Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, December 21, 2019

மார்கழித் திங்கள் - 06


திருப்பாவை - 06
புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில் 
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

திருவெம்பாவை - 06
மானேநீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

மேலே உள்ளது போன்ற (Light Effect கொடுத்து வடிவமைக்கப் பெற்ற) மேலும் பல கோலங்களை எனது மற்றொரு தளமான 

https://ARUNA S. SHANMUGAM.BLOGGER என்பதில் காணலாம். அதில் display ஆகும்   Art Weaven kolams, Deepam and Light Effect, Nelivu kolam, rangoli, Sangu kolam   என்ற வார்த்தைகளில் click செய்தால் கோலங்களைக் காணமுடியும்.

  • A

No comments:

Post a Comment