Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, August 13, 2020

புதிர் கேளு.. புதிர் கேளு.. புதிருக்கு பதில் சொல்லு....

DEAR VIEWERS, 


E-PASS பற்றி  அனல் பறக்கும் விவாதங்கள் ஊடகங்களில் அவ்வப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. 
அதுபற்றி எங்கள் குடும்ப உறவினருக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்கள் காதுகளிலும் போட்டு வைக்கிறேன்.
சென்ற  மாதம் எங்களது நெருங்கிய உறவு, ரத்த சம்பந்த உறவின் அகால மரணச்செய்தி வந்தது. அவளுக்கு கொரோனாவா என்று கண்டுபிடிக்கப் படவில் லை.
எந்தவொரு நோயும் இல்லாமல் மிகவும் ஆக்டிவ் ஆக இருந்த பெண், ஒருநாள் தலைவலி என்று துடிக்க, ஆஸ்பத்திரியில் அனுமதித்திருக் கிறார்கள். அங்கு எந்த மருத்துவமும் செய்யப்படவில்லை. மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக  சொல்லி விட்டார்கள். அதற்கான ஏற்பாடு நடக்கும்போதே அந்தப்பெண் இறந்து போனாள். சென்னைக்கு தகவல் வந்ததும் என் தம்பி, வேறு சில உறவுகளுடன்  காரில் பயணம் செய்தார் திண்டுக்கல்லுக்கு. 24மணி நேரத்தில் திரும்பி வர வேண்டும்  என்ற நிபந்தனையுடன் E-PASS  வழங்கப்பட்டது.
திண்டுக்கல் போய்சேர்ந்தாகிவிட்டது. அங்குள்ள செக் போஸ்டில்  உங்களை இரண்டுநாள் தனிமைப்படுத்தி வைத்திருந்த பின்பு தான்  ஊருக்குள் அனுமதிப்போம் என்று சொல்லி இருக்கிறார் ஒரு லேடி டாக்டர்.
காவல் துறையும் ரெவின்யூவும் "எங்களை பொறுத்தவரை ஓகே. டாக்டர் அனுமதித்தால் நீங்கள் ஊருக்குள் போகலாம்" என்று சொல்லி ஒதுங்கி விட, இவர்கள் டாக்டரிடம் பேசி இருக்கிறார்கள்.  அவர் சம்மதிக்க வில்லை  
24மணி நேரத்தில் திரும்பி வர வேண்டும்  என்ற நிபந்தனையுடன் E-PASS  கொடுத்திருக்கிறார்கள். என் அக்கா மகளின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் ஓடி வந்திருக்கிறேன். இரண்டுநாள் தனிமைப்படுத்தி வைத்திருந்த பின்பு என்னை அனுமதிப்பதாக சொல்கிறீர்கள். அதுவரை இறந்தவரின் பாடி இருப்பது எப்படி சாத்தியம் ஆகும். 24மணி நேரத்தில் திரும்பி வர வேண்டும்  என்ற நிபந்தனை யுடன் E-PASS கையில் வைத்துக்கொண்டு மூன்றுநாள் கழித்து நான் சென்னை திரும்பினால் அங்கு என்னை அனுமதிப்பார்களா என்று கேட்டு எவ்வளவோ விவாதம் செய்திருக்கிறார்கள்.
அந்த டாக்டர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தனக்கு தெரிந்த விதியை மட்டுமே கிளிப்பிள்ளை போல சொல்லி இருக்கிறார். 
(O.. THANK GOD...முதல்வரின் ஆலோசனைக்  கூட்டத்தில் இந்த லேடி இடம் பெறவில்லை. சமயசந்தர்ப்பம் புரியாமல், படித்ததை ஒப்புவிக்கும் ஜென்மங்களிடம் இருந்து மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.)
இதெல்லாம் போகட்டும் விடுங்க.. இன்னொரு சூப்பர் ஜோக் என்ன தெரியுமா ? இந்த விவாதங்களை அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு டாக்சி ட்ரைவர் "சார் .. எனக்கு 2500 ரூபாய் கொடுங்கள். உங்களை கொண்டுபோய் விட்டுடறேன் " என்று பேரம் பேசி இருக்கிறார். செக் போஸ்டுக்கும், போக வேண்டிய இடத்துக்குமான தூரம் 12 கிலோ மீட்டர் .. அதற்கு சார்ஜ் 2500 ரூபாய்.
உன்னால் மட்டும் எப்படி முடியும் என்று கேட்க, "அதெல்லாம் வேண்டாம் சார். நான் கேட்கிற பணத்தை கொடுங்கள்.. உங்களை கொண்டுபோய் சேர்க்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார்.
இவர்கள் வேண்டாமென்று சொல்லிவிட்டு, சென்னைக்கு திரும்பி விட்டார்கள்.
அது எப்படி சாத்தியம் என்று இன்றுவரை எங்களுக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் அதை எங்களுக்கும் சொல்லுங்கள் ப்ளீஸ்.
ஓ .. கடவுளே.. கொரோனாவிடம் இருந்து எங்களை நாங்கள் காத்துக் கொள்கிறோம். ஒரு மனிதனின் சந்தர்ப்ப சூழ்நிலை புரியாமல் வெட்டி வேதாந்தம் பேசும் இதுபோன்ற  மகாமேதைகள் அதிமேதாவிகளிடம் இருந்து எங்களை காப்பாற்றுவாயாக. ப்ளீஸ் ....
பணமிருந்தால் இந்த உலகத்திலே பல "கதை " நடக்குதப்பா... 

No comments:

Post a Comment