Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, May 14, 2020

குழப்புகிறீர்களே மை லார்ட் ..


பொருட்கள் வாங்க வரிசையில் நிற்கும்போது கையில் குடை இருக்க வேண்டும். குடை இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று சில நாட்களுக்கு முன்னால் சொன்னார்கள். (வரிசையில் நின்று கொண்டிருந்த கேரள மக்கள் அநேகர் கையில்  கறுப்பு வண்ண குடை இருந்தது). பொதுவாக குடையின் நிறம் கறுப்பு என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. பேஷனுக்காக பல வண்ணங்கள், பல டிஸைனில் குடைகள் வருகிறது. ஆனால் அநேகர் உபயோகிக்கும் குடையின் நிறம் கறுப்புதான். ஏனென்றால் கறுப்பு நிறம் வெப்பத்தை ஊடுருவ விடாது என்று எங்கோ எப்போதோ படித்ததாக ஞாபகம்.
இன்றோ கறுப்பு நிறத்தில் கொரோனாவின் ஊடுருவல் அதிகம் உள்ளது. அதனால் கறுப்பு நிறத்தை தவிர்த்து வெள்ளை உடையை வக்கீல்கள் அணிய வேண்டும் என்று சேனல் செய்தி சொல்கிறது.
நானெல்லாம் முட்டாள்களின் வரிசையில் முதல் இடத்தில் நிற்கிற ஆள். அதனால் எது சரின்னு கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க  மை லார்ட் ..

No comments:

Post a Comment