எல்லாம் வல்ல இறைவா போற்றி..
தமிழ்நாட்டில் என்னைப் பிறக்க வைத்தமைக்காக போற்றி போற்றி ..
தினசரி நாளேடுகளைப் பிரித்தாலோ, செய்தித் தொலைக்காட்சிகளில் பார்வையை ஓட விட்டாலோ கண்ணில் படுவதெல்லாம் கொலை, கொள்ளை, வன்முறை, போராட்டம் போன்ற செய்திகள்தான்.
இப்படியெல்லாம் கூட ஜனங்களை ஏமாற்ற முடியுமா என்று வியக்கும் அளவுக்கு நூதன மோசடிகள்.
கேடுகெட்ட ஈனப்பிறவிகள் சிறு குழந்தையையும் விட்டு வைப்பதில்லை; கிழவிகளையும் விட்டு வைப்பதில்லை
இதையெல்லாம் படிக்கும்போது "நெஞ்சு பொறுக்குதில்லையே .. நெஞ்சு பொறுக்குதில்லையே ..இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்" என்று பாரதியின் கவிதையைப் பாடத்தான் முடிகிறதே தவிர வேறு எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலைமை.
அரசாங்கம் வழங்கும் இலவசப் பொருட்கள் கிடைக்காவிட்டால் ஆர்த்தெழும் இந்த சாதாரண பொதுஜனம், மற்ற எந்த கிரிமினல் வேலைகளைப் பற்றியும் கவலையே படாது. ஏனென்றால் அவர்கள் இதைவிட பயங்கரமான கிரிமினல் காட்சிகளை சீரியலில் "லைவ்" ஆகப் பார்க்கிறார்கள். எனவே நாட்டு நடப்பு அவர்களுக்கு சிறு தூசு.. ஜூ ஜூ பி ..
நேற்றைய டீவி செய்தியில் தமிழ்நாடு "ஒருவிஷயத்தில்" முதல் இடத்தில் இருப்பதாகப் பார்த்தேன்.
"ஒருவிஷயத்தில்" கடைசியாக இடம்பிடித்த மாநிலத்தின் நிலைமை, மக்களின் நிலைமை எப்படி இருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றுகிறது.
அப்படியொரு இந்திய மாநிலத்தில் நான் பிறக்காமல் இருந்தமைக்காக
எல்லாம் வல்ல இறைவா போற்றி..
தமிழ்நாட்டில் என்னைப் பிறக்க வைத்தமைக்காக போற்றி போற்றி ..
No comments:
Post a Comment