திருப்பாவை - 01
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம் ;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.திருவெம்பாவை - 01
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
-
- சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
-
- மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
-
- போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே
-
- ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்
(குறிப்பு: மேலே உள்ளது போல கம்ப்யூட்டரில் டிஸைன் செய்யப்பட்ட (15 - 8 புள்ளிகள்) 1008 கோலங்களை எனது www.chennai.1colony.com ல் பார்க்கலாம். அத்தனையும் கம்ப்யூட்டரில் உள்ள paint software கொண்டு டிஸைன் செய்யப்பட்டவை. அந்தக்கால பொங்கல் கொண்டாட்டம் எப்படி இருந்திருக்கும் என்று அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இதே தளத்தில் "அன்று பொங்கிய பொங்கல் " என்ற தலைப்பில் காணலாம்.)
No comments:
Post a Comment