அன்பு சகோதரிகளே உங்களிடம் இந்நாளில் ஒரு அன்பான வேண்டுகோள்.
இன்றைய நாளில் விண்ணில் பறக்கும் பெண்களின் சாதனைகள் வியக்க வைக்கின்றன.
ஆணுக்குப் பெண் நிகரென்று கூறடி தங்கம் என்பதை நிரூபிக்கிறார்கள் பெண்கள். வாழ்த்துக்கள்.
அந்த பட்டியலில் இருக்கும் பெண்கள் வெகு சிலரே.
உலகமெங்கும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் மாயையை உண்மை என்று நம்பி மாயவலையில் சிக்கி சீரழிந்த பெண்களை சேனல்கள் தினமும் படம் பிடித்துக் காட்டுகின்றன.
பெண்ணைப் பொன் போன்று மதித்து பாதுகாப்பில் வைத்தது இந்நாடு.
பெண்ணின் மீது விதிக்கப்பட்ட வரைகோடுகளும், கட்டுப்பாடுகளும் அவர்களது பாதுகாப்பு கருதியே !
தடைகளைத் தகர்த்து எறியலாம். கட்டுப்பாடுகளை அல்ல.
அதை புரிந்து நடந்து கொள்வோம்.
நியாயமான கட்டுப்பாடுகளை, தளைகளை அறுத்தெறிய வீண் முயற்சி செய்ய வேண்டாம்.
தகரத்தை பெட்டியில் வைத்துப் பூட்டுவோர் கிடையாது. தங்கத்தைத் தான் அதன் மதிப்பு கருதி பாதுகாப்பாக வைக்கிறார்கள்.
எனவே பெண்ணின் பாதுகாப்பு கருதி சொல்லப்படும் விஷயங்களை காது கொடுத்துக் கேளுங்கள். ஏனென்றால் இது மனிதன் என்ற போர்வையில் மிருகங்கள் வாழும் நாடு.