சென்ற வார புதிர் எண் - 07 க்கான விடை - செங்கல்பட்டு.
இனி இந்த வாரப் புதிருக்கான விடையை கண்டு பிடியுங்கள்.
இனி இந்த வாரப் புதிருக்கான விடையை கண்டு பிடியுங்கள்.
புதிர் எண் - 08
"தாத்தா எப்பவும் நீங்கதான் புதிர் போடறீங்க. நாங்க விடை சொல்வோம். விடை கண்டு பிடிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்குத் தெரியணும் தானே. அதனாலே இன்னிக்கு உங்களுக்கு நாங்க புதிர் போடறோம். நீங்க விடை சொல்லணும்" என்றுசரவணன்சொல்ல,"சரி" என்று தலையை ஆட்டினார் தாத்தா.
"தாத்தா எப்பவும் நீங்கதான் புதிர் போடறீங்க. நாங்க விடை சொல்வோம். விடை கண்டு பிடிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்குத் தெரியணும் தானே. அதனாலே இன்னிக்கு உங்களுக்கு நாங்க புதிர் போடறோம். நீங்க விடை சொல்லணும்" என்றுசரவணன்சொல்ல,"சரி" என்று தலையை ஆட்டினார் தாத்தா.
"ஓடிக்கொண்டிருத்த பஸ்ஸில் ஒருத்தன் வேகமா ஓடிவந்து, ஏறினான். அவனைக் கோபமாக முறைத்துப் பார்த்த கண்டக்டரிடம் அவன் " ஸார் கோவிக்காதீங்க. நாடகத்தில் நடிக்கப்போறேன். லேட் ஆகிட்டுது. அதான் ஓடிவந்து ஏறினேன்" என்றான். "சரி சரி எங்கே போகணும்? ஆமாம் கையில் என்ன கத்தி ? யாரையாவது குத்திக் கிழிச்சிடாமே" என்ற கண்டக்டருக்கு, அவன் சொன்ன பதிலும், டிக்கெட் கேட்ட ஊரும் ஒன்று தான். அது என்னன்னு சொல்லுங்கோ" என்ற சரவணன் கேட்ட அடுத்த நொடியே தாத்தா விடையை சொல்லி விட்டார். உங்களால் சொல்ல முடியுமா ?
No comments:
Post a Comment