Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, December 17, 2019

மார்கழித் திங்கள் - 02


திருப்பாவை - 02
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
     செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
     நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
     செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
     உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை - 02
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்

(குறிப்பு: மேலே உள்ளது போல கம்ப்யூட்டரில் டிஸைன் செய்யப்பட்ட (15 - 8 புள்ளிகள்) 1008 கோலங்களை எனது www.chennai.1colony.com ல் பார்க்கலாம். அத்தனையும் கம்ப்யூட்டரில் உள்ள paint software கொண்டு டிஸைன் செய்யப்பட்டவை. அந்தக்கால பொங்கல் கொண்டாட்டம் எப்படி இருந்திருக்கும் என்று அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இதே தளத்தில் "அன்று பொங்கிய பொங்கல் " என்ற தலைப்பில் காணலாம்.)

No comments:

Post a Comment