Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 25, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(24)

Image result for cartoon of a young lady and police man
ராம்குமாரிடம் இருந்து போனை எதிர்பார்த்துக் காத்திருந்ததுதான் மிச்சம். அன்றும் போன் எதுவும் வரவில்லை. மறுநாளும் வரவில்லை.
அவருடைய போன் நம்பரைக் கேட்டு வாங்காதது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. என்னோட நம்பரை அவர் கேட்டு வாங்கும்போது, உங்களோட காண்டாக்ட் நம்பர் என்னனு கேட்கக்கூட புத்தியில்லாத, முட்டாள் ஜென்மமா    இருந்திருக்கிறேனே! 
அவரோட ரிலேஷன்ஸ் யாரோ இங்கே அட்மிட் ஆயிருக்கிறதா சொன்னார் ? அவர் யார் ? என்ன ப்ராப்ளம்? எந்த வார்டில் இருக்கிறார்ங்கிற டீடைல்ஸ் கூட வாங்காமே விட்டுட்டோமே.
நடந்து முடிந்த.. நடக்கின்ற சம்பவங்களால் எதையும் யோசிக்கிற நிலையில் மனமும் அறிவும் இல்லை என்பதுதான் நிஜம்.
அவராகக் கூப்பிட்டு பேசாதவரை, காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
பவித்ரா வேறு, "சுமி.. நான் எப்போ வயல்வெளிக்கு கிளம்பணும்னு பிரதரைக் கேட்டு சொல்"  என்று துளைத்தெடுத்துக் கொண்டிருந்தாள். 
"நான் டாக்டரைப் பார்த்து உன்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்றாங்கனு கேட்டுட்டு வரேன்" என்று வெளியில் வந்தபோது மொபைல் ஒலித்தது.
போன் அட்டென்ட் பண்ணினதும், "சுமி மேடம்.. குட் நியூஸ்.. அந்த ராஸ்கல் மாட்டிக்கிட்டான். பவித்ரா மொபைலில் இருந்த போன் நம்பரை வச்சு இவனை பிடிச்சிட்டோம். ஒரு லாட்ஜ்ஜோட லேன்ட்லைன் நம்பர் அது. நடந்து முடிந்தது எல்லாமே ஒரு நாடகம்தான். அன்னிக்கு நடந்தது நிஜமான ரெய்ட் இல்லை. அவனுக யாரும் நிஜமான போலீஸ் இல்லே. அதான் உங்க பேமிலி பிரென்ட் ராமானுஜம்ஸார் அவனுக கிட்டே, "நான் சி.எம்.க்கு போன் பண்ணப் போறதா" சொன்னதும் அங்கிருந்து ஓடிட்டாங்க. இவங்களே எல்லாம் செட் பண்ணி, மொபைலில்வீடியோ எடுத்து அதை டீவீ  சேனலுக்கு கொடுத்திருக்காங்க. எந்தவிஷயத்தையும் அவங்கதான் முந்திக்குடுக்கணுங்கிற ஆர்வக் கோளாறு அவங்களுக்கு. அந்த  இன்சிடென்ட் பொய்யா நிஜமானு தெரியாமே சேனல் அதை அப்படியே டெலிகாஸ்ட்  பண்ணிட்டாங்க .."
"ஓ .. காட் ! ஒரு டிராமா பண்ண அப்படி என்ன பகை அவங்களுக்கு பவித்ரா மேலே.?"
"அவங்க கோபம் பவித்ரா மேலே இல்லை. உங்க மேலேதான். உங்களைப் பழி  வாங்க அவளை பகடைக்காயா யூஸ் பண்ணி இருக்காங்க.. அவ்வளவுதான்."
"அந்த ராஸ்கலை நான் பார்க்கணும்.  எங்கே வரணும் ?"
"நீங்க எங்கேயும் வரவேண்டாம். உங்க வீட்டில் போய் வெயிட் பண்ணுங்க. அந்த ராஸ்கலையும்  என்னோட பிரென்ட்.. போலீஸ் அபீஷியல் ஒருத்தரை யும் அழைச்சிட்டு அங்கே வந்துடறேன். உங்க அட்ரஸ்ஸை இதே நம்பருக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுங்க. இந்த கிரிமினல் கிட்டே அட்ரஸ் கேட்டா எங்களை வேறே எங்காவது கூட்டிட்டுப் போனால்கூட ஆச்சரியப்பட எதுவுமில்லை. லாட்ஜ் மேனேஜர்கிட்டே டீவீ சீரியல் ஷூட்டிங்னு சொல்லி பணம் குடுத்திரு க்கிறான். நிஜம்னு நம்பி பணத்தை வாங்கிட்டு அவர் தன்னோட பெர்சனல் ஒர்க்கை கவனிக்க வெளியில் போயிட்டார். லாட்ஜ் ஸ்டாப்புங்க யாருக்கும் எந்த விஷயமும் தெரியலே. மேனேஜர் சொல்லித்தானே ஷூட் பண்றாங்கனு கண்டுக்காமே விட்டுட்டாங்க. ராஸ்கல் முதலில் என்னமா துள்ளினான். வாங்கின அடியில் உண்மையை ஒத்துக்கிட்டான். மேடம்.  அவன் டார்கெட்  நீங்கதான். பவித்ரா இல்லே.. நேரில் வந்து பேசறேன் !".    
ராம்குமார் சொன்னதைக்கேட்டு தலைசுற்றியது. மயக்கம்வருவது போல் இருந்தது.  அங்கிருந்த சேரில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தவள், பரபரப்புடன் எழுந்து, "பவி .. நான் ஒரு அர்ஜென்ட் வேலையா வெளியில் போறேன். நீ சமர்த்தா சாப்பிட்டு, மெடிசின் போட்டுட்டு படுத்துக்கணும். நாளைக்கே நீ வயல்வெளி போகலாம்... ஓகே ?"
"டபுள் ஓகே !" - பவியின் குரலில் உற்சாகம் வழிந்தோடியது.
வீட்டுக்கு வந்த பின்னும் பரபரப்பு அடங்கவில்லை.
இந்த அளவுக்கு பகை வர என்ன காரணம்? மத்தவங்க மனசு நோகிறாப்லே பேசினது கூட கிடையாதே.
சரி.. ஸார் வந்ததும் தெரிஞ்சிடப் போகுது.
இன்றைக்கு என்னவோ டைம் ஆமை வேகத்தில் நகருதே .  ச்சே .. யாரோட வேலை இது?
வாசலில் கார் ஹார்ன் கேட்டதும் ஓடிச்சென்று செக்யூரிட்டி கதவைத் திறந்தார்.
வந்தவர்கள் வீட்டுக்குள் வரும்வரை கூட காத்திருக்கப் பொறுமையில்லை.
காரின் அருகில் ஓடிச்சென்று பார்த்தபோது, ராம்குமார் முதலில் இறங்க அவரைத் தொடர்ந்து ரமேஷ் இறங்கினான்.
அந்த ராஸ்கல் யார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் காருக்குள் எட்டிப்பார்த்தபடியே, "என்ன ரமேஷ் ! என்ன ஆச்சு உங்களுக்கு.? ஆபீஸ்க்கு வரலே.. லீவ் பற்றி இன்பார்ம் பண்ணலே. வீட்டுக்கு லெட்டர் அனுப்பினா, ஆள் இல்லேனு லெட்டர் திரும்பி வருது! எங்கே போயிருந்தீங்க ? என்ன விஷயம் ?" என்று விசாரித்தபோது, "மேடம் கேக்கிறாங்க...பதில் சொல்லு!"னு  ரமேஷிடம் சொன்ன ராம்குமார், "சுமி மேடம்.. நடந்து முடிஞ்சது எல்லாமே ஸாரோட திருவிளையாடல்தான். பக்காவா பிளான் பண்ணி செஞ்சிருக்கிறான்.. பிறவி க்கிரிமினல் கூட இவன்கிட்டே ட்ரைனிங் எடுக்கணும்"
"என்ன சொல்றீங்க ? என்ன சொல்றீங்க ஸார் ? இவர் எங்க கம்பெனியில் ஒர்க் பண்றார். நல்லவர். எந்த வம்பு தும்புக்கும் போகாத சாப்ட்  டைப்!"
"சுமி மேடம்.. போதும் உங்க சர்டிபிகேட்.. எல்லா அயோக்கியத்தனத்தையும் பக்காவா பிளான் பண்ணி செஞ்சது இந்த கிரிமினல்தான்!"
"என்னாலே நம்ப முடியலே.. ரமேஷ் .. நீங்களா இவ்வளவும் செஞ்சது ! ஏன்?"
"என் கல்யாணம் உன்னாலே நின்னு போச்சு. உன் கல்யாணம் நடக்க விடாமே பண்ணத்தான் அப்படி செஞ்சேன் "
"என்ன ஒரு திமிரா பேசறான் பாருங்க" என்று சொல்லி அவன் தலையில் தட்டினார் அருகில் நின்ற போலீஸ் ஆபீஸர்.
யாருமே எதிர்பார்க்காத வகையில், அவன் சட்டைக்காலரைப் பிடிச்சு, "ஏன்.. ஏண்டா அப்படி பண்ணினே. உன் கல்யாணத்தை நான் நிறுத்தினேனா ?"னு அவன் கன்னத்தில் அறைந்து உலுக்கிக் கேட்டபோது ராம்குமார்தான் தடுத்து நிறுத்தினார்.
"முதலாளி வர்க்கம் நீங்க என்னிக்கும் சுகமா பல்லாக்கிலே சவாரி பண்ணனும்.. நாங்க காலமெல்லாம் உங்களுக்கு பல்லாக்கு தூக்கணும். அதுதானே உங்க எண்ணம். ஒருத்தன் முன்னேறணும்னு நினைச்சா உடனே அவன் மண்டையில் அடிச்சு உக்கார வச்சிடுவீங்களே !"னு குதர்க்கமான குரலில் கேட்டான் ரமேஷ்.
"அந்த அயோக்கியன் நிழல்கூட உங்க மேலே படக்கூடாது. நானும்... இதோ நிக்கிறாரே  என் பிரென்ட்.. இவருமா சேர்ந்து எவ்வளவோ கேட்டுப் பார்த்து ட்டோம். என் கல்யாணம் நின்னு, சொந்த பிசினெஸ் ஆரம்பிக்க நான் கண்ட கனவில் மண்ணை அள்ளிப் போட்டது மேடம்தான்.. அதான் அவங்க கல்யாண ஏற்பாட்டை நான்  தடுத்து நிறுத்தினேன்னு சொல்றான். "
"எனக்குப் புரியலே "
"என்னைப்பத்தி விசாரிக்கவந்த பொண்ணுவீட்டுக்காரங்ககிட்டே நீ என்னைப் பத்தி என்ன சொன்னே? எனக்குப் பெண் குடுக்கிறதுக்குப் பதிலா கிணத்தில் தள்ளலாம்னுதானே சொன்னே.. கல்யாண ஏற்பாடு நின்னு அதனாலே வர்ற வலி என்னனு நீ தெரிஞ்சுக்கணும்..அதுக்குதான் இதை பண்ணினேன். உனக்கு எவ்வளவு விசுவாசமா உழைச்சேன். உன்னை எவ்வளவு நம்பினேன். நம்ப வச்சு கழுத்தை அறுத்திட்டியே "
"முட்டாள்..முட்டாள்..யாருமேவிசாரிக்க வரலியே..பிறகு எப்படிடா  உன்னைப்  பத்தி சொல்லி இருப்பேன்  ?"
'பொய்.. பொய்...உடம்பெல்லாம் பொய்..பணக்கார வர்க்கத்துக்கே உள்ள பொய் ..செய்றதையும் செஞ்சிட்டு நடிக்கிறியா?"
"சீ .. நாயே.. உன் வஞ்சத்தைத் தீர்க்க இப்படியா சீப்பா ஒரு டிராமா போடுவே  ?"
"வேறே வழி ? இந்தபொம்பள வேண்டாம்னு சொன்னா உனக்குப் புருஷனா வர இருந்தவன் கேட்பானா ? இல்லே அவனைப் பெத்தவன்தான் கேட்பானா ? இப்ப பார்த்தியா ? ஒரு பிலிம் பார்த்ததுமே உன்னைத் தலைமுழுகிட்டு ஓடிட்டான். இது... இது.. இதுதான் எனக்கு வேணும்."
"நான் சொல்றத நம்ப நீ தயார் இல்லே. அது உன் இஷ்டம்.. பவித்ரா ஒரு குழந்தை மாதிரிடா. அவ மேலே சேத்தை வாரி இறைச்சிட்டியே.. எங்க டாடி உன் விளையாட்டுக்கு பலியாகிட்டாரேடா .. அப்படி என்ன வர்மம் உனக்கு எங்க மீது ? இதுக்கு நீ என்னைக் கொலை பண்ணி இருக்கலாமே ?"
"கொலை பண்ணினா?... நீ செத்துப் போயிடுவே.. நான் ஜெயிலுக்குப் போவேன். அவ்வளவு சீக்கிரம் உன்னோட துடிப்பு அடங்கக்கூடாது. நீ தினம் தினம் துடிக்கணும்." என்று வெறிபிடித்தவன் போல கத்திய ரமேஷ், "எங்கே அடிச்சா... யாரை அடிச்சா உனக்கு வலிக்கும்னு தெரிஞ்சு அடிச்சேன் "னு சொல்லிவிட்டு வெறி பிடித்தவன் போல சிரித்தான்.
"இவனை விட்டா வசனம் பேசிட்டே இருப்பான்.. இவ்வளவு சம்பவத்துக்கும் யார் காரணம்னு இப்போ தெரிஞ்சிட்டுதானே? மைனர் பொண்ணை கடத்தியது, பொய்யாக டிராமா பண்ணி அவ வாழ்க்கையை நாசம் பண்ணினது,  அவளைத் தற்கொலைக்கு தூண்டினது.. உங்க டாடி சாவுக்கு இவன்தான் காரணம்னு ஏகப்பட்ட கேஸ். நீங்க ஒரு பார்மல் லெட்டர் எழுதிக் கொடுங்க நான் சொல்ற மாதிரி.. மீதியை நாங்க பார்த்துக்கிறோம்" என்ற போலீஸ்ஆபீஸர் ராம்குமார் ஸாரிடம் விடை பெற்றபின் ரமேஷை அங்கே இருந்து தள்ளிச்சென்றார்.
"ஸார்..இவன்.. இவனா இப்படி ! இவன் இவ்வளவு செய்வான்னு நான் கற்பனை பண்ணிக்கூட பார்த்ததில்லையே. பைத்தியக்காரன் மாதிரி நான்தான் இவன் கல்யாணத்தை நிறுத்தினதா சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்றான். அது என்னனு எனக்குப் புரியலே. "
"விட்டுத் தள்ளுங்க.. இவன் பண்ணின கிரிமினல் வேலைக்கு இப்படியொரு சப்பைக் கட்டு .. கதை.. ராஸ்கல் வெளியே வரமுடியாதபடி அவர் பார்த்துக்கு வார். நீங்க நிம்மதியா இருங்க "
"எப்படி ஸார் ? எப்படி ? நடந்த எதையுமே சரி பண்ண முடியாதே. டாடி திரும்ப வருவாரா ? போனமானம் திரும்ப வருமா? பவித்ரா எந்த அளவுக்கு மனரீதியா பாதிக்கப்பட்டு இருக்கிறானு பார்த்தீங்கதானே !"
"ஒரு சம்பவம் உண்மையா பொய்யானு கூட தெரியாமே ஒரு சேனல் அதை டெலிகாஸ்ட் பண்ணி இருக்குது? அவங்க மேலேயும் கேஸ் பைல் பண்ணி  அவனுகளை  உண்டுஇல்லைனு பண்ணனும்."
"எதுவுமே எங்க டாடியைக் கொண்டு வந்து சேர்க்காதே.. யாருமே இல்லாத இடத்துக்குப் போறேன்னு சொல்லி கிளம்பி நிக்கிற பவித்ரா முடிவை மாத்த முடியாதே. விட்டுத்தள்ளுங்க ஸார் .. விழுந்தால் திரும்ப எழும்பவே முடியாத படி இந்த நாய்ங்களை ஆண்டவனாகப் பார்த்து அடிக்கிற நேரம் வரும். எங்க வயிற்றெரிச்சல் வீண் போகாது.."னு சொல்லிவிட்டு அழுவதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

                                                                        ----------------------  தொடரும்-----------------------

No comments:

Post a Comment