Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, August 23, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(22)

Image result for cartoon of young girl in hospital bed speaking with a man
"என்ன பேபி சொல்றே? உங்க கம்பெனியில் வெடிகுண்டு வைச்சிருக்கிறதா போன் வந்ததுன்னு செக்யூரிட்டி போன் பண்ணி சொன்னா அதைக் கேட்டு உனக்கு சந்தோஷமா இருந்துச்சா ?"
"ஆமாம் .. பிரதர் "
"ப்ளீஸ் .. என்னைக் குழப்பாதேம்மா.. நான் முடிக்க வேண்டிய வேலைகள் அரைகுறையா  நிறைய இருக்குது..நீ சொல்றதைக் கேட்டா நான் மென்டல் ஆயிடுவேன் போலிருக்கே! குண்டுவச்சிருக்காங்கனு தெரிஞ்சா அதை  கேட்டு பதற வேண்டாமா ? நீ என்னவோ சந்தோசப்பட்டதா சொல்றே ?"
"ஐயோ பிரதர் ! குண்டு வச்சதை நினைச்சு நான் சந்தோஷப்படலே. அந்த விஷயத்தை டாடி கிட்டே, சுமி கிட்டே சொல்லாமே எனக்கு இம்போர்ட்டன்ஸ் குடுத்து சொல்றாங்களேன்னு சந்தோஷமா இருந்துச்சு. டாடியும் சரி ;  சுமியும் சரி; கம்பெனி பத்தி என்னிட்டே பேசவே மாட்டாங்க. நான் எப்பவாவது ஏதாது கேட்டா கூட "உனக்கு ஒண்ணும் புரியாது; படிக்கிறது மட்டுந்தான் உன்னோட டியூட்டி"னு சொல்வாங்க. என்னையும் மதிச்சு கம்பெனி மேட்டர் சொல்லவும் என்னாலே எதையும் நம்பமுடியலே !"
"அப்பாடா..விஷயம் இதுதானா?" என்று பெருமூச்சுவிட்ட ராம்குமார், "அப்புறம் என்ன ஆச்சு?"னு கேட்டார்.
"நான் என்ன செய்யணும்"னு  கேட்டேன். "வாசலுக்கு வந்துடுங்க. அங்கே நம்ம லேபர் ஒருத்தர் வண்டியோடு நிப்பார். நீங்க வந்திடுங்க"னு சொல்லவும் நான் வாசலுக்குப் போனேன். அங்கே ஒரு கார் வந்துச்சு. அதிலிருந்த ஒரு அண்ணா , "வாங்க பேபிம்மா"னு சொன்னதும் நான் காரில் ஏறினேன். கார் கம்பெனி பக்கம் போகாமே வேறே டைரக்சனில் போச்சு.. எங்கே போறீங்க. கம்பெனிக்கு ரூட் இது இல்லையேன்னு சொன்னேன். "உஷ்..நாங்க இறக்கி விடற இடத்தில் நீ இறங்கணும். வாயைத் திறந்தே உங்க டாடியை போட்டுத் தள்ளிடுவோம். சுமி மேடத்தை மேலே அனுப்பிடுவோம்"னு  சொன்னாங்க" என்று சொல்லி விட்டு விசும்பி அழ  ஆரம்பித்தாள்  பவித்ரா.
"ஓகே.. கூல் டவ்ன் .. இப்போ நீ பத்திரமா இருக்கிறே ? ஏன் அழறே ? சூடா ஒரு கப் பால் கொண்டு வரச்சொல்லட்டுமா ?"
"நோ ..ஐ டோன்ட் வான்ட் "
"சரி.. அப்புறம் ?"
"ஆம் ஐ டெல்லிங் எ ஸ்டோரி ?"
"நோ. பேபி. யூ ஆர் டிஸ்க்ரைப்ப்பிங் தி இன்சிடெண்ட்ஸ் .. தட்ஸ் ஆல்.  கன்டினியூ  "
"ஒருஇடத்தில் நிறைய கேர்ள்ஸ் நின்னுட்டு இருந்தாங்க. என்னையும் அவங்க கூட சேர்ந்து நிக்க சொன்னாங்க. அப்போ உடனே ஒரு போலீஸ் வேன் வந்துச்சு. எல்லாரையும் ஏறுங்க ஏறுங்கனு சொன்னாங்க. வேன் வரவும், என்னை ஏற சொன்னதும் நான் பயந்து அழ ஆரம்பிச்சிட்டேன். அப்போ அங்கே ராமானுஜம் அங்கிள் நிக்கிறது தெரிஞ்சுது. நான் அங்கிள்னு கத்தினேன். அவர் என்னைப் பார்த்திட்டார். ஒரே கும்பல். வேன்  கிளம்ப முடியாமே ரொம்ப ரஷ் . கொஞ்சநேரம் கழிச்சு  ராமானுஜம்அங்கிள் வந்து "நீ இறங்கி வாம்மா  பவித்ரா . இறங்கி வா"னு சொன்னதும் நான் கீழே இறங்கிட்டேன். அங்கிள் என்னை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தார்."
"உடனேயே வீட்டுக்கு வந்திட்டீங்களா ?"
"இல்லை. சில ரௌடீஸ் எங்களை சுத்திசுத்தி வந்திட்டு இருந்தாங்க. அங்கிள் எங்கவீட்டுக்கு போன் பண்ணினார். யாரும் போன் அட்டென்ட் பண்ணலே . அங்கிளோட வெஹிகிள் ப்ரோப்லம்  சால்வ் ஆகவே ரொம்ப நேரம் ஆயிடுச்சு . இப்போ சூழ்நிலை சரியில்லே. இந்த மிட்நைட்டில் நாம  முப்பது கிலோ மீட்டர் டிராவல் பண்றது சேஃப்ட்டி இல்லே. என்னோடவீடு ரெண்டு கிலோ மீட்டர் டிஸ்டன்ஸில்தான். இன்னிக்கு அங்கே தங்கிட்டு நாளைக்கு காலையில் உங்க வீட்டுக்குப் போயிடலாம்னு சொன்னார். நான் சரினு சொன்னேன். அந்த அங்கிள் வீட்டு ஆன்டி ரொம்ப நல்லவங்க. என்னை ரொம்ப பாசமா பார்த்து க்கிட்டாங்க. அவங்க வீட்டில் ட்வின்ஸ் இருந்தாங்க .. பேர் ராம் லக்ஷ்மண்  . அவங்க என்கிட்டே ரொம்பவும் அன்பா பேசினாங்க. எனக்கு அந்த பேமிலியை ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அவங்க எல்லாரும் சாப்பிட்டு முடிச்சப்பறம் ரொம்ப நேரம் ஒண்ணா உக்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க  ரொம்ப ஜாலி !"
"உங்க வீட்டில் அப்படிப் பேச மாட்டீங்களா ?"
"ஊஹூம்.. தினமும்  நான் ஸ்கூல் முடிஞ்சு நேரே கம்பெனிக்குப்போய் அப்பா கண்ணெதிரில் உட்கார்ந்து படிக்கணும். ஹோம் ஒர்க் பண்ணனும். நைட் ஆனதும் மூணு பேரும் வீட்டுக்குப் போவோம். கவிதா அக்கா டிபன் பண்ணி வச்சிருப்பாங்க. டாடி அவர் ரூமில் உட்கார்ந்து சாப்பிடுவார். அக்கா, "எனக்கு பசிக்கலே. நீ சாப்பிட்டுட்டு தூங்கு"னு சொல்லிடுவா. நான் மட்டுந்தான் தனியா உட்கார்ந்து சாப்பிடுவேன். அதான் எனக்கு அங்கிள் வீடு ரொம்பவும் பிடிச்சுது . அங்கேயே இருக்கனும்போல இருந்துச்சு " என்று பவித்ரா சொன்னதை கனத்த இதயத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார் ராம்குமார்.
"பாவம்..அன்புக்காக ஏங்குகிற ஜீவன்!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். "சரி அதெல்லாம் போகட்டும். உங்க டாடி இறந்துட்டார். உன்னோட அக்கா உன் மேலே அவ்வளவு உயிரா இருக்காங்க. அவங்களைப் பிரிஞ்சு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு. நீ இல்லாட்டா அவங்க தவிச்சுப் போயிடுவாங்கனு நீ நினைச்சுக்கூடப் பார்க்கலே. அப்படித்தானே? நினைச்சிருந்தா தற்கொலை பண்ண நீ முடிவெடுத்திருக்க மாட்டே"
"என்னாலேதான் அக்காவோட எங்கேஜ்மெண்ட் நின்னு போச்சு. என்னால்தான் டாடி இறந்து போனார். நான் கில்டியா பீல் பண்றேன். இன்னிக்கு இல்லாட்டா நாளைக்கு நான் செத்துப் போயிடுவேன்."
"நோ.. பேபி... நோ.. முட்டாள்தனமா முடிவெடுக்கக்கூடாது. அடுத்தவேளை சோத்துக்கு இல்லாதவன்கூட வாழமுடியுங்கிற நம்பிக்கையில் இருக்கிறான். உனக்கு என்ன குறை? "
"சுமி ஆசை என்னாலே ஸ்பாயில் ஆயிடுச்சு. அவளைப் பார்க்கிறப்ப எனக்கு செத்துப் போகணும் போல இருக்குது "
"சரி.. அவங்கள பார்க்க வேண்டாம். நீ எங்க வீட்டுக்கு வர்றியா ?"
"நான் யாரையும் பார்க்க விரும்பல. மனுஷங்க இல்லாத இடத்தில் நான் போய் இருக்கணும். இல்லாட்டா செத்துப்போயிடணும். இங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப்போகக் கூட எனக்கு விருப்பமில்லே. வீட்டுக்குப் போறச்சே காரில் இருந்து குதிச்சிடலாமான்னு யோசிக்கிறேன்.  "
"நோ பேபி. அப்படில்லாம் பண்ணக்கூடாது. மனுஷங்க இல்லாத இடத்துக்கு உன்னை அனுப்பி வைக்கட்டுமா ?"
"எங்கே பிரதர் ? செவ்வாய் கிரகத்துக்கா ?"
"இல்லே.. எங்க கிராமத்துக்கு "
"அது எங்கே இருக்குது? அங்கே ஆளுங்களே இல்லையா ?"
"திருநெல்வேலியிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்குது. அங்கே விவசாய வேலை செய்ற ஜனங்க மட்டும்தான். அந்த ஊரில் எனக்கொரு வீடு இருக்குது. வீட்டைப்பார்த்துக்க வள்ளி, அவளோட மாமா அங்கே இருக்கிறாங்க. நீ அங்கே போய் கொஞ்சநாள் இரு..அப்பப்போ வந்து உங்க அக்காவைப் பார்த்துட்டுப் போ. அக்கா உன்னைப் பார்க்க அங்கே வருவாங்க "
"இந்த டீலுக்கு நான் ரெடி இல்லே !"
"ஏன்?"
"அங்கே ஒன்ஸ் போயிட்டா நான் திரும்பி இங்கே வரமாட்டேன். இங்கிருந்து யாரும் என்னைப் பார்க்க வரக்கூடாது. இந்த டீலுக்கு ஓகேன்னா நான் அங்கே போய் இருக்கிறேன். டீலை மீறி யாராவது என்னை பார்க்க வந்தா ... பார்க்க வந்தா.. "
" பார்க்க வந்தா என்ன செய்வே ?"
"நான்  வேறேஎங்கேயாவது போயிடுவேன்.. எங்கேனு உங்க யாருக்கும்  நான்  சொல்ல மாட்டேன்.  "
"டீலை யாரும் பிரேக் பண்ண மாட்டோம். நீ எப்போ எங்க கிராமத்துக்குப் போறேனு சொல்லு.. நான் முருகய்யனுக்கு இன்பார்ம் பண்ணிடறேன்."
"இங்கிருந்தே நான் ஸ்ட்ரைட்டா அங்கே போயிடறேன் "
"இது கொஞ்சம் ஓவரா தெரியுதே பேபி .. சுமி பாவந்தானே.. போனாப்போகுது . அவங்ககூட ஒரு மூணுநாள் இருந்துட்டுப் போகலாந்தானே ..நம்ம சுமி.. பாவம் சுமி "
"ஓகே.. ஆனா அவ எங்கிட்டே தொணதொணன்னு எதுவும் பேசக்கூடாது. கேட்கக் கூடாது "
"பேச மாட்டாங்க... கேட்க மாட்டாங்க.."
"பேசினா ?"
"நான் எதுக்கு இருக்கிறேன். டீலை மீறினா ரெண்டுலே ஒண்ணு பார்த்திட  மாட்டேனா?  சிவியரா பனிஷ் பண்ணுவேன் "
"குட்..நான் உங்க வில்லேஜுக்கு போறேன் "
"பேபி.. அங்கே உன்னோட பேச பழக உன்னோட ஏஜ் குரூப் கேர்ள்ஸ் யாரும் கிடையாது. முக்கியமா அங்கே கரெண்ட் கிடையாது... உனக்காக வேணும்னா டவுனில் வீடு ஏற்பாடு பண்ண  சொல்லட்டுமா ?"
"நோ..பிரதர்..கரெண்ட் இல்லாட்டா பரவாயில்லே.. ஐ கேன் மேனேஜ் "
"ம்.. இதுதான் சமர்த்துப்பொண்ணுக்கு அடையாளம்..நீ நாளைக்கே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போறே.. பாவம் சுமி.. சுமிகூட மூணுநாள் இருக்கிறே..அப்புறம்  எங்க வில்லேஜ் வயல்வெளிக்கு போறே. ஓகே ?"
"ஓகே!"
"அப்படின்னா நான் இப்போ கிளம்பறேன்.. நாளைக்கு வந்து உன்னை மீட் பண்றேன். "
'ஓகே பிரதர் "
"உன்கிட்டே மொபைல் இருக்குதா ?"
"ஓ..இருக்குதே..ஆனா வீட்டில் இருக்குது. சுமி எங்கேஜ்மெண்ட் அன்னிக்கு போன் வந்தப்ப, போன் அட்டென்ட் பண்ணிட்டு நான் வெளியில் போனேன் தானே..அதுக்கப்பறம் எனக்கு போன் எதுவுமே  வரலே.  என்னோட ரூமில்தான் போன் இருக்கணும்."
"சரி..அதை அப்புறமா தேடிக்கலாம்"னு   சொல்லிவிட்டு ராம்குமார் அறையை விட்டு வெளியேறினார்.
பவித்ரா பார்க்காத வண்ணம். எனக்கு சைகை செய்து என்னை வெளியில்வரச் சொன்னார்.

                                                                                ------------------தொடரும் ---------------------

No comments:

Post a Comment