எனக்கொரு சந்தேகம். அதை கீழே விவரிக்கிறேன் விவரம் தெரிந்தவர்கள் எனக்கு பதில் சொல்லுங்கள்.
சமீப காலமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ஒரு செய்தி என்னை ரொம்பவே தொல்லைப்படுத்துகிறது.
அதானி குழுமம் பற்றிய செய்திதான் அது.
உலகப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் அவர் இருப்பதாக சொல்கிறார்கள். இந்திய வங்கிகளுக்கு அவர் செலுத்த வேண்டிய கடன்கள் எத்தனை எத்தனை கோடி என்பதையும் பட்டியலிடுகிறார்கள். (அவர் நிறுவனத்தை நம்பி வாழ்பவர்கள் பல லட்சம் பேர். அதையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். எண்ணிப்பார்க்க வேண்டும்)
பல கோடிக்கணக்கான அளவுக்கு கடனில் உள்ளவர் எப்படி உலகப் பெரும் பணக்காரர் லிஸ்ட்டில் இடம் பெற முடியும்.
இதுதான் என் குழப்பத்திற்கு காரணம்.
ஒன்று மட்டும் புரிகிறது: - என்னவோ நடக்குது; மர்மமா இருக்குது!