Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, August 24, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(23)

Image result for cartoon of young girl and man talking  in canteen
பவித்ரா கண்ணில் பட்டுவிடாதபடி மெதுவாக  வெளியில் வந்து ராம்குமாரைப் பார்த்தபோது ஓவென்று கதறி அழவேண்டும் போல இருந்தது.
"ப்ளீஸ் மேடம்.. கண்ட்ரோல் யுவர் ஸெல்ப். வாங்க கான்டீன்க்குப் போய் டிஸ்கஸ்  பண்ணலாம்."
பதிலேதும் சொல்லாமல் அவரைப் பின்தொடர்ந்து செல்லத்தான் முடிந்தது.
"என்ன சாப்பிடலாம் ?"
"காபி போதும்"
கவுண்டரில் பணம் கட்டி டோக்கன் வாங்கி, கையோடு காபி கப்பை ஏந்தி வந்த ராம்குமார்ஸாரைப் பார்க்கும்போது, "இதெல்லாம்செய்யணும்னு இவருக்கு தலைவிதியா? பாதையில் கண்ணெதிரில்அடிபட்டுக்கீழேகிடப்பவனைக்கூட கண்டுகொள்ளாமல் ஒதுங்கிச்செல்கிற ஜனசமுத்திரத்தில் இப்படியும் சில நல்ல  உள்ளங்கள்..ஓ காட்.. மனிதநேயம் இன்னும் செத்துவிடவில்லை .
"சாப்பிடுங்க.. காபி ஆறுது !"
இதைக் கேட்டதும் சிரிப்பு வந்தது. 
"நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா ? சிரிக்கிறீங்களே ?"
"இதே வார்த்தையை ... ஐ மீன் .. "சாப்பிடுங்க.. காபி ஆறுது"னு பவித்ரா கிட்டே சொல்லி இருந்தா, "காபியை குடிக்கத்தான் முடியும்.. சாப்பிட முடியுமா?"னு கேட்டிருப்பா"
"பாவம்... அன்புக்காக ஏங்குகிற ஜீவன். இன்னும் குழந்தைத்தனம் போகலே "
"அதனால்தான் எங்க டாடி அவளை வெளியே அனுப்பவே பயந்தார். அவர் கஸ்டடியில் எப்பவும் வச்சிருக்கணும்னு நினைச்சார். ஸ்கூல் விட்டால் கூட அவ கம்பெனிக்குத்தான் வரணுமே தவிர வீட்டில் தனியா இருக்கக்கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா சொல்லுவார் "
"வீட்டிலிருந்த ஒரு பொண்ணு காணாமே போய், அவளைப்பத்தி டீவீயில நியூஸ் வர்ற வரை அவளை யாரும் கேர் எடுத்துப்  பார்க்கலையா ?"
"வீட்டில் பங்க்சன் நடக்கற நேரத்தில் நேரங்காலம் தெரியாமே இவ ஏதாவது விஷமத்தனம் பண்ணிட்டு இருப்பாளேனு டாடி அவளை 'உன்னோட ரூமில் இருக்கணும். பங்க்சன் நடக்கறப்பத்தான்  ஹாலுக்கு வரணும்"னு  சொல்லி இருந்தார். அதனாலே அவ ரூமுக்குள் இருக்கிறதா நினைச்சோமே தவிர அவ வீட்டை விட்டு வெளியில் போனதை யாருமே கவனிக்கலே "
"இதையெல்லாம் யார் செஞ்சாங்க ?"   
"அதை வற்புறுத்திக் கேட்கப்போய்த்தான் இந்தப்பொண்ணு கையை கத்தியால் வெட்டிக்கிட்டு பெட்டில் அட்மிட் ஆகியிருக்கிறா !"
"உங்களுக்கு சொந்தபந்தத்தில் விரோதிங்கனு ..."
"நாங்க டில்லியில் செட்டில் ஆகி ரொம்ப வருஷம் ஆச்சு. எங்களோட  சொந்த பந்தங்களை நாங்க சந்திக்கிறதே ரொம்பவும் ரேர். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு எங்க வீடு சொந்தபந்தங்களாலே மூச்சுத்திணறிப்போய் இருந்துச்சு. அந்த சந்தோசம் அதிகநேரம் நிலைக்கலே.. யாரையும் பார்க்கக்கூடாதுங்கிறது எங்க எண்ணம் இல்லை.  படிப்பு, பிசினெஸ்.. அதுஇதுனு வேறே எதையும் சிந்திக்க முடியாதபடி ஒரு ஓட்டப்பந்தயத்தில் நாங்க ஓடிட்டு இருந்தோம்."
"தொழில் முறையில் ஏதாவது....?"
"இதுவரை எந்த பிரச்னையும் இல்லே. லேபர்ஸ் அப்பப்போ முட்டிக்குவாங்க. கொஞ்சநேரம் கழிச்சுப் பார்த்தா கேண்டினில் நின்னு கைகோர்த்து பேசிட்டு இருப்பாங்க. அதனால் அவங்களுக்குள் நடக்கிற சின்ன சின்ன சண்டைகளில் நிர்வாகம் தலையிடறது கிடையாது. "
"இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்குது.. சம்பந்தப்பட்ட டீவீ சேனல் கிட்டே வீடியோ எப்படி கிடைச்சது.. அந்த ஏரியா எங்கே இருக்குது? செஞ்சது யார்னு விசாரிச்சீங்களா ?"
"ஸார் .. இதுமாதிரி விஷயங்களில் எனக்கு எந்த அனுபவமும் கிடையாது.. காலேஜ் ஸ்டடி முடிஞ்சதும் டாடிக்கு ஹெல்ப் பண்ண ரெண்டு மூணு வருஷமா கம்பெனி கணக்கு, நிர்வாகத்தை பார்த்துக்கறேன். அவ்வளவுதான்.. இது எல்லாம் எங்க குடும்பத்துக்கு கொஞ்சமும் தெரியாத ஒண்ணு. பங்க்சன் நடக்கறடைமில்..ஈவினிங் 5.30க்கு போன் வருது..டீவீயை பார்க்க சொல்றாங்க ..அதில் பவித்ரா. அதைப் பார்த்ததும் டாடி கீழே சாய்ஞ்சிட்டார். நரேன் பேமிலி மெம்பர்ஸ் நாங்க இப்பவே கிளம்பறோம்னு நிக்கிறாங்க.. அவங்களை அனுப்பி வச்சிட்டு டாடியை ஆஸ்பிடலுக்கு தூக்கிட்டு ஓடினோம்.  உயிர் போய் ரொம்ப நேரமாச்சுன்னு அவங்க சொன்னபிறகும்கூட ஏதாது செய்து காப்பாத்துங்கனு சொல்லி அழுது புலம்பினோம்..அன்றைக்கு  நைட் முழுவதும் அங்கேதான் இருந்தோம். மறுநாள் பாடியோட வீட்டுக்கு வந்தோம். கொஞ்ச நேரத்தில் எங்க க்ளையண்ட் ராமானுஜம் ஸார் பவித்ராவை அழைச்சிட்டு வந்தார். ஆனாலும் அவருக்கு எந்த விவரமும் தெரியலே. அவளை சேப் ஆக கொண்டு வந்து சேர்த்தார். டாடியோட காரியங்கள் முடியறச்சே இந்த முட்டாள் ஸுஸைட்னு ஒரு பைத்தியக்காரத்தனத்தை பண்ணிட்டுது. இங்கே கொண்டுவந்து அட்மிட் பண்ணினேன்..அடுத்தாப்லே மொட்டைமாடிக்குஓடறா  ஸுஸைட் பண்ணிக்க .. இவளை நான் எப்படி காப்பாத்தப்போறேன்னு தெரியலே. என்னோட மேரேஜ் நின்னுபோனதை நினைச்சு நானே கவலைப்படலே .. இவ ஏன் வொரி பண்ணி க்கணும் ?"
"ரொம்ப ஈஸியா சொல்லிட்டீங்க... இதுதான் பாசங்கிறது .. இந்தப்பாசம்தான் நிறைய வீடுகளில்  பேமிலி மெம்பர்ஸ்ஸை கட்டிப்போட்டு வச்சிருக்குது."
"அந்த கட்டை அறுத்துட்டுப்போக இவ ட்ரை பண்றா.. இவளுக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறதுங்கிறது  எனக்குப் புரிய மாட்டேங்குது."
"உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்மா. இப்படியொரு அக்கா கிடைக்க பவித்ரா ரொம்பவும் லக்கிதான். ரூமுக்குள் பவித்ரா கிட்டே நான் பேசினதை கேட்டீங்கதானே. எங்க வில்லேஜுக்கு அவளை அனுப்பறதில்  உங்களுக்கு எந்த அப்ஜெக்சனும் கிடையாதுதானே.?" 
"அந்த இடம்  சேப்டியா இருக்குமா ?"
"ஹண்ட்ரேட் பெர்சென்ட்  சேப்டி பிளேஸ் .. அங்கே முருகய்யன் இருக்கிறார். அவரைத் தாண்டி ஈ .. காக்கா கூட அங்கே பறக்க முடியாது.. கொஞ்சநாள் அங்கே இருக்கட்டும். அவ சொன்ன டீலை நாம மதிப்போம். அப்புறம்கொஞ்சம் கொஞ்சமா அவளை நம்ம வழிக்கு கொண்டு வரலாம். நீங்க என்ன நினைக்கி றீங்க ?'
"அவ எங்கேயாவது நல்லா இருந்தா சரி.. அவளோட எல்லா செலவுக்கும் நான் பணம் கொடுத்துடுவேன்."
'அட.. பணம் என்னம்மா பணம் ? நினைச்சா அதை எப்போ வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம். போனால் வராதது உயிர் ஒண்ணு தான்."
"எனக்கு சகோதரன்னு ஒருத்தர்  இருந்திருந்தாகூட அவங்க இந்த அளவுக்கு தோள் கொடுத்து துணைக்கு நிப்பாங்களாங்கிறது  சந்தேகந்தான். உங்களை கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொல்றேன்.. உங்ககிட்ட அவளோட லைஃபை ஒப்படைக்கிறேன்."  
"பவித்ராவோட மொபைலை கொண்டுவந்து தரமுடியுமா ?"
"கண்டிப்பா.. டிரைவர்கிட்டே சொன்னா இன்னும் அரைமணி நேரத்தில் கொண்டு வந்து தந்திடுவார்"னு சொல்லிட்டு, கவிதாவுக்கு போன் பண்ணி, "பவி ரூமுக்குப்போய் அவ மொபைலை எடுத்து சார்ஜரில் போடு. ட்ரைவரை அனுப்பறேன். இன்னும் பைவ் மினிட்ஸ்ஸில் அவர் அங்கே வந்திடுவார். ட்ரைவரிடம் கொடுத்தனுப்பணும். கொடுத்திட்டேன்னு நீ சொல்றவரை நான் லைனில்தான் இருப்பேன்"னு சொல்லிக்கொண்டிருக்கும்போது, ராம்குமார் தனது மொபைலில் யாருடனோ காரசாரமான  விவாதத்தில் இருந்தார். 
சிறிது நேரத்தில் ட்ரைவர் மொபைலைக் கொண்டுவந்து தந்தார்.   
மொபைலில் ரிஸீவ்ட் கால் லிஸ்டைப் பார்த்த ராம்குமார், அதிலிருந்த முதல் நம்பரைக்காட்டி "இது உங்க கம்பெனி லேன்ட் லைன் நம்பர்தானா?"னு கேட்டார்.
"இல்லை ஸார் " 
"அதுக்குக்கீழே இருக்கிற நம்பர்ஸ் ?"
"அது எல்லாமே என்னுடைய மொபைல் நம்பர் "
"அப்படின்னா அந்த ஒரேயொரு கால் மட்டும் அன்னோன் பெர்சன் கிட்டே இருந்து வந்திருக்குது. அது யார்னு கண்டுபிடிச்சிட்டா எல்லா விஷயமும் க்ளியர் ஆயிடும்.. உங்க அனுமதியோடு இந்த மொபைலை எடுத்துட்டு நான் வெளியில் போறேன்" னு சொல்லி கிளம்பிச்  சென்றார் ராம்குமார்.  
அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றதும் பவித்ரா இருக்கும் அறைக்குப் போய் அவளருகில் உட்கார்ந்தபோது, தலையணையில் முகம் புதைத்துக் கொண்டு "உன்னோட லவ்வை நானே ஸ்பாயில் பண்ணிட்டேன். என்னாலேதான் உன்னோட என்கேஜ்மென்ட் நின்னு போச்சு.. உன்னைப் பார்க்கிறப்ப எனக்கு செத்துப்போகணும்னு தோணுது.. எல்லாத்துக்கும் நான்தான் காரணம் .. எல்லாமே முடிஞ்சு போச்சு." என்று கதற ஆரம்பித்தாள்.
"அடி அசடே.. முடிவு என்று எதுவும் கிடையாது. ஒன்றின் முடிவிலிருந்து மற்றது, வேறொன்று ஆரம்பிக்கிறது. எதையும் முடிவுன்னு நினைக்காதே. அதுதான் ஸ்டார்டிங் பாயிண்ட்னு நினைச்சுக்கோ.. விமான ஓடுதளம் முடியும் இடத்தில்தான் விமானம் பறக்கவே ஆரம்பிக்கிறது. இன்றுதான் புதிதாக பிறந்ததாக எண்ணிக்கொள். உன் வாழ்வைத் தொடங்கு!" னு சொன்ன வார்த்தைகளுக்குப் பலன் இருக்கத்தான் செய்தது.
"நான் வயல்வெளி வில்லேஜ் போறேன் "
"போ "
"நான் மட்டும்.. நீ வரக்கூடாது "
"வரலே "
"எப்பவுமே.. என்னிக்குமே வரக்கூடாது "
"நீயா மனசுமாறி "என்னைப்பார்க்க வா"னு  நீ கூப்பிடறவரை நான் அந்தப் பக்கமே வரமாட்டேன். "
"ப்ரோமிஸ் ?"
"யெஸ் !"

                                                                  ------------------------- தொடரும் ---------------------------

No comments:

Post a Comment