திருப்பாவை - 09
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.
திருவெம்பாவை - 09
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
-
- பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற் றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
-
- உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து
-
- சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
-
- என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்
No comments:
Post a Comment