என்னுடைய சிறு வயதில் நான் அடிக்கடி கேட்டுப் பழகிப்போன வார்த்தை, 'இந்த கஷ்டம் பின்னாளில் ஒரு நல்லதை செய்யலாம். எப்பவும் கஷ்டத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால் அது சொல்லிக்கொடுத்த பாடத்தை மறக்காதே".
இதை அடிக்கடி சொன்னது எங்கள் வீட்டின் அருகில் குடியிருந்த ஒரு பள்ளி ஆசிரியை. அவர்கள் சொல்லும் ஒன்றை என்னால் செய்யமுடியாது என்று நான் தயக்கத்தோடு சொல்லும் போதெல்லாம் இதே டயலாக்கை அடிக்கடி சொல்வார்.
"இதோ பாரு புள்ளே... நல்லது கெட்டது, சந்தோசம் துக்கம், இன்பம் துன்பம் எல்லாமே இரண்டும் இணைந்தேதான் வரும். ஆனால் அதைப் பிரித்து அறிவது கடினம். ஆனால் ஒன்றின் முடிவில் இன்னொன்றின் ஆரம்பம் நிச்சயம் உண்டு. எது முன்னாடி வரும்; எது பின்னாடி வரும் என்பது தெய்வ ரகசியம். ஒன்று நடக்கணும்னு விதி இருந்தால் அது கண்டிப்பாக நடந்தே தீரும் " என்று விளக்கம் சொல்வார்.
என்னுடைய இளவயதில், நான் முதல்முதலாக பார்த்த மேடை நாடகம் வண்டிக்காரன் மகன் (1969 ம் வருடம் என்று நினைக்கிறேன். வருடம் சரியாக நினைவில் இல்லை) திருநெல்வேலியில் ஒரு பொருட்காட்சியில் நாடகம் நடத்த திரைப்பட வில்லன் நடிகர் (மறைந்த) அசோகன் வந்திருந்தார். அந்த நாடகத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி : அசோகனின் மகனாக நடிப்பவர் "அப்பா.. உங்களை அந்த நிலையில் பார்த்ததும் நான் துன்பத்தின் எல்லைக்கே போய்விட்டேன்." என்று சொல்ல, "அப்படியா.. துன்பத்தின் எல்லைக்கே போய்விட்டாயா.. அப்படி யென்றால் நீ மிகவும் கொடுத்து வைத்தவனடா மகனே... துன்பத்தின் எல்லையில், முடிவில்தானே இன்பம் ஆரம்பமாகிறது. ஒன்றின் முடிவில்தான் இன்னொன்றின் ஆரம்பம் " என்று அசோகன் சொன்னார்.
இதைக்கேட்டதும் அந்த டீச்சரைத்தான் நினைத்துக் கொண்டேன்.
ஒரு கிளைக்கதை (Branch Story)
2015 ம் ஆண்டு வந்த புயல் வெள்ளம், அழிவை ஏற்படுத்தியதோடு நல்ல மனித உள்ளங்களை அடையாளம் காட்டிவிட்டுப் போனது. (மூன்று நாட்கள் வீட்டை விட்டு வெளிவரமுடியாமல் வெள்ளம் சூழ்ந்த வீட்டில் முடங்கிக் கிடந்தோம். சில முஸ்லீம் அன்பர்கள், பரிசல் கொண்டு வந்து எங்களை அங்கிருந்து வெளியேற்றி, காஃபி, பிஸ்கெட் கொடுத்து உபசரித்தது மட்டுமல்லாமல். எனது அம்மாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒரு ஆம்புலன்ஸ் வரவழைத்தார்கள். "எங்களை தாம்பரத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டால் போதும். என்னுடைய தம்பி கார் கொண்டு வந்து அங்கிருந்து எங்களை அழைத்து செல்வார்" என்றேன். அவர்கள் அப்படியே செய்தார்கள். தாம்பரத்தில், sub way அருகில் உள்ள கோயில் வாசலில் தம்பியின் வருகைக்காக காத்திருந்தோம். மழை ஆரம்பித்து விட்டது. அம்மாவுக்கு குளிரில் உடல் நடுக்கம் ஆரம்பித்து விட்டது. அம்மா வயது 90. அம்மாவை கோவில் உள்ளே அழைத்துச் சென்று மழைத்தண்ணீர் படாத இடத்தில் நிற்க வைத்தேன். (கோவிலின் உட்பக்கம்கூட போகவில்லை. அங்கிருந்த ஒரு நடைப்படியில் நிற்க வைத்தேன். என்னைப்போல் சிலரும் அங்கு வந்தார்கள். அங்கு வந்த ஒரு குருக்கள், "எல்லாரும் வெளியே போங்க.. நடை சாத்தணும்" என்று சொல்லி எல்லோரையும் வெளியேற்றினார். ஜாதிமத பேதம் பார்க்காமல், யாரும் அழைக்காமலே வீடு தேடி வந்து உதவி செய்த அவர்கள் எங்கே! இந்த மனிதாபிமானமற்ற ஜென்மம் எங்கே என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.
இனி Main storyக்கு வருவோம். இந்த கொரோனா கூட திரும்பி போகும்போது சில அற்புதங்களை செய்துவிட்டுப் போகும் என்று நினைக்கிறேன். CORONA என்கிற வார்த்தையின் எழுத்துக்களை அப்படியே (ரிவர்ஸில்) திருப்பிப் போட்டுப் பாருங்கள். ANOROC என்ற சொல் வரும்.
ANOROC என்பது சீன மொழி சொல்லாம். அதை இப்படியும் அர்த்தம் செய்து கொள்ளலாம் என்று ஒரு இணையதளம் சொல்கிறது. உண்மையான அர்த்தம் தெரியாவிட்டாலும், எழுத்துக்களைப் பிரித்து அர்த்தம் கொள்ளும்போது படிக்க இன்ட்ரெஸ்ட் ஆக இருந்தது. அதை உங்கள் பார்வைக்கும் பதிவு செய்கிறேன்..
A is for athleticism, embrace the competitor within
N is for neighborly, friendly to all acquaintances
O is for ornate, nothing plain here!
R is for refreshing, the sparkling you.
O is for optimistic, look at the bright side!
C is for casual, no pretension here.