திருப்பாவை - 05
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.
திருவெம்பாவை - 05
மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
-
- போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறு கடைதிறவாய்
-
- ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட் கொண்டருளி கோதாட்டுஞ்
-
- சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
-
- ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்
No comments:
Post a Comment