Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, December 16, 2019

மார்கழித் திங்கள் - 01


திருப்பாவை - 01

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம் ; 
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! 
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! 
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், 
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் 
நாராயணனே, நமக்கே பறைதருவான், 
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

திருவெம்பாவை - 01
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்

(குறிப்பு: மேலே உள்ளது போல கம்ப்யூட்டரில் டிஸைன் செய்யப்பட்ட (15 - 8 புள்ளிகள்) 1008 கோலங்களை எனது www.chennai.1colony.com ல் பார்க்கலாம். அத்தனையும் கம்ப்யூட்டரில் உள்ள paint software கொண்டு டிஸைன் செய்யப்பட்டவை. அந்தக்கால பொங்கல் கொண்டாட்டம் எப்படி இருந்திருக்கும் என்று அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இதே தளத்தில் "அன்று பொங்கிய பொங்கல் " என்ற தலைப்பில் காணலாம்.)

No comments:

Post a Comment