குறுக்கெழுத்துப் புதிர் எழுதுவதில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பாணி (STYLE ) என்ற ஒன்று உண்டு. ஏதாவது ஒரு குறிப்பிட்ட SUBJECT ல் அனைத்து கட்டங்களும் நிரம்பும் விதத்தில் புதிர் எழுதுவது எனது தனிப்பட்ட பாணி. அந்த வரிசையில் இதுவரை 6 புதிர்கள் வெளியாகியுள்ளன. இன்னும் 44 புதிர்கள் வெளியாக உள்ளது. ( அனைத்து புதிர்களும் பிரசுரமானதும் விடைகள் தனியாக பிரசுரமாகும்.)
ஒரு குறிப்பிட்ட SUBJECT ல் அனைத்து கட்டங்களும் நிரம்பும் விதத்தில் தமிழ் மொழியில் குறுக்கெழுத்துப் புதிர் எழுதும் முதல் நபர் , ஒரே ஒரு நபர் நான்தான் என்று எனது நண்பர்கள் சொல்கிறார்கள். அது உண்மைதானா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு முன்பாக இதே முயற்சியை வேறு யாராவது செய்திருந்தால், அது பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியுமானால், அதை எனக்கு தெரிவிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்பு கொள்ள : 9840360475 ( INDIA )
arunasshanmugam@gmail.com
நன்றியுடன்,
அருணா S சண்முகம்
No comments:
Post a Comment