Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, April 09, 2020

ஒண்ணுமே புரியலே உலகத்திலே..


ஹாய் பிரெண்ட்ஸ்,
முதலில் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும். உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் லிஸ்ட்டில் இன்று நான் சேர்ந்து விட்டேன். ஆமாம். நெஜந்தாங்க. இன்னிக்கு நான் உளுந்தம் பருப்பு, ஜீனி ரெண்டுமே வாங்கிட்டேன். ஒன்றல்ல இரண்டல்ல.. மூன்று கிலோ...ஹையா .. நான் ஜெயிச்சிட்டேன்.
இனி மத்த விஷயங்களைப் பேசுவோம். சுகந்தன்னே .. சௌக்கியமாகட்டும்... 
ஒவ்வொருவர் மனதில் ஒவ்வொரு விதமான கவலை.
தோழி ஒருத்தியின் புலம்பல்.. "நாம எல்லாரும் வீட்டில் ஒண்ணு சேர்ந்து இருக்கிறதே பெரிய விஷயம். நாள் கிழமைன்னா கூட எல்லாரும் வீட்டில் இருக்கிறது ரொம்பவுமே அபூர்வம். ஒண்ணு இன்னிக்கு டே ஷிஃப்ட்னு சொல்லிட்டு வேலைக்கு கிளம்பிடும். இன்னொன்னு பிரெண்ட்ஸ் கூட வெளியில் போறேன்னு கிளம்பிடும்.  15 நாளைக்கும் மேலே எல்லாரும் வீட்டில் இருக்கிறோம். ஆனால் விதம்விதமா எதையும் செஞ்சு கொடுக்கத்தான் முடியலே.. இது இருந்தா அது இல்லே.. அது இருந்தா இது இல்லே கதைதான். இந்த கொரோனா கூத்து எப்பதான் ஓயும்னு தெரியலே.. இதை வீட்டில் புலம்பினா உடனே என் பையன் "அம்மா.. நிறைய முக கவசம் தைச்சு ஸ்டாக் பண்ணிட்டாங்க. இப்போ கொரோனா போயிட்டா அதை யாரும் ஏறெடுத்தும் பார்க்கப் போறதில்லே.. ஸ்டாக்கில் இருக்கிற சரக்கு வித்து தீர்ந்ததும் கொரோனா போயிட்டுன்னு அனௌன்ஸ் பண்ணிடுவாங்க"னு சொல்றான்.
இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா அருணா.. பொதுவாகவே வீட்டில் ப்ளீச்சிங் பவுடர், மற்ற லோஷன் போட்டு கழுவினாலே  நமக்கு தும்மல் இருமல் வரும். ஊர் முழுக்க லாரி லாரியா கிருமி நாசினி தெளிக்கிறாங்க.. அந்த ஸ்மெல் கூட தும்மல் இருமலை உண்டு பண்ணுது. உடனே கொரனோ தொற்றுன்னு ஊரை சீல் வச்சிடறாங்க. சுகாதார துறை ஏதாவது மருந்து சொல்லும்னு பார்த்தா, ஒரு லேடி வந்து அரை மணிக்கு ஒருதரம், இத்தனை பேர் போயிட்டாங்க. இத்தனை பேர் போகப்போறாங்கனு சொல்றதோட சரி. உருப்படியா ஒண்ணும் காணோம். என்ன பண்றதுன்னே தெரியலே ..! இது கூட பரவாயில்லே.. ஊரடங்கு முடிஞ்சு எல்லாரும் ஸ்கூல், ஆபீஸ்னு கிளம்பியாகணும். நாம எல்லாரும் எலெக்ட்ரிக் ட்ரைனை நம்பி இருக்கிற கேஸுங்க.. லட்சக்கணக்கான பேர்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேட்டில் சீஸன்  முடிஞ்சிருக்கும். தடை நீங்கின நாளில் அத்தனை பேரும் சீஸன் டிக்கெட் வாங்க அலை மோதுவாங்க .. மொபைலில் லோட் பண்ண எத்தனை பேருக்குத் தெரியும்..  என் மொபைலில் அதுக்கான வசதி கிடையாது. சீஸன் டிக்கெட் வாங்க க்யூவில் நிக்கணுமேனு நெனச்சா கதி கலக்குது .. ஒண்ணுமே புரியலே.."
"உன் கதைதான்  என் கதையும்.. ஒண்ணுமே புரியலே உலகத்திலே.. என்னவோ நடக்குது.. மர்மமா இருக்குது .." என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.  
பிரெண்ட்ஸ், எனக்கொரு சந்தேகம். உங்களாலே க்ளியர் பண்ண முடியுமா?
கடைகள் எப்பவும் திறந்திருக்கும் சமயங்களில் கூட்டம் சேர்வது கிடையாது. யாருக்கு எப்போ வசதிப்படுதோ அந்த நேரத்தில் போய்  வாங்குவோம். டைம் லிமிட் வைக்கப்போய்தான், அந்த நேரத்துக்குள் வாங்கணுமேன்னு மக்கள் கூட்டம்  அலை பாயுது. அந்த நேரத்தை இன்னும் குறைத்தால்,  எல்லாரும் அந்த நேரத்தை கணக்குப்பண்ணி அடித்துப் பிடித்துக் கொண்டு படை எடுப்பார்கள்.  இதனால் இன்னும் பிரச்னைனு என் மரமண்டை யோசிக்குது.. இது சரியா தப்பான்னு நீங்கதான் சொல்லணும்.. 
அனைவரும் வாழ்க நலமுடன்...

No comments:

Post a Comment