Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, April 13, 2020

கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்...

இன்னிக்கு காலங்கார்த்தாலே எனக்கு ஒரு கனவு. தூக்கத்திலிருந்து விடுபட்டதும் கனவில்  வந்தது நினைவில் வந்தது. கனவை நினைத்து சிரிப்பும் சிந்தனையும் சேர்ந்தே வந்தது.
பொதுவாக நாம் எதை நினைத்துக் கொண்டு படுக்கிறோமோ அதுதான் கனவில் வரும் என்பார்கள். கடந்த சில மாதங்களாக நம் கண்ணில் படுவது காதில் கேட்பது எல்லாமே "கொரோனா" என்கிற ஒற்றைச் சொல்தானே. அதனால் அது கனவில் வந்தது பெரிய விஷயமோ அதிசயமோ இல்லை. ஆனால் கனவில் கண்ட காட்சியை நினைத்து வியந்து போகிறேன். கனவு பற்றிய விளக்கம்.
கையில் கூடையை எடுத்துக்கொண்டு கடைக்கு சென்று கொண்டிருக்கிறேன். வழியில் பெரிய  ஜனக்கும்பல். எட்டிப் பார்க்கிறேன். அது ஒரு பொதுக் கூட்டம் என்பது புரிகிறது. 
எங்கிருந்தோ ஓடிவரும் ஒருவர் என் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு மேடைக்கு அருகில் கொண்டு செல்கிறார்.
"நீங்கள் பேசுங்க .." என்கிறார்.
"பேசறதா? என்னய்யா கிண்டலா ?" என்கிறேன்.
"பேசுங்க.. பேசுங்க .." என்று ஒரே கூச்சல்.
வேறு வழியில்லாமல் மேடை ஏறுகிறேன்.
பார்வையாளர்களைப் பார்க்கிறேன்.
அங்கே காமராஜர், ராஜாஜி, கென்னடி, கக்கன் என்று பெரிய தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்  இவங்க எல்லாரும் செத்துப் போயிட்டாங்களே..  இப்போ இங்கே எப்படி ? ஒருவேளை நாமதான் வழி தவறி செத்துப் போனவங்க இருக்கிற இடத்துக்கு வந்துட்டோமா என்று யோசிக்கும் போதே   "பேசுங்க.. பேசுங்க .." என்று ஒரே கூச்சல். 
உடனே சிறிதும் தயங்காமல் தொண்டையை  சரிசெய்தபடி ஹைபிட்சில் பேச ஆரம்பிக்கிறே ன்.
"முட்டாள் ஜனங்கள்.. சிந்திக்கும் அடிப்படை அறிவு கூட இல்லாத வடிகட்டின முட்டாள்கள். எங்காவது ஒரு கிருமியால், அதுவும் காற்றில் பரவாத ஒரு கிருமியால்  ஒரே சமயத்தில் உலகம் முழுக்க பாதிப்பை ஏற்படுத்த முடியுமா? 
எவனோ அனுப்பின ராக்கெட், செயற்கைக் கோள் ஒன்று, ஏற்கனவே இருந்த இயற்கையான  ஒரு கோள், கிரகத்தின் மீது மோதி கதிர் வீச்சை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது. அது, எது என்பதைக் கண்டு பிடித்து அதை சரி செய்யுங்க.. அதை ..." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே  "ஏய்!" என்று பெரிய சத்தம்.. சத்தம் வந்த திசையை பார்க்கிறேன். நவநாகரிக உடை அணிந்த மேல்நாட்டினர்  மேடையை நோக்கி ஓடி வருகிறார்கள்.  அந்த கூட்டத்தில் ட்ரம்ப் , மோடி, ஜெயலலிதா இருக்கிறார்கள்.  இந்த அம்மா செத்துப்போய் ரொம்ப நாளாச்சே.. இவங்க செத்தவங்க கூட சேர்ந்து பொதுக்கூட்டத்தில் உட்காராமே ,  உயிரோடு இருக்கிறவங்க கூட எப்படி சேர்ந்தாங்க என்று  நினைத்தபடி மேடையை விட்டு இறங்கி ஓடுகிறேன். அவர்கள் என்னைத் துரத்திக் கொண்டு வருகிறார்கள். ஒரு இடத்தில் புடவை தடுக்கி நான் கீழே விழுகிறேன். 
அப்படி விழும்போதே என்னையும் அறியாமல் என் உடம்பு தூக்கிப்போடுகிறது.  படுத்திருக்கும் கட்டிலின் விளிம்புவரை வந்து எழுந்து உட்கார்ந்தேன். நல்ல வேளை .. கீழே விழலே. வீட்டில்தான் இருக்கிறோம். வந்தது கனவுதான் என்று நிம்மதிப் பெருமூச்சு வருகிறது.
நினைக்கும்போது சிரிப்பு வந்தது. எல்லாருமே ஒரு சீரியஸ் மூடில் இருக்கிறோம். இதை சொல்லி உங்களையும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு நினைச்சுதான் இதை பதிவு பண்ணுகிறேன்.
எப்படி கனவு?

No comments:

Post a Comment