பொருளாதாரத்தை மேம்படுத்த சீர்படுத்த ஆளாளுக்கு தலையைப் பிய்த்துக் கொண்டு யோசிக்கிறீங்களே.. நான் ஒரு சிம்பிள் method சொல்லட்டுமா..
ரொம்ப ஈஸிங்க....ரொம்ப ரொம்ப ஈஸி....
மதுக்கடை திறந்ததும் வருமானம் பல கோடிக்கு தாண்டியது. ஒரு சில காரணங்களால் மூடப்பட்டது ... ஓகே.
மதுவுக்கு நிகரான போதை தருவது காசு.. பணம்... துட்டு.... துட்டு ......
அது உழைக்காமல், ஒரு சில ஆயிரம் மூலம் ஒரு சிலர் கைக்கு கிடைக்கும் என்பது தெரிந்தால் அதை அடைய நான் நீ என்ற போட்டியும் இருக்கும்.
லாட்டரி சீட்டு நடத்தலாம். ஒரே ஒருமுறை மட்டும்.. டிக்கெட் விலை ரூபாய் ஆயிரம்.. முதல் பரிசு மட்டும் ஆயிரம் கோடி.. அதில் ஒரு நயாபைசா கூட பிடித்தம் செய்யாமல், பரிசுத் தொகை அப்படியே பரிசுக்குரியவர்க்கு கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு செய்துவிட்டு அதன்பின் நடப்பதைக் கவனியுங்கள்.
ஆறுதல் பரிசு என்று ஆயிரம் பேருக்கு ஒரு சில கோடிகள் அல்லது லட்சம் கொடுக்கலாம்.
மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் கொடுத்த ஒவ்வொரு ஆயிரமும் அப்படி அப்படியே அரசின் கஜானாவுக்கு வந்து சேர்ந்து விடும். அப்புறம் கஜானாவை வைக்க தனி கல்யாண மண்டபம் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
அதென்ன ஆயிரம் கோடி...?
அங்கே அத்தனை கோடி ஊழல் ... இங்கே இத்தனை கோடி ஊழல் என்கிற வார்த்தைகளைக் கேட்டுக்கேட்டு லட்சம், ஒரு கோடி, நூறு கோடி என்பது எல்லாம் நாட்டில் சர்வ சாதாரணமான வார்த்தையாகி விட்டது.
ஆயிரம் கோடி என்பது கொஞ்சம் கவர்ந்திழுக்கும் விஷயமாக இருக்கும். ஒரே ஒருமுறை மட்டுமே நடத்த வேண்டும். வருமானத்துக்காக அதை நீள விட்டால் அதுவும் போதை வஸ்துவாகி விடும். கபர்தார்...
(எதனால் ஆயிரம் என்று குறிப்பிடுகிறேன் என்பதன் வேறொரு தகவலும் உண்டு.
ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே ஆரம்பம் ஆனது மனித இனம்.
ஆயிரம் சொல்லு.. அவங்களைப் போல வருமா?
கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்
அவனவன் ஆயிரம் சொல்வான்.. அதைப் பத்தியெல்லாம் கவலைப்பட முடியுமா ?
ஆயிரத்தில் ஒருவன்.. ஆயிரத்தில் ஒருத்தி..
இப்படியாக ஆயிரம் என்ற எண்ணுக்கு நம்ம ஜனங்க ரொம்பவுமே முக்கியத்துவம் கொடுத்து வச்சிருக்காங்கதானே!!??)
No comments:
Post a Comment