Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, August 26, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(25)

Image result for cartoon of young girl speaking in mobail
"இல்லே மேடம்.. நடந்தது இதுதான்னு நாளைக்கு எல்லா பேப்பரிலும் மீடியா விலும் நியூஸ் வர ஏற்பாடு பண்ணிடறேன்.. அதையெல்லாம் செய்ய எனக்கு நிறைய பிரெண்ட்ஸ் சர்க்கிள்.. இன்ப்ளுயன்ஸ் இருக்குது . நான் நாளைக்கு கிளம்பலாம்னு இருக்கிறேன்"
"பார்த்தீங்களா.. வெளியே நிக்க வச்சே பேசிட்டு இருக்கிறேன். வரவர என்ன செய்றேன்..எதை செய்றேன்னே எனக்கு புரியலே.."
"அந்த அளவுக்கு அப்செட் ஆகி இருக்கீங்க "
"உங்க ரிலேஷன் எப்படி இருக்கிறார் ?"
"அவர் நேற்றே டிஸ்சார்ஜ் ஆயிட்டார்.. உங்க மேட்டருக்காக நான் அதிகமா ஒருநாள் தங்கும்படி ஆயிடுச்சு.. பவித்ராவை எங்க வில்லேஜுக்கு அனுப்ப அப்ஜெக்சன் எதுவும் இல்லையே ?"
"எப்போ போவோம்னு அவ துடிச்சிட்டு இருக்கிறா "
"அவளுக்கு தேவையானதை ரெடி பண்ணுங்க.. நான் நாளைக்கு பிளைட்டில் கிளம்பறேன்.  என்னோட அழைச்சிட்டுப் போறேன். சென்னையில் ரெண்டுநாள் இருக்கட்டும். என் வொய்ப் ஷோபா.. ரீசெண்டா மேரேஜ் ஆச்சு. அவங்களை வெளியே அழைச்சிட்டுப் போகக்கூட நேரமில்லே. நான் அடுத்த படத்துக்கான வேலையில் பிஸி. அன்-எக்ஸ்பெட்டடா டில்லியில் அதிகநாள் தங்கும்படி ஆயிடுச்சு. சென்னைக்குப் போனதும் நிற்கக்கூட நேரமில்லாமே ஓட வேண்டி யிருக்கும். என் வொய்ப் ஷோபா, பவித்ராவை வள்ளிகிட்டே  ஹேண்ட்  ஓவர் பண்ணிடுவாங்க. அவளோட சேப்டி பத்தி நீங்க வொரி பண்ண வேண்டாம். உங்கவீட்டைவிடவும் ரொம்பபாதுகாப்பான இடம் அது. வேணும்னா நீங்க கூட எங்களோடு சேர்ந்து வந்து அந்த இடத்தையெல்லாம் பார்த்துட்டு வரலாம். "
"வர நான் ரெடிதான் ஸார் .. டீலை பிரேக் பண்ணிட்டதா சொல்லி பவித்ரா கோவிச்சிட்டு வேறே எங்காவது போயிடப்போறா.."
"அதுவும் சரிதான்.. அப்போ நாங்க நாளைக்குக் கிளம்பறோம் "
ராம்குமார் அங்கிருந்து கிளம்பிப்போனதும், பவியைப் பார்க்க ஓடவேண்டிய தாயிற்று .
மனமும் அறிவும் ஒரு நிலையில் இல்லை.
இந்த  ரமேஷ் மேலே எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன். எல்லாவற்றையும் ஒரு நொடியில் கலைத்து விட்டானே.
ச்சே .. மனிதர்களுக்குள் இந்த அளவுக்கு வெறித்தன்மை புதைந்து கிடக்கிறதா ?
பார்க்க எவ்வளவு சாதுவாக, நல்லவனாக இருந்தான்.. அவனா இப்படி ?
ஒருவேளை எல்லாமே வேஷந்தானோ ?
இவன் வக்கிரபுத்திக்கு என்மேலே பழிபோடுகிறான்.  ராஸ்கல்.
இவ்வளவு அயோக்கியத்தனத்தையும் பண்றதுக்கு முன்னாடி எங்கிட்டே ஒரு வார்த்தை...ஒரேயொரு வார்த்தை கேட்டிருக்கலாமே.. உங்ககிட்டே  என்னைப் பத்தி விசாரிக்க வந்தவங்ககிட்டே ஏன் அப்படி சொன்னீங்கனு ? கேட்டிருந்தால் அன்னிக்கே பிரச்னை சால்வ் ஆகி இருக்குமே.
எங்களால் நீ பாதிக்கப்பட்டிருந்தால், நாங்களே உனக்கொரு பெண்ணைப் பார்த்து திருமண ஏற்பாடு செய்திருப்போம். உன்னோட பிசினெஸ் பண்ற ஆசையை நிறைவேத்தி வச்சிருப்போமே..
அமைதியா இருந்து, ரொம்ப நல்லவன் வேஷம் போட்டே எங்க கழுத்தை அறுத்திட்டியே பாவி..
இப்படியெல்லாம் பண்ணி நீ எதை அடைஞ்சிட்டே ? என்னத்தை பெரிசா சாதிச்சிட்டே... ஒண்ணுமே இல்லையடா பாவி..கடைசியில் கம்பியைத்தானே எண்ணப்  போறே ?
உனக்கெல்லாம் நல்ல சாவு கிடைக்காது..
"மேடம் !"
"உம் ?"
"க்ளினிக் வந்திடுச்சு "
"ஸாரி .. ஏதோ யோசனையில் இருந்திட்டேன்."
பவித்ரா இருந்த அறைக்கு வந்தபோது அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.
நான் சொன்னதா இந்தப்பாவி அடிச்சு சொல்றானே... ஒருவேளை ஏதாவது ஒர்க் டென்ஷனில் நானே சொல்லி இருப்பேனோ?
ஊஹூம்.. கண்டிப்பா இருக்காது.. ஒரே குழப்பமா இருக்குதே.
இவனும் அந்த சண்டைக்கோழி ரமேஷும் ஒண்ணாச்சேர்ந்துதானே ஊர் சுத்துவாங்க. ஒரே ஊர்க்காரங்க வேறே .. அவரைக் கேட்டால் என்ன? அதுதான் சரி.  ஏதாவது விவரம் கிடைக்குமானு பார்க்கலாம்.
"ஹல்லோ.. மேனேஜர் ஸார் "
"சொல்லுங்க மேடம் "
"ரமேஷ் இருக்கிறாரா ?'
"அவரைப்பத்திதான் எந்த தகவலும் இல்லையே மேடம் !"
"இன்னொரு ரமேஷை .. எப்பவும் சண்டைக்கு ரெடியா இருப்பாரே! அவர்..?"
"கொஞ்சம் முன்னாடி அவரை கேன்டீனில் பார்த்தேன்."
"அவர்கிட்டே என்னை உடனே காண்டாக்ட் பண்ணனும்னு சொல்லுங்க."
"ஓகே மேடம். உடனே சொல்றேன் "
பவித்ரா படுக்கையில் உருண்டுகொண்டிருந்தாள். அவள் கீழேவிழுந்து விடாத படி அவளை நகர்த்தி படுக்க வைத்துவிட்டு பெட்டின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு போனை எதிர்பார்த்து காத்திருந்தபோது, மேனேஜருக்கு இன்பார்ம் பண்ணி ஐந்து நிமிஷம்கூட ஆகலே.. ஆனால் பலமணி நேரம் காத்திருப்பது போல பிரமை.
ரமேஷை தேடிப்பிடிச்சு அவருக்கு இன்பார்ம் பண்ண மேனேஜருக்கு டைம் வேணும்தானே என்று மனசுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தபோது மொபைல் ஒலித்தது.
"ரமேஷ் ?"
"யெஸ் மேடம்... பேச சொன்னீங்களாம் !"
"ஆமாம்..  உங்க பிரென்ட் ரமேஷுக்கு என்ன ஆச்சு ? ஆளையே காணலே !"
"தெரியலே மேடம் "
"நீங்கதானே நம்ம ஆபீஸிலேயே அவருக்கு நெருங்கின சிநேகிதம். நீங்க ரெண்டுபேரும் ஒரே அறையில்தானே  தங்கி இருக்கீங்க.  ஒரே ஊர்க்காரங்க வேறு! இவ்வளவு சர்வ சாதாரணமா தெரியலைனு சொல்றீங்க.. கல்யாண வேலையில் மும்முரமா இருக்கிறாரா? அதை நமக்கு இன்பார்ம் பண்ண மறந்துட்டாரா ?"
"அப்படி எதுவும்இல்லை மேடம்.. அந்த அலையன்ஸ் விஷயத்தில் ரொம்பவும் ஹோப் வச்சிருந்தான்.. அது சரிவரலே போலிருக்குது "
"ஏன் ?"
"என்ன மேடம் இப்படிக் கேக்கறீங்க? அவரைப் பத்தி விசாரிக்க பொண்ணு வீட்டுக்காரங்க வந்தப்ப,அவங்களுக்கு திருப்தியான பதிலை நீங்க சொல்லலே. பொண்ணு வீட்டுக்காரங்க  வேறே இடம் பார்த்துக்கறோம்னு சொல்லிட்டாங்க. அந்த இடம் அமைஞ்சிருந்தா இவனுக்கு பிசினெஸ் பண்ண ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருப்பாங்க.  அது முடியாமே போனதிலே  இவன் ரொம்பவும் அப்செட். ராத்திரி முழுக்க தூங்காமே சிகரெட்டை ஊதித்தள்ளிட்டு இருந்தான். நான் எவ்வளவோ சமாதானம் சொன்னேன். நாளைக்கு நாம ரெண்டு பேரும் போய் மேடத்தைப்பார்த்து பேசுவோம்னு சொன்னேன். சரினு சொல்லிட்டு படுத்தான். மறுநாள் காலையில் நான் எழுந்திருக்கிறதுக்கு முன்னாடியே எழுந்துட்டான் போலிருக்கு.. அவன் படுக்கை அப்படியே விரிச்சாப்லயே இருந்துது. அதை சுருட்டி வைக்கக்கூட உனக்கு ஒரு ஆள் வேணுமானு நான் சொல்லிட்டே சுத்தி மடக்கி வச்சேன். எங்காவது வெளியில் போயிருப்பான். வந்திருவான்னு நினைச்சிட்டு நான் வேலைக்கு கிளம்பி வந்திட்டேன். வேலை மும்முரத்தில் எனக்கு இவன் மேட்டர் மறந்தே போச்சு. ஆபீசில் அவனை பார்க்க முடியலே. ரூமில் இருப்பான்னு நினைச்சு அங்கே போய்ப்பார்த்தேன். அங்கேயுமில்லை. அவன் திங்க்ஸ் எதுவும்இல்லை..சரி..ஊருக்குப்போய் இருப்பான், பொண்ணு வீட்டுக்காரங்களை சமாதானப்படுத்தறதுக்குனு நான் நினைச்சேன்.   அப்புறமா ஒருநாள் மேனேஜர் எங்கிட்டே அவனைப்பத்தி விசாரிச்சார். அதுக்கப்பறந்தா ன் மேடம் அவன் யாருக்கும் தகவல் சொல்லாமே போயிருக்கிறது எனக்கு தெரிஞ்சுது "
"அவரை காண்டாக்ட் பண்ண நீங்க ட்ரை பண்ணலையா ?"
"போன் பண்ணினேன். எந்த ரெஸ்பான்ஸும் இல்லே. கோபத்தில் இருப்பான் . இல்லாட்டா வருத்தத்தில்இருப்பான். ரெண்டுந்தணிஞ்சா போனமாதிரி திரும்ப இங்கே வந்துருவான்னு எதிர்பார்த்துட்டு இருக்கிறேன் மேடம்."
"ஓஹோ ?..நான் அப்படி சொல்லி இருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா ?"
"யார் மனசில் என்னமாதிரி எண்ணம் எப்படி ஓடும்னு யாராலே சொல்ல முடியும் மேடம் ?"
"சரிப்பா.. நான் சொன்னதா அவர் நம்பி இருந்தா, அதை எங்கிட்டே கேட்டு க்ளியர் பண்ணி இருக்கலாமே ?"
"........."
"என்ன ரமேஷ்.. பதிலைக் காணும் ?"
'உங்க கேள்விக்கு அவன்தான் பதில் சொல்லணும்..மேடம் இப்படி துரோகம் பண்ணிட்டாங்களே. அவங்க மேலே எவ்வளவு மதிப்பு, மரியாதை வச்சிருந்து உண்மையா உழைச்சேன். அந்த உழைப்புக்கு கிடைச்ச பரிசு இது. மேடம் இப்படி பண்ணிட்டாங்களேன்னு திரும்பத்திரும்ப சொல்லிட்டே இருந்தான் மேடம். "
"இப்போ உங்க பிரென்ட் எங்கே இருக்கிறார்னு தெரியுமா?"
"தெரியாது மேடம் !"
"போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார்.. அன்னிக்கு நடந்த பவித்ரா மேட்டர் இவனோட செட்டப்.. ராஸ்கல் பிளான் போட்டு பண்ணி இருக்கிறான் "
"மேடம்.. என்ன சொல்றீங்க ? என்ன சொல்றீங்க மேடம்? நிஜமாவா ?"
பதிலேதும் சொல்லாமல் போனை கட் பண்ணினபோது, "சுமி.. அன்னிக்கு ரமேஷ் பத்தி அப்படி சொன்னது நான்தான் !" என்று சொல்லிவிட்டு மடியில் படுத்து விசும்பியபோது, வானம் பூமி எல்லாமே சேர்ந்து சுற்றுவது போல் இருந்தது.

                                                                       ----------------------  தொடரும் -------------------------

No comments:

Post a Comment