திருப்பாவை - 14
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
திருவெம்பாவை - 14
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
-
- கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
-
- வேதப் பொருள்பாடி அப்பொருளாம் ஆம்பாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
-
- ஆதி திறம்பாடி அந்தமாம் ஆம்பாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
-
- பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்
No comments:
Post a Comment