Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, March 30, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 18

                                                                        பசி  "கொடியது" !

கடைசி அப்ளிகேசனையும் கட்டி வைத்துவிட்டு  'அப்பாடா' என்று தோள்களைக் கைகளால் பிடித்துவிட்டபடி நிமிர்ந்து உட்கார்ந்தாள் கல்யாணி. கண்கள் கைக் கடிகாரத்தை நோட்டமிட்டது. மணி 1 . 45 . ஹாலில் அவளைத் தவிர மற்ற எல்லோருமே லஞ்சுக்கு போயிருந்தார்கள். ஹாலுக்குப் போவோமா வேண்டாமா என்று தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டாள். இந்நேரம் எல்லோருமே கிட்டத் தட்ட சாப்பிட்டு முடித்திருப்பார்கள். அதனால் டேபிளில் உட்கார்ந்தே சாப்பிட்டு விடலாம் என்ற முடிவுடன், மேஜை மீது சிதறிக் கிடந்த  பைல்களை ஓரங்கட்டினாள். 
இன்னும் பத்து நிமிசத்தில் சாப்பிட்டு முடித்து விடணும். சரியா ரெண்டு மணிக்கு மேனேஜர் வந்து எட்டிப் பார்ப்பார். நாம ஒண்ணே முக்காலுக்குத் தான் சாப்பிட உட்கார்ந்தோம்கிறது அவருக்கு தெரியாது. சாப்பாடும் கையுமா நம்மைப் பார்த்தா எரிந்து விழுவார் என்று உள்ளுணர்வு எச்சரித்தது. காலையில் ரெண்டு மணி நேரம் அடுப்படியில் போராடி சமையலை முடிக்கிறோம். அதை உட்கார்ந்து சாப்பிடக் கூட நேரமில்லாதபடி என்ன ஒரு நாய்ப் பொழைப்பு என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள்.
டிபன் பாக்ஸைத் திறந்தபோது " மேடம் " என்று குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
" என்னப்பா ? " - பசி எரிச்சலாய் வெடித்தது.
" அப்ளிகேசன் சப்மிட் பண்ணனும் " என்றான், வந்திருந்த இளைஞன் சிறிது தயக்கத்துடன். 
 " அப்ளிகேசன் வாங்கிக்கிறதுக்கான டைம் காலையில் பத்து மணிக்கே முடிஞ்சு  போச்சே".  
"சாரி மேடம்"
( "ஐயோ, எனக்கு எதையாவது சீக்கிரம் கொடேன்" என்று வயிறு அலறியது )
  " இந்த சாரிக்கு என்னப்பா அர்த்தம்"
 " சாரி மேடம் "
 " ஒரு போஸ்டுக்கு அப்ளை பண்றதுக்கே இவ்வளவு லேட்டா வர்றீங்களே, உங்களுக்கெல்லாம்  அப்பாயின்ட்மென்ட்  ஆர்டர் கொடுத்தா எத்தனை மணிக்கு ஆபீசுக்கு வருவீங்க? எத்தனை மணிக்கு வேலையை ஆரம்பிப்பீங்க ? "
 " சாரி மேடம்"
" ஏன் சார், உங்களுக்கு இந்த சாரியை விட்டா வேறு எந்த வார்த்தையுமே தெரியாதா?"   எரிந்து   விழுந்தாள்  கல்யாணி.
 "அப்ளிகேசனோடு சேர்த்து டெபாசிட் பணம் ஆயிரம் ரூபாய்க்கான டிமான்ட் டிராப்ட் வைக்கணும்னு  கன்டிஷன் போட்டிருந்தீங்க.. பணத்துக்குஏற்பாடு செய்வதில் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு".
அந்த இளைஞனை பார்க்கவே பரிதாபமாக இருந்தது கல்யாணிக்கு.
"என்னப்பா இது?  டியு டைம் முடிஞ்ச பிறகு வந்திருக்கீங்க, லஞ்ச் டைம் வேறே." என்ற கல்யாணி 'ஒரு அஞ்சு நிமிஷம் நிம்மதியா உட்கார்ந்து சாப்பிட முடிகிறதா?'  என்று தனக்குள் முணுமுணுத்தபடி அவன் நீட்டிய கவரை கையில் வாங்கினாள்.
 " தேங்க்ஸ் மேடம், ஒண்ணு  சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்கதானே?"
"சொல்லுப்பா"
" நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க!"
"எதை வச்சு சொல்றே?"
" உங்களுக்கு சாப்பாடு இருக்கு. சாப்பிட நேரமில்லை. எனக்கு அடுத்த வேளை சாப்பாடே கேள்விக் குறிதான்! " என்றான் சிறிதும் சலனமில்லாத குரலில் சிரித்தபடியே.
யாரோ நெஞ்சில் அடித்தது போன்றதொரு வலி. அந்த வலி கணப் பொழுதில் உடம்பு முழுக்க பரவியது. கல்யாணியின் கைகள், அவளையுமறியாமல், திறந்த பாக்சை மூடின.               









 

Wednesday, March 28, 2012

குட்டி பாப்பாவிற்கு குறுக்கெழுத்து புதிர் ! ( Puzzle Number - 09 )


                        பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
                        எதையும் விளையாட்டாவே   படிக்கலாம்
 
                  தெரியுமா உங்களுக்கு ?  


 (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது 8 x 8   என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

     (இந்த புதிர் அக்டோபர்  2011   கோகுலம் மாத இதழில் வெளியாகியுள்ளது )
                                   
          
         
                             
   01 
 
   
     

 


     10 
 
 
    02
    
     03 
 

  

   
  
   
11
     
   04 
 

 
   
 
   
  
     07 
 
 

  
 
  
 

  

    

 
  


    12
 


 

     08 
   

 

  

 


 
   

 
 
   

   
    14 
 

 
    13
  
     
    
    05 
 

   

 

   
    15 

  
     09 
 

  

 
   
   

   

  
 
     06 
 


மேலிருந்து கீழ்

1  மீன்களைச் சிறப்பாக வளர்க்கும் திட்டம்                            ( 7 )
2  பள்ளிகளில் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தவர்  ( 5 )
3  நமது தேசியக் கொடியிலுள்ள சக்கரத்தின் நிறம்            ( 3 )
4 உலகில் பெரும்பாலானவர்களை வாட்டும் நோய்         ( 4 )

கீழிருந்து மேல்

  5  காலை நேரத்துக்குரிய ராகம்    ( 4 )
 6  உலகில், அளவில் அதிகமாக பயிரிடப்படும் தானியம்    ( 3 )

இடமிருந்து வலம்

 1  கிழக்கு, மேற்கு தொடர்ச்சி மலைகள் சேரும் இடம்        ( 4 )
 7  நீரில்  மட்டுமே வாழும் ஆமைகளின் பெயர்                       ( 5 )
 8 கீரைகளில் அதிகமுள்ள தாது உப்பு                                         ( 4 )
 9  பறவைகளில் நீண்ட காலம் வாழ்வது                                  ( 4 )

வலமிருந்து இடம்

  6  சூரியக் கடவுள் கோவில்                                                                                 ( 4 )
10 பேச்சு வழக்கில் அதிக அளவில் பயன் படுத்தப்படும் வார்த்தை    ( 5 )
11 டென்னி காய்ட்டின் பழைய பெயர்                                                              ( 4 )
12 சரயு நதிக்கரையில் உள்ளதாக R K நாராயண் படைத்த கற்பனை ஊர்  ( 4 )
13  வெப்பத்தைக் கடத்தும், மின்சக்தியைக் கடத்தாத பொருள்            ( 3 )
14  வேகமாகப் பரவும் தொற்று நோய்                                                             ( 3 )
15  ஒரே இடத்தில் நின்றபடியே பறக்கும் ஆற்றலுடைய பூச்சி          ( 7 )

புதிருக்குள்  ஒரு மிருகம் ஒளிந்துள்ளது . கண்டு பிடியுங்களேன்.



                       
  

Friday, March 23, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 17

       

               கத்தியின்றி ரத்தமின்றி ஒரு கொலை !?

" ப்ளீஸ் டாடி, ஒன் மோர் டைம் ரீ கன்சிடர் மை கேஸ் ஆன் சிம்பதிடிக் க்ரவுண்ட். தந்தையே, தயவு செய்து இன்னும் ஒரே ஒரு முறை என்னுடைய  வழக்கை கருணையின் அடிப்படையில் மறு பரிசீலனை பண்ணுங்களேன் " என்று கொஞ்சலான குரலில் கெஞ்சினாள் நிவேதிதா.
 " நோ. நிவேது, நோ சான்ஸ். நீ இங்கிலிசில் கேட்டாலும் சரி; தமிழில் கேட்டாலும் சரி; அல்லது உனக்குத் தெரிந்த அத்தனை மொழிகளில் கேட்டாலும் சரி;  என்னுடைய முடிவில் எந்தவொரு மாற்றமும் கிடையாது. நான் முடிவு பண்ணினது பண்ணினதுதான். வருகிற ஞாயிற்றுக் கிழமை நீ உன் மாமா வீட்டுக்கு டில்லிக்குப் போகிறே. நான் ஏற்கனவே ராஜேந்திரன் அங்கிளுக்கு  மெசேஜ் அனுப்பியாச்சு. உனக்கு ப்ளைக்ட் டிக்கெட் ஏற்பாடு பண்ணியாச்சு. அதனாலே இந்த ப்ரோக்ராமில் எந்தவொரு மாற்றமும் கிடையாது. இன்னும் மூணு நாள் டைம் இருக்கு. அதுக்குள்ளே உன் பிரண்ட்ஸ் யார் யாருக்கெல்லாம் சொல்லணுமோ, சொல்லிட்டு கிளம்பற வழியைப் பாரு." என்றார் ராமகிருஷ்ணன் கண்டிப்பான குரலில்.
"மம்மி, நீயாவது சொல்லேன் மம்மி"
" என்னங்க, நமக்கு இருக்கிறது ஒரே ஒரு பொண்ணு, அவளையும் கண்காணாத தூரத்துக்கு அனுப்பணுமா? அவளை அனுப்பிட்டு,இவ்வளவு பெரிய வீட்டில் நானும் நீங்களும் ஓடிப் பிடிச்சா விளையாட முடியும்?" என்று மகளுக்காக பரிந்துரை செய்தாள் லட்சுமி.
" அப்படியொரு ஆசை, அதுதான், ஓடிப் பிடிச்சு விளையாடணுங்கிற  ஆசை உனக்கு இருந்தால் அதில் எனக்கு எந்த அப்ஜக்சனும் கிடையாது. ஓட நான் ரெடி"
"ஆமாம். இத்தனை வயசுக்கு மேலேதானே அந்த ஆசை வரப் போகுது.  இப்போ ஒரு தரம் பட்டுட்டா இல்லையா, இனிமே  எச்சரிக்கையா  இருப்பா. விளையாட்டுத் தனத்தை விட்டுட்டு நல்லா படிச்சு பாஸ் ஆயிடுவா.குழந்தை வேணும்னா ஒரு சப்ஜெக்டில் கோட்டை விட்டா? என்னவோ அவ கெட்ட நேரம். இப்படி ஆயிடுச்சு. இதுக்கு போய் குழந்தையை டில்லிக்கு அனுப்பணுமா? அதுவும் என் அண்ணன் வீட்டுக்கு. ரிடையர்ட் மிலிடரி ஆபீசர். டிசிப்ளின், டிசிப்ளின்னு சொல்லியே குழந்தையை வறுத்து எடுத்துடுவார். வீட்டை ஆர்மி கேம்ப் மாதிரி வச்சிருப்பார். நம்ம  வீட்டில் செல்லமா வளர்ந்த பொண்ணு,., அந்த கெடு பிடியை நம்ம குழந்தை தாங்க மாட்டா. கஷ்டப் படுவா. அவளை அனுப்ப வேண்டாம்"
" கஷ்டப்படணும். கஷ்டப் பட்டாதான் உலகம்னா என்னனு தெரியும். அவளை  அங்கே அனுப்பறதே அதுக்காகத்தான். நம்ம வீட்டு வாட்ச்மன் பையன். எந்தவொரு வசதியும் இல்லாத சூழ்நிலையில், நம்ம வீட்டு அவுட் ஹௌசில் இருந்து படிச்சு, இன்னிக்கு ஸ்டேட் பர்ஸ்ட் வந்திருக்கிறான், அந்த வீட்டில் நல்ல சாப்பாடு கிடையாது;  பஸ்சுக்கு காசில்லாமல் பாதி நாள் நடந்து ஸ்கூலுக்கு போகிறான்.  இவளுக்கு படிக்க ஏ சி ரூம், வெளியே போய்வர  ஏ சி கார்னு எல்லா வசதியும் செய்ஞ்சு கொடுத்ததில் திமிர்தான் ஏறி இருக்கு; படிப்பு ஏறலே;  ஸ்கூல் பர்ஸ்ட் வர வேண்டாம்;அட்லீஸ்ட் பாசாகியாவது தொலைத்திருக்கலாம். அவளுக்கு எந்த கவலையும் இல்லே; எனக்குதான் வெளியில் தலை காட்ட முடியலே. படிப்பு ஏறாத ஒரு ஜென்மத்துக்கு தண்ட செலவு செய்றதைவிட நல்லா படிக்கிற பையனை மேலே மேலே படிக்க வைக்கலாம்.எனக்கே இப்போதான் அந்த ஞானோதயம் வந்திருக்கிறது. அவனை எந்த அளவுக்கு உயர்த்தி காட்டறேன்னு பாரு. இவ டில்லிக்கு போய் கஷ்டப் படட்டும்" என்றார் ராமகிருஷ்ணன் கோபமாக.
"டாடி, போயும் போயும் ஒரு வாட்ச்மன் பையனுடன், நம்ம கிட்டே கை நீட்டி சம்பளம் வாங்கிற வேலைக்காரன் பையனுடன் கம்பேர் பண்ணி பேசறீங்க.நானும் அவனும் ஒண்ணா?" என்று இரைந்தாள் நிவேதிதா.
" ஷட் அப். கம்பேர் பண்ணி பேசக் கூட லாயக்கில்லாத பொண்ணா நீ இருக்கிறியே?"
" அப்ப நான் எப்பதான் சென்னை வர்றதாம்?"
"எக்ஸாம் டைம் வரும் போது நான் சொல்றேன். அப்ப நீ வந்தா போதும், எக்ஸாம் முடிஞ்சதும் பழையபடி டில்லி போறே, அங்கே மேற்படிப்பை கண்டினியு  பண்றே?"
" அதைவிட நான் செத்து தொலையலாம்!" என்று இரைந்தாள் நிவேதிதா.
" அது உன் இஷ்டம் " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் ராமகிருஷ்ணன்.
அவர் தலை இங்கிருந்து மறைந்ததும், "சாகிறதுக்கு நான் என்ன பைத்தியமா? இன்னும் நான் அனுபவிக்க வேண்டியது இந்த உலகத்தில் எவ்வளவு இருக்கு. அதை மிஸ் பண்ணிடுவேனா என்ன?"  என்று சொல்லி லட்சுமியின் கன்னத்தில் செல்லமாக கைகளால் தட்டி விட்டு ரூமுக்குள் சென்றாள் நிவேதிதா.
வெளியில் வீராப்பாக பேசிவிட்டு வந்தாலும்,  மனதுக்குள் அழுகையும் ஆத்திரமும் ; போட்டி போட்டுக் கொண்டு வந்தது.
ப்ளஸ் டூ ரிசல்ட் வந்த அன்றே பத்திரிக்கை காரர்களும் மீடியாக்களும் போட்டி போட்டுக் கொண்டு படம் எடுத்ததென்ன? அவர்கள் முன்னிலையில் அப்பா அவன் தோளில் கை போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்ததென்ன?  பர்சைத் திறந்து, கையில் என்ன வருகிறது ஏது வருகிறது என்பதைக்கூட பார்க்காமல் பாலுவின் கையில் திணித்ததென்ன? ஒரே நாளில், ஒரு செல்லாக்காசு ஹீரோ ஆகிவிட்டதையும், தான் ஒரு செல்லாக்காசு ஆகிவிட்டதையும் நினைத்து எரிச்சல் பட்டுக் கொண்டிருக்கையில், எரிகிற நெருப்பில் எண்ணை வார்ப்பது போல, அவள் செல்ல டாடி, அவளை, மாமா என்ற ஒரு உறவு முறையில் இருக்கிற ஒரு ராட்ஷசன் வீட்டுக்கு அனுப்புவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ரூமுக்குள் அடைபட்டுக் கிடப்பது பிடிக்கவில்லை.
"மம்மி, என்னோட பிரண்ட்சுக்கு நான் டில்லி போற விசயத்தை சொல்லிட்டு வர்றேன் " என்று சொல்லிக் கிளம்பினாள்.
அவளைப் பார்த்ததுமே "டீ, நிவேது, உன்னைப் பார்த்தால் பாவமா இருக்குடி " என்றது பிரண்ட்ஸ் சர்கிள்.
"ஒரு சின்ன கரெக்சன். பாவமா இருக்குன்னு சொல்லாதீங்க, பொறாமையா இருக்குனு சொல்லுங்க. நான் ப்ளைட்டில் டில்லிக்கு பறக்கப் போறேன் " என்றாள் நிவேதிதா.
"போடி கழுதை, சும்மா ரீல் விடாதே; எங்களுக்கு எல்லா விசயமும் தெரியும்" என்று மட்டந் தட்டிய தோழியரிடம் " எல்லாமே தெரியுமா?" என்று பரிதாபமாக கேட்டாள் நிவேதிதா.
" ஆமாம்" என்ற குரல் கோரசாக வந்தது.
" சரி வாங்கடி,ரெஸ்டாரென்ட் போகலாம்" என்று அனைவரையும் வெளியில் அழைத்து வந்த நிவேதிதா, எதிர் திசையில் பாலு போவது தெரிந்ததும், ட்ராபிக்கைக் கூட பொருட் படுத்தாமல், " பாலு" என்று குரல் கொடுத்தபடி ஓடினாள்
"ஏம்மா இப்படி ஓடி வர்றீங்க? அங்கிருந்து குரல் கொடுத்தா நான் வந்திருப்பேனே?" என்றான் பாலு பணிவாக.
"நான் டில்லி போறேன்"
"தெரியும்"
அதற்குள் அவுட் ஹவுஸ் வரை விஷயம் போயிட்டுதா என்று மனசுக்குள் கறுவிக்   கொண்டாள்.
"உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்"
"சொல்லுங்கம்மா"
" என்ன இது அம்மா சும்மான்னு? செல்லமா "நிவி" என்று நீ கூப்பிடணும். அதுதான் எனக்கு பிடிக்கும். நான் இவ்வளவு நாளும் உன்னோட பேசினது கிடையாது, பழகினது கிடையாது;  ஆனால் என் வீட்டு ஜன்னல் வழியா நான் உன்னைத்தான் தினமும் பார்த்திட்டுருப்பேன்.  ஆனால் நீ என்னை ஏறேடுத்து கூட பார்த்தது இல்லை. இப்போ நான் டில்லி போறேன். இப்போ கூட என் மனசில் உள்ளதை உன்கிட்டே நான் சொல்லாட்டா, நீ என்னை புரிஞ்சுக்காமலே போயிடுவே. அதான் சொல்றேன். 'பாலு, ஐ லவ்  யூ பாலு. என் மனசு முழுக்க நீதான் இருக்கிறே. கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது ஒன்னோட மட்டுந்தான்" என்று சொல்லி நிவேதிதா நிறுத்த அதிர்ந்து போனான் பாலு.
"என்னங்க சொல்றீங்க? எங்க அப்பா உங்க வீட்டு வேலைக்காரன் !"
" சோ வாட் ?"
" என் மனசில் அப்படி ஒரு எண்ணம் இல்லை. ஏழை தன்னுடைய தலையில் குல்லா வைக்க ஆசைப் படலாம். கீரீடத்துக்கு ஆசைப்படக்கூடாது."
"இந்த  மாதிரி பேசினா அப்புறம் நான் செத்துப் போயிடுவேன்"
" நான் "எஸ்" சொன்னா, அது   உங்க அப்பாவுக்கு செய்கிற துரோகம்"
" இதோ பாரு, என்னோட ஆப்சென்சிலாவது என்னோட அன்பைப் புரிஞ்சுக்கோ. எனக்கு ரொம்பவும் பிடிச்ச நம்பர் பதினெட்டு. படிக்கிறதுக்காக நீ புக்கை திறக்கிறப்போ உனக்கு  "பதினெட்டு" ஞாபகம் வரணும். கூடவே என்னோட ஞாபகமும் வரணும். இப்போ நான் வர்றேன், பை " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து திரும்பவும் தோழியர் நிற்கும் இடத்துக்கு ஓடி வந்தாள் நிவேதிதா.
"அந்த பாலுகூட உனக்கு அப்படி என்னடி பேச்சு?. சண்டை போடுவே, திட்டிட்டு வருவே அப்படின்னு நினைச்சு நாங்க வேடிக்கை பார்க்க தயாரா இருந்தோம் . நீ போய் குழைஞ்சிட்டு வர்றே?"
"அவன்கிட்டே போய் "ஐ லவ்" சொல்லிட்டு வந்தேன்"
" உனக்கென்னடி பைத்தியமா?"
"பைத்தியம் எனக்கில்லே. இனி பைத்தியம் ஆகப் போறது அவன்தான். இனிமே அவன் புக்கைத் திறந்தா, அதிலுள்ள எழுத்து அவன் கண்ணில் தெரியாது. கலர், கலர் உடையில், வண்ணத்து பூச்சி மாதிரி நான்தான் பறந்து பறந்து வருவேன். இனிமே அவனாவது உருப்படியா படிச்சு பாஸ் ஆகிறதாவது. இவன் பேரை சொல்லிதானே எங்க டாடி என்னை மட்டம் தட்டினார். எங்க டாடி மனசிலிருந்து இவனை தூக்கி எறியறேன். வாங்கடி...அந்த குப்பையைப் பத்தி ஏன் பேசணும். இந்த சந்தோசத்தை ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக் கொண்டாடலாம்" என்று தோழியர் புடை சூழ ஐஸ் க்ரீம் பாருக்குள் நுழைந்தாள் நிவேதிதா.

Sunday, March 18, 2012

குட்டி பாப்பாவிற்கு குறுக்கெழுத்து புதிர் ! ( Puzzle Number - 08 )


                        பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
                        எதையும் விளையாட்டாவே  படிக்கலாம் 


அரசர்கள் ஆண்ட காலத்தை நினைவு படுத்திப் பார்க்கலாமா ?

 
                   
         (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது 8 x 8   என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

                                              
          
         
                             
   08
 
    
     

 


     03 
 
 
   
    
  
 

  
    09
   
  
   

     
  
 

 
    01
 
     02
  

 
 

  

  
 

  

    

 
  


    12
 


 

     10
   

 

  

 


 
   

 
 
   

   
   13 
 

 

  
     
    
   
 
    11
   

 

   
   

  
    04 
 
     05 
  
     06 
 
   
   

   

   07 
 
    
 


மேலிருந்து கீழ்

1  சிற்றரசர்கள் பேரரசர்களுக்கு செலுத்துவது                      ( 4 )
2  பணிப்பெண்                                                                                      ( 2 )
3 அரசரது வருகையை பறையடித்து கூறுபவன்                  ( 8 )

கீழிருந்து மேல்

4  ராஜ துரோகத்துக்கு அளிக்கப்படும் அதிக பட்ச தண்டனை    ( 6 )
5  மக்களிடமிருந்து  வசூலிக்கப்பட்டது                                               ( 2 )
6  ராஜா " = = = = " என்றும் அழைக்கப் பட்டார்                                     ( 4 )
7 ராஜாவின் எண்ணங்களை எதிரிநாட்டுக்கோ, நட்பு நாட்டுக்கோ
    எடுத்து சொல்பவன்                                                                                 ( 4 )
           

இடமிருந்து வலம் 

  2  படைத்தலைவன்                                                                                      ( 5 )
  6  அரசனின் ஆலோசகர்                                                                            ( 4 )
  8 அரச குடும்பத்தினர் மட்டுமே ஏறி செல்லும் தும்பிக்கை மிருகம்      ( 7 )
 9  ராணி                                                                                                               ( 3 )    
10  உளவறிந்து சொல்பவன்                                                                       ( 4 )
11  பாதுகாப்பு வீரர்கள் கையிலிருந்த ஆயுதம்                                   ( 3 )   

வலமிருந்து இடம் 

  9 ராஜகுடும்பத்தினர் இருப்பிடம்                                                        ( 5 )
12 படை  வீரனுக்கு இன்னொரு பெயர்                                              ( 4 )
13 மதில் சுவரைச்சுற்றி பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டது   ( 3 )             
     (முதலைகள் இருந்தன ),
               

Friday, March 16, 2012

Stories told by Grand - Ma ( Story Number 11 )

                         
விசுவாசம் !
 மனிதன் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் " என்று பாடிக்கொண்டே ஷுக்கு பாலிஸ் போட்டுக் கொண்டிருந்தான் பிரபு.
"பாட்டி, அண்ணா பாடறானே, மனிதன் பாதி மிருகம் பாதின்னு, இந்த ரெண்டு பேர்லே யார் நல்லவங்க பாட்டி?" என்று கேட்டாள் மனோ.
"மனிதனாகட்டும், மிருகமாகட்டும். அவங்கவங்கஎல்லையிலே,சுதந்திரத்திலே மத்தவங்க தலையிடாதவரை நல்லவங்களாத்தான் இருப்பாங்க" என்றாள் பாட்டி.
 " இது அதுன்னு மழுப்பற வேலையெல்லாம் வேண்டாம். இது இல்லாட்டா அதுன்னு குறிப்பா ஏதாவது ஒரு பதிலை மட்டும் சொல்லு " என்றாள் மனோ.
" சரி நான் ஒரு கதை சொல்றேன். அதை வச்சு யார் நல்லவங்கனு நீயே முடிவு பண்ணிக்கோ" என்று பாட்டி சொன்னதுமே " அண்ணா, பாட்டி கதை சொல்லப் போறா" என்று மனோ குரல் கொடுக்க, கையிலிருந்த ஷூவை வீசி எறிந்துவிட்டு ஓடி வந்து பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு " சொல்லு, என் தங்க பாட்டி"  என்றான் பிரபு .
"ஒரு ஊரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் தினமும் காட்டுக்கு போய் விறகு வெட்டிட்டு வந்து அக்கம் பக்கத்து ஊர்களிலும் சந்தையிலும் விற்று காசாக்கி அந்த பணத்திற்கு வீட்டுக்கு வேண்டிய பொருளை வாங்கிட்டு வருவான். ஒருநாள் அவன் விறகு வெட்டிட்டு இருக்கும்போது "ஓ"ன்னு ஒரு இனம் புரியாத சத்தத்தை கேட்டான். அந்த சத்தம் எங்கிருந்து வருதுன்னு தெரிஞ்சுக்க சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்த சத்தம் ஒரு குழிக்குள்ளிருந்து வருவது தெரிஞ்சு குழிக்குள் எட்டிப்பார்த்தான். அந்த குழிக்குள் ஒரு மனிதன் இருந்தான். ஒரு சிங்கம், ஒரு நாகம், ஒரு நாயும் இருந்ததை கண்டான். தனக்கு உதவி செய்ய சொல்லி அந்த மனித அழ, மற்ற மிருகங்களும் தங்களை வெளியில் எடுத்து விடும்படி அவனிடம் கெஞ்சின. விறகுவெட்டி யோசித்தான். 
அதை கண்ட மிருகங்கள், "எங்களுக்கு உதவி செய். நாங்கள் உனக்கு ஒரு கெடுதலும் செய்ய மாட்டோம்.  எங்களால் முடிந்த உதவியை உனக்கு செய்வோம்" என்றன. 
இந்த விலங்குகள் அப்படி என்ன பெரிய உதவியை தனக்கு செய்துவிடப்போகின்றன என்று விறகுவெட்டி கேலியாக நினைத்தாலும், இந்த குழிக்குள் விலங்குகள் மட்டுமல்லாமல் ஒரு மனிதனும் இருக்கிறான். மனிதனுக்கு மனிதன் உதவா விட்டால் வேறு யார் உதவுவார்கள் என்று நினைத்துக்கொண்டு, அந்த மனிதனும், மிருகங்களும் வெளியில் வருவதற்கு உதவி செய்தான்.
 "நீ செய்த உதவியை மறக்க மாட்டோம். உனக்கு கண்டிப்பா  எங்களால் முடிந்த உதவி செய்வோம்'னு சொல்லிட்டு மிருகங்கள் போயிட்டுது. 
"எனக்கு போக இடமும் இல்லே. எனக்கு உறவென்று யாரும் இல்லே. இந்த கவலையில்தான் கால் போன போக்கில் நடந்து வந்து இந்த குழிக்குள் நான் மாட்டிகிட்டேன். இப்போ நான் எங்கே போவேன்"னு சொல்லி அந்த மனுஷன் அழுதான். 
அவனுக்காக வருத்தப்பட்ட விறகு வெட்டி அவனை தன்னோட வீட்டுக்கு கூட்டி வந்து தன்னோடே வச்சுகிட்டான்.
ஒருநாள் அவனை தேடி வந்த நாகம் அவனுக்கு விலை உயர்ந்த நாக ரத்தினத்தை குடுத்துட்டு போச்சு. அதை நல்ல விலைக்கு விற்று கிடைத்த பணத்தில் ஒரு வியாபாரத்தை ஆரம்பித்தான். அந்த மனுஷனையும் வியாபாரத்தில் சேர்த்துகிட்டான் விறகு வெட்டி. 
தான் வேட்டையாடிய விலங்குகளின் மாமிசத்தை அந்த விறகுவெட்டிக்கு கொண்டு வந்து தந்தது சிங்கம்.
 அந்த நாயோ விறகு வெட்டிக்கு காவலா எப்பவும் அவன் கூடவே இருந்தது. ஒரு சமயம், அந்த மனுசனை நம்பி வியாபாரத்தை விட்டுட்டு வெளியூர் சென்றிருந்தான் விறகுவெட்டி. நாயும் அவனுடன் போயிருந்துச்சு. 
சில நாட்கள் கழிச்சு வெளியூரிலிருந்து திரும்பி வந்த விறகு வெட்டி தன்னுடைய  வீட்டிலும் கடையிலும் எந்த ஒரு பொருளும் இல்லாததைக் கண்டு திகைச்சு போனான். அந்த மனுஷனையும் காணலே. தன்னை ஏமாற்றி விட்டு அந்த மனுஷன் ஓடிட்டான்கிதை விறகுவெட்டி புரிஞ்சுகிட்டான். அவனுக்கு ரொம்பவும் வருத்தமாயிருந்தது. கவலையோடு வீட்டில் இருந்தான். அப்போ அவனை பார்க்க நாகமும் சிங்கமும் வந்துச்சு. அவன் கவலையாயிருக்கிறான் என்பதை தெரிஞ்சுகிட்டு, என்ன காரணம்னு ரெண்டும் அவன்கிட்டே கேட்டுச்சு. விறகுவெட்டி உண்மையான காரணத்தை அதுங்க கிட்டே சொல்லாமல், 'ஒண்ணுமில்லேன்'னு சொல்லிட்டான்.
பலமுறை அவை கேட்டும் இவன் நடந்ததை சொல்லலே. நாகமும் சிங்கமும் போயிட்டுது. அது ரெண்டும் போனப்புறம் அந்த நாய் விறகுவெட்டியிடம்," அது ரெண்டும் அவ்வளவு தூரம் கெஞ்சி கேட்டுச்சே . நீ நடந்ததை அதுங்க கிட்டே சொல்லி யிருக்கலாமே'ன்னு.
அதுக்கு அந்த விறகுவெட்டி சொன்னான், " சொல்லி இருக்கலாம்தான். சொன்னா அவை திரும்பவும் எனக்கு உதவி செய்யும். ஆனால் அவைகளுக்கு மனிதர்களிடம் நம்பிக்கையோ விசுவாசமோ ஏற்படாது. அதனால்தான் சொல்லலே"ன்னு" என்று சொல்லி  கதையை முடித்த பாட்டி "இப்போ சொல்லுங்க. யார் நல்லவங்கன்னு, மனிதனா, மிருகமா" என்று கேட்க
"சந்தேகமே இல்லே பாட்டி. மிருகங்கள்தான் நல்லவங்க" என்றான் பிரபு.
"இல்லே பாட்டி. மனிதன்தான் நல்லவன். தான் நஷ்டப்பட்ட பிறகும் கூட,  மிருகங்களிடம் மனிதர்களை பத்தி தாழ்வா சொல்லக்கூடாதுன்னு நினைச்ச மனிதன், அதுதான் அந்த விறகு வெட்டிதான் நல்லவன்'னு மனோ சொன்னாள்
"நான் இதப்பத்தி எதுவுமே சொல்லப்போதில்லே. முடிவை உங்ககிட்டே விட்டுட்டேன். யார் உயர்ந்தவங்கன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க" என்று பாட்டி சொல்ல,
"மனிதன் நிறைய மிருகம் கொஞ்சம் கலந்து செய்த கலவை நான்'னு மனோ பாட,
 "மனிதன் கொஞ்சம் மிருகம்  நிறைய கலந்து செய்த கலவை நான்"னு பிரபு பாட, "ரெண்டுமே நல்லாத்தான் இருக்கு" என்றாள் பாட்டி .