பழைய திரைப்படமொன்றில் (மதுரை வீரன் என்று நினைக்கிறேன்) நடிகை பத்மினி வெறுப்பான மனநிலையில் தோழியிடம் பேசும் வசனம் : "சாக விட மாட்டாய் நீ.. வாழ விட மாட்டான் உன் மன்னன்..." நல்ல நாடு.. நல்ல மன்னன்..."
அதையே கொஞ்சம் மாத்தி இன்றைய சூழலுக்கு: -
1.வாழ விட மாட்டாய் நீ
சாகவும் விடாது நாடு.
2
ஜனங்க எல்லாரும் இப்படி கை கழுவினால், கையில் ரேகை இருக்குமா? அது தெளிவா தெரியுமா ? இந்த கொரோனா நம்ம பொழப்புக்கு ஆப்பு வச்சுடும் போலிருக்கே... இனிமே கிளியை நம்பித்தான் பொழைப்பை நடத்தணும் போலிருக்கே ..
3
ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் போட்ட மாதிரி 10 ம் க்ளாஸ் படிக்கிற எங்களுக்கும் ஆல் பாஸ் போடணும் தேர்வு வைக்காமலே.. அதுவரை "அது" இருக்கணும்.
4
இந்த சாக்கில் நிம்மதியா வீட்டில் இருந்தாச்சு. லாக் அவுட் முடிஞ்சிட்டா ஆபீஸுக்கும் வீட்டுக்கும் லோலோனு நாய் மாதிரி அலையணும். அதுக்கு முன்னாடி வீட்டில் எல்லாம் ரெடி பண்ணி ஆகணும். 10 கை இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்..
No comments:
Post a Comment