரொம்பக் கிடையாது . அந்தக்கால பட்டதாரி. அம்புட்டு  தான்.
வீட்டில பேரன்பேத்திக எதையாவது தப்பா சொல்லும் போது நாம திருத்தினா, ’உனக்கு என்ன தெரியும்?’னு கொக்கி போடுதுங்க. ‘நானும் உங்க வயசில பள்ளிக்கூடம், காலேஜெல்லாம் போயிருக்கிறேனு சொன்னா ’நீ படிச்சப்ப கம்ப்யூட்டர் இருந்துச்சா?’னு கேக்குதுங்க. கம்ப்யூட்டர் முன்னால பொழுதுக்கும் இதுங்க உக்காந்து உக்காந்து எழுந்திரிக்கிறாதாலே இவங்கதான் உலக விஷயம் எல்லாத்தயும் கரைச்சிக் குடிச்ச மாதிரியும், வீட்டுல இருக்கிற பெருசுங்க எல்லாரும் அடி முட்டாளுங்க மாதிரியும் நினைக்குதுங்க.  அதுங்க கூடப் பேசிப் பிரயோஜனமும் இல்லே. அதுங்க கூட மல்லுக்கு நிக்க தெம்பும் இல்லே. ஆனா இந்த மண்ணுல என் தலை சாயறதுக் குள்ளே இதுக்கு விடை தெரிஞ்சிட்டுத்தான் போகணுங்கிற வீராப்பு இருக்குது. அதான் கேக்கிறேன்.
(ஆதி காலந்தொட்டு இன்று வரையிலும் தலைமைப் பொறுப்பு என்பது ஆண்கள் வசந்தான் இருந்து வந்திருக்கிறது. (எதற்குமே சில விதிவிலக்கு இருப்பது போல, இதிலும் ஓரிருவர் விதிவிலக்காக இருக்கலாம்).
எல்லா வகையிலும் ஆணுக்குக் கட்டுப்பட்டவர்களாகத்தான் பெண்கள் இருந்து வந்திருக்கிறார்கள்.
காலப்போக்கில், தேவையைக் கருத்தில் கொண்டு ஒரு சில பெண்கள் வேலைக்குச் செல்ல பிற்காலத்தில் அதுவே கட்டாய மாக்கப்பட்டு விட்டது. அதனால் ஆண்களும் அடுப்படியில் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. (இன்றைக்கும் பல வீடுகள் மதுரையாகவும், சில வீடுகள் சிதம்பரமாகவும், வெகுசில வீடுகள் திருச்செங்கோடாகவும் இருக்கத்தான் செய்கின்றன. அது என்ன மதுரை, சிதம்பரம், திருச்செங்கோடுனு கேக்கறீங்களா? மதுரையில் அம்பாளின் ஆட்சி, சிதம்பரத்தில் நடராஜரின் ஆட்சி, திருச்செங்கோட்டில் அர்த்தநாரிஸ்வரர் ஆட்சி. இப்போ யோசனை பண்ணிப் பாருங்க... உங்க வீடு மதுரையா, சிதம்பரமா, திருச்செங்கோடானு!)
ஒரு கணவன் தன்னுடைய வீட்டு வேலையை செய்வதை குறிப்பாக சமைப்பதை அடிப்படையாகக் கொன்டு பத்திரிக்கைகளில் வந்த ஜோக்குகள் ஏராளம். அதைப் படித்து விட்டு சிரிப்பவர்கள்மீது எனக்கு அனுதாபம்தான் வரும்.
ஏன்னா.... அப்ப இருந்து இப்ப வரை எந்த விசேஷமாகட்டும் ஆம்பிளைங்கதான் சமையல் பொறுப்பை ஏத்து நடத்தித் தர்றாங்க. உதவிக்காக ஒரு சில இடங்கள்ல ஒரு சில பொம்பளைங்க இருக்கிறாங்க. அவ்வளவுதான்.
அட. அந்தக் காலத்தை விட்டுத் தள்ளுங்க. இப்பவும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குப் போனால் கூட அங்கே சீஃப் செஃப் ஒரு ஆணாகத்தானே இருக்கிறார் (நான் பார்த்த வரையிலும்).
சரி. இதைக் கூட விட்டுத் தள்ளிடலாம். சமையல் கலையில் சிறந்தவன்னு நளனைச் சொல்றாங்க. நல்லா இருக்கிற சாப்பாட்டை நளபாகம்னு சொல்றாங்க. அந்த இடத்தை எந்தப் பொண்ணோட பேரும் சூபர்சேட் பண்ணலே.
அப்படியிருக்க, வீட்டில் சமையல் வேலையில் ஆண்கள் ஒத்தாசை பண்ணினால் அது ஜோக்கான விஷயம்னு வீட்டிலுள்ள பிள்ளைங்களும் மத்தவங்களும் ஜோதிடம் சொல்வது ஏன்?
சாமி, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!.
-  கேட்பது விடை தெரியாமே ரொம்பவும் நொந்து போன ஜென்மம்.