Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, August 27, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(26)


Image result for cartoon of young man talking in mobile
"என்னது, ரமேஷைப் பத்தி நீதான் ராங் இன்பர்மேஷன் கொடுத்தியா ?"
"ஆமாம் "
"யார் உன்னை மீட் பண்ணினாங்க ? எப்போ மீட் பண்ணினாங்க ? எங்கே வந்து மீட் பண்ணினாங்க ?"
"என்னை யாரும் மீட் பண்ணலே ?"
"யாரையும்பார்த்துப்பேசாமேஎப்படி அப்படியொரு ஸ்டேட்மென்ட் கொடுத்தே ?"
"இன்டெர்காமில் பேசினேன்."
"புரியும்படி சொல்லு..  இன்டெர்காமில் நீ யாரோடு  பேசினே?"
"தெரியாது "
"பவி..நானே ரொம்ப குழம்பிப்போய் இருக்கிறேன். நீ வேறே  என்னை டென்சன் பண்ணாதே. நீ பேசினதா சொல்றியே.. அதை எப்போ.. எங்கேனு எனக்கு டீடைலா சொல்லு.. கொஞ்சம் சூடா பால் கொண்டு வர சொல்லட்டுமா?"
"வேண்டாம் "
"வேறு ஏதாச்சும் சாப்பிடுறியா ?"
"வேண்டாம்"
"சரி.. கண்ணைத் துடைச்சுக்கோ. தலையணையை பின்னாலே நகர்த்தி நல்லா சாய்ஞ்சு உட்கார்ந்துக்கோ "
பவி பெட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.
"இந்தப்பாரு.. எந்த அவசரமும் இல்லை. நல்லா ஞாபகப்படுத்தி அன்னிக்கு நடந்ததை ஒவ்வொண்ணா சொல்லு... நீ இன்டெர்காமில் யாரிட்டே பேசினே ? நம்ம வீட்டிலேயா? இல்லாட்டா ஆபீஸிலேயா ?'
"ஆபீஸில்தான் "
"ஆபீஸிலா ? அப்போ அங்கே நானோ டாடியோ இல்லையா ?"
"ஐயோ.. சுமி நீதான் ஆடிட்டர் ஆபீசுக்குப் போறதா சொல்லிட்டு, டாடியை அழைச்சிட்டு க்ளினிக் போயிட்டியே.. நான் மட்டுந்தானே அன்னிக்கி ஆபீசில் இருந்தேன். "
பவி சொன்ன அந்த டேட்டுக்கு ஞாபகத்தை ரிவைண்ட் பண்ணி, ஒவ்வொரு நிகழ்ச்சியாக யோசித்தபோது....
டாடியை வீட்டில் விட்டுவிட்டு டூ வீலரில் பவியைக் கூப்பிட வந்தேன்... வந்தேனா.. ஹார்ன் கொடுத்ததும் செக்யூரிடி வந்து கதவைத் திறந்தார்.. திறந்தாரா.. திறந்தவர் என்னைக் கண்டதும் ஷாக் ஆனதுபோல், "மேடம். மேலே"னு  சொல்லவும்,  "மேலே சின்ன மேடம் இருப்பாங்க"னு சொல்லிட்டு, பவித்ராவைக் கூட்டிட்டு உடனே கிளம்பிட்டேன். அப்படின்னா அதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் யாராவது வந்து போயிருக்கணும்.
"இன்டெர்காமில் நீ என்ன பேசினே?"
"செக்யூரிட்டி இன்டெர்காமில், ரமேஷைப்பத்தி விசாரிக்க ஒருத்தர் வந்திரு க்கார்.. மேலே அனுப்பவானு கேட்டார்"
"எதைப்பத்தி விசாரிக்க ?"
"அவர் மேரேஜ் விஷயமா ?"
"நீ என்ன சொன்னே ?"
"அவரை அனுப்ப வேண்டாம். இன்டெர்க்காமை அவர் கையில் குடுங்கன்னு சொன்னேன்.  அவர்  "மேடம் உங்க கம்பெனியில் ஒர்க் பண்ற ரமேஷுக்கு பெண் குடுக்கிறவங்க அவரைப்பதி விசாரிச்சு சொல்ல சொன்னாங்க. ஆள் எப்படி"னு கேட்டார்.
"அதுக்கு நீ என்ன சொன்னே ?"
"அவன் ஒண்ணாம் நம்பர் அயோக்கியனாச்சே.. அவனுக்குப் பொண்ணைக் குடுக்கிறதுக்குப் பதில் ஏதாவது ஒரு கிணத்தில் கொண்டுபோய் தள்ளலாம். அது உங்க பொண்ணுக்கு நீங்க செய்ற உபகாரமா இருக்கும்"னு சொன்னேன்.
"வேறே ஏதாவது கேட்டாரா ?"
"அவர் கேட்கிறதுக்கு முன்னமே நானே அவர்கிட்டே, " அவன் ரொம்ப நல்ல பையன்னு அவன் வீட்டு ஆளுங்க சொல்லி இருப்பாங்க. எல்லாவனும் நல்லவன் வேஷத்தைப்போட்டிருக்கிறான்.நல்லவன்யாரு கெட்டவன்யாருனு கண்டுபிடிக்கிற மிஷின் ஒண்ணை யாராவது கண்டுபிடிச்சா அவனுக்கு கோவிலே கட்டலாம்"னு சொல்லிட்டு உடனே  லைனை கட் பண்ணிட்டேன்."
"அன்னிக்கு சொன்னது உனக்கு இன்னும் அப்படியே மனப்பாடமா இருக்குது போலிருக்குது ?"
"ஆமாம்.. ஷூட்டிங்கில் இந்த டயலாக் தான் பேசினாங்க "
"ஷூட்டிங்கா ?"
"ஆமாம் "
"நீ எங்கே போய் ஷூட்டிங் பார்த்தே? யாரோடே போனே?"
"யாரோடேயும் போகலே. அன்னிக்கு எங்க மேத்தமேட்டிக் மிஸ் என்னை கிளாஸை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க. ஸ்கூல் முடியற டைம் வரை வெளியில் நின்னேன். அப்போ ஸ்கூல் காம்பவுண்ட் வால் பக்கத்திலேயே டீவீ சீரியலுக்கு ஷூட் பண்ணிட்டு இருந்தாங்க.. நான் இப்போ சொன்னேனே .. இதே டயலாக்தான்.. இதை ஆப் அன் ஹவருக்கு மேலே ஷூட் பண்ணிட்டு இருந்தாங்க. அதை  நான் பார்த்திட்டே இருந்தேனா? அது எனக்கு மைன்ட்டில் அப்படியே  ரெக்கார்ட் ஆயிட்டது. இன்டெர்காமில் சேம் மேட்டர் பத்தி அந்த ஆள் கேட்கவும் நான் ஷூட்டிங்கில் கேட்ட டயலாக்கை அப்படியே சொல்லி ட்டேன் "
"முட்டாள்..முட்டாள்.. எப்பேர்ப்பட்ட மடத்தனத்தை நீ  பண்ணி இருக்கிறேனு தெரியுமா  உனக்கு ?"
"ஸாரிக்கா .. நான் வேணும்னு சொல்லலே "
"நீ பிளான் பண்ணி வேணும்னு சொல்லலே.. அதோட எபெக்ட் உன்னை .. நம்ம குடும்ப கவுரவத்தை , டாடியை எங்கே கொண்டு போய் விட்டுட்டு பார்த்தியா ? ச்சே .. நடந்தது என்னனு தெரியாமே நான் வேறே அந்த ரமேஷை திட்டித் தீர்த்துட்டேன். பள்ளிக்கூடம் போகாத, படிப்பு வாசனையே இல்லாத, படிக்காத முட்டாள் கூட இப்படி ஒரு காரியத்தை செய்யாது... நீ செஞ்சிருக்கே...உன்னை  .. ஐயோ உன்னை என்ன பண்றதுனே தெரியலியே "
இதைக்கேட்டதும் பவித்ரா கதறி அழஆரம்பித்துவிட்டாள். அவளை சமாதான   படுத்துவதற்குள்  போதும் போதுமென்று ஆகிவிட்டது.
"சரி ... நீ ரெஸ்ட் எடுத்துக்கோ.. எதைப் பத்தியும் வொரி பண்ணிக்காதே. நாம எல்லாத்தையும் சரி பண்ணிடலாம். நான் கேண்டினுக்குப் போயிட்டு வர்றேன். உனக்கு ஏதாவது வேணுமா?"
"வேண்டாம் "
பவித்ராவை சமாதானப்படுத்திவிட்டு வெளியில் வந்து ராம்குமாரை போனில் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னதும் சில வினாடிகள்வரை அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
"இந்தப்பொண்ணு ஏன் இப்படியொரு மடத்தனத்தைப் பண்ணுச்சு.. ரெண்டுங்  கெட்டான்  வயசுங்கிறது சரியாத்தான் இருக்குது.  பின்விளைவுகளைப் பத்தி யோசிச்சுப் பார்க்கிற பக்குவமே இந்தக் குழந்தைங்களுக்கு இருக்கிறதில்லே.. நிதானிக்காமே எதையாவது செய்யவேண்டியது.. பிறகு நிதானமா பீல் பண்ண வேண்டியது.  சரி.. பவி இப்போ எப்படி இருக்கிறா ?"
"நவ் ஷீ இஸ் ஆல்ரைட். நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டு ஒரே அழுகை. அவளை சமாதானப் படுத்தறதுக்குள் போதும் போதும்னு ஆயிட்டுது .. ஸார் .. நான் ஏன் உங்களை காண்டாக்ட் பண்ணினேன்னா, தப்பு எங்க சைடில் இருக்குது. அந்த ரமேஷை வார்ன் பண்ணி விட்டுடலாமா ?"
"என்ன மேடம் ! வாட் நான்சென்ஸ்.. அவனை சும்மா விடறதா? தூக்கில் போட்டால்கூட தப்பே இல்லை.  தப்பு உங்க சைடில் இருக்கிறதாவே வச்சுக்கு வோம்.  இதை சொன்னது நீங்கதானா. அதனாலே எனக்கு இந்தமாதிரி நஷ்டம் என் லைஃபில் எல்லாத்தையும் இழந்துட்டேனேன்னு நேருக்கு நேரா நின்னு சொல்லி இருந்தா... கேட்டிருந்தா .. அந்த சம்பவத்துக்கு நஷ்ட ஈடா நீங்களே ஒரு பிசினெஸை ஏற்பாடு பண்ணி குடுத்திருப்பீங்கதானே.. நடந்த சம்பவ த்தால் அவனுக்கு பொருள் நஷ்டம். இவன் பண்ணின காரியத்தால் உங்க சைடில் நீங்க இழந்ததை கணக்குப்போட்டுப்பாருங்க. ஒரு நல்ல குடும்பத்தில்.. ஒரு நல்ல தாய்க்கு மகனா பிறந்த ஒருத்தன் இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கக்கூட கூசுவான். இவன் எந்த உறுத்தலும் இல்லாமே என்ன ஒரு டிராமா கிரியேட் பண்ணி இருக்கிறான்.. இந்த சாக்கடையை நினைச்சு நீங்க  பீல் பண்ணாதீங்க.. கொறஞ்சது ஒரு ஏழு வருஷமாவது உள்ளே இருந்துட்டு வரட்டும்.. நீங்க பவியை மட்டும் ரெடியா இருக்க சொல்லுங்க. நான் நாளைக்கு வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். நாளைக்குப் பாப்போம்"னு சொல்லி லைனை கட் பண்ணினார்.
அன்றே பவித்ராவை கிளினிக்லிருந்து  வீட்டுக்கு அழைத்துச் சென்று, மறுநாள் பிரயாணத்துக்கான ஏற்பாடுகளை செய்வதில் அன்றைய இரவு கழிந்தது. அன்று இரவு முழுக்க இருவருமே தூங்கவில்லை.
மறுநாள் பவித்ரா ராம்குமாரை பின்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறி னாள்.  
-----------------------------------------------------------------------------    இது...இதுதான் நடந்து முடிந்த சம்பவங்கள்... வீட்டை விட்டுக் கிளம்பும் முன்பாக  "அக்கா.. எனக்கு என்ன நடக்குது.. என்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னே எனக்குப் புரியலே. ஏதோ கனவு மாதிரி இருக்குது.. இப்போ நான் வீட்டைவிட்டு வெளியே போறேனே .. அதுகூட ஏதோ ட்ரீம் போலத்தான் இருக்குது" னு நீ சொன்னே. எதையும் யோசித்து செய்யணும்.. நடந்த தவறிலிருந்து நீ விடுபட்டு வெளியே வரணும்.. உன்னை சுற்றி நடந்தது என்ன? நீ வளர்ந்த விதம் என்ன என்கிறதை உனக்குப் புரிய வைக்கணும்கிற எண்ணத்தில் நம் வீட்டில் நடந்த சம்பவ ங்களை ஒரு கதைபோல எழுதி உனக்கு அனுப்புகிறேன். எந்தவொரு இடத்திலும் "நீ இப்படி பண்ணினே ..நீ இப்படி செஞ்சே"னு எழுதாமே பவித்ரா.. பவித்ரா என்று சொல்லி இருக்கிறேன். "நீ" என்று குறிப்பிட்டு எழுதினால் அது உனக்குள் ஒரு குற்ற உணர்ச்சியைத் தூண்டும். அதனால் தான். இப்போது என்னைப் பிரிந்து நீ சென்றுவிட்டாலும் என்னிடம் திரும்பி வருவாய் என்ற நம்பிக்கை இருக்கிறது .. நல்லதே நடக்கும்...
காலம் ஒருநாள் மாறும்.. நம் கவலைகள் யாவும் தீரும் ! என்ற வாசகத்துடன்  அந்த டைரி முடிவு பெற்றிருந்தது.
டைரியைப் படித்து முடித்த பிரபு, இதுக்குப்பிறகு என்ன நடந்ததுனு பவித்ரா கிட்டே  கேட்டுத் தெரிஞ்சுக்கலாம் என்ற முடிவுடன் அவளது குடிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

                                                                               --------------------- தொடரும்---------------------

No comments:

Post a Comment