ஹாய் பிரெண்ட்ஸ்,
இன்னிக்கு புதுசா ஏதாவது பேசுவோமே.சேனல்கள் பழைய காட்சிகளையே ஒளிபரப்பி போரடிக்க செய்கின்றன. அதனால் எங்கள் வீட்டு டீவிக்கு .ஒளியடங்கு உத்தரவு போட்டு விட்டேன்.
மறைந்த திரை இசைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரிகளுக்கு நான் அடிமை. (நான் மட்டும் ஒரு நாட்டின் அரசியாக இருந்தால், அவர் கவிதைத்திறனுக்கு ஒரு ஊரையே பரிசாகக் கொடுத்திருப்பேன். ஹூம்....)
ஒரு சில பாடல் வரிகளை, காட்சிகளை ஒரு சில காலம் மட்டுந்தான் ரசிக்க முடியும். ஒரு சில காலத்துக்கும் நிலைத்து நின்று, அந்தந்த காலத்துக்கு ஏற்றபடி இருக்கும் .. சிந்திக்க வைக்கும். அப்படி ஒரு சில பாடல் வரிகள்..
1. விதவிதமா பொருட்கள் இருக்கு விலையைக் கேட்டால் நடுக்கம் வருது.
(அவர் பாடல் வரி : விதவிதமா துணிகள் இருக்கு. அதை நான் விதவிதமா பொருட்கள் இருக்கு என்று பதிவு செய்துள்ளேன்.)
எதை எதையோ வாங்கணுமின்னு எண்ணமிருக்கு வழியில்லே
அதை எண்ணாமலிருக்கவும் முடியல்லே
(ஆயிரம் ரூபா ) கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசு போன இடம் தெரியலே.
2. இந்த மாநிலத்தைப் பாராய் மகனே
உந்தன் வாழ்க்கை தன்னை உணர்வாய் மகனே
இளம் மனதில் வலிமை தன்னை ஏற்றடா
முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா
துயர் தன்னைக் கண்டே பயந்து விடாதே
சோர்வை வென்றாலே துன்பமில்லை
உயர்ந்திடவே நீ உன்னையே நம்பிடுவாய்
உதவி செய்வார் இங்கு யாருமில்லை.
No comments:
Post a Comment