Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, August 22, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(21)

Image result for cartoon of young girl in hospital bed

"பிடியுங்க..பிடியுங்க" என்று கூச்சலுடன் ஆஸ்பிடல் ஸ்டாப்ஸ் பின்னால் ஓடி வர யாருடைய கையிலும் அகப்படாமல் மாடிப்படிகளில் தாவித்தாவி ஏறி ஓடிக்கொண்டிருந்த பவித்ராவை தடுத்து நிறுத்திய கைகளையும் மீறிக் கொண்டு பவித்ரா ஓட முயன்றாள்.
"ஹாய்.. பேபி.. இந்த ஓட்டத்தை ..ஸ்பீடை ஏதாவது ஸ்போர்ட்ஸ் இல்லாட்டா டோர்னமெண்டில் காட்டியிருந்தால் நீதான் சாம்பியன்.. உன்னை ஜெயிக்க ஆளே இல்லாமல் போயிருக்கும் " என்று சிரித்துக்கொண்டே சொன்னவரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் பவித்ரா.
அதற்குள் ஆஸ்பிடல் ஸ்டாப்ஸ் வந்து அவளைப் பிடித்துக் கொண்டார்கள். அவளை ஆளுக்கொரு பக்கமாக பிடித்துக்கொண்டு வலுக்கட்டாயமாக அவளது அறைக்கு அழைத்துச் செல்ல, அவர்களில் ஒருவனைக் கூப்பிட்டு விவரம் கேட்டார் பவித்ராவைப் பிடித்துக் கொடுத்தவர்.
"என்னப்பா விஷயம். அந்த கேர்ள் ஏன் மாடிக்கு ஓடறா ?"
"தற்கொலை பண்ணிக்க "
"என்னது ?"
"ஏற்கனவே கத்தியாலே கைநரம்பை கட் பண்ணிட்டுது  இந்த பொண்ணு. இத   ஸுஸைட் அட்டெம்ப்ட் கேஸில் வார்டில் அட்மிட் பண்ணி இருக்கிறாங்க. அட்டெம்ப்ட் பெயில்ங்கிறதாலே திரும்பவும் மொட்டைமாடிக்கு ஓடுது அங்கி ருந்து குதிக்கிறதுக்காக."
"என்ன விஷயம்.?"
"பெரிய இடத்து விவகாரம்.. உங்களுக்கு டீடைல்ஸ் வேணும்னா அவங்களை கேளுங்க. செகண்ட்  ப்ளோர் .. ரூம் நம்பர் செவன். பேர் பவித்ரா  " 
"தேங்க்ஸ் ஸார் " என்று அவர் சொல்லும்போது அவருடைய மொபைல் குரல் கொடுக்கவே, போனில் பேசியபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
"ச்சே..கொஞ்சநேரத்தில் இந்தப்பொண்ணு என்னென்ன கலாட்டா பண்ணி இருக்குது. பெரிய இடங்கிறதாலே ஆஸ்பிடல் ரூல்ஸ்ஸை ரிலாக்ஸ்ட் பண்ணினது தப்பா போச்சு. இன்னிக்கு முதல்வேலையா யூனிபார்ம் கொடுத்து, நீ ஒரு பேஷண்ட்.. எங்க கஸ்டடியில்தான் நீ இருக்கணுங்கிறதை ஞாபகப் படுத்தணும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள் நர்ஸ்.
"வீட்டுக்கு இன்பார்ம் பண்ணியாச்சா ?"
"வந்துட்டே இருக்கிறாங்களாம்"
அரைமணிநேரம் கழிந்திருக்கும். ரூம்கதவை மிகமெலிதாக யாரோதட்டுவது தெரிந்தது.
கதவைத் திறந்தவுடன், "இங்கே பவித்ரானு ஒரு கேர்ள்..." என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, "மேம்...  உங்க சிஸ்டரை காப்பாத்தினது இவர்தான் .  இவர்மட்டும் தடுத்துப் பிடிச்சிருக்காட்டா, உங்க சிஸ்டர் ஓடின ஓட்டத்துக்கு அவங்களை கிரவுண்ட் ப்ளோரில் பார்த்திருக்க முடியும்" என்று விளக்கினாள் நர்ஸ்.
"வாங்க.. ஸார் ... நீங்க பண்ணின உதவிக்கு ரொம்ப நன்றி. ஏதோ தெய்வமாகப் பார்த்து உங்களை அந்த இடத்தில் நிறுத்தி இருக்கிறது இவளைத் தடுத்த நிறுத்த "
"என் பேர் ராம்குமார்..  சினிமா டைரக்டர்.."
"உங்களோட படம் பார்த்திருக்கிறேன்.. ஆனா உங்களைப்பத்தி அதிக விவரம் தெரியாது"
"என்னோட க்ளோஸ் ரிலேஷன் ஒருத்தர் இங்கே அட்மிட் ஆகி இருக்கிறார்.. அவரைப் பார்த்துட்டு கீழே இறங்கி வர்றப்பதான் இந்த கேர்ள் ஓடி மாடி ஏறிட்டு இருந்தா.. வழக்கமா இந்தமாதிரி நிறைய ப்ளோர் இருக்கிற இடத்தில் ஏற இறங்க நான் லிஃப்ட்தான் யூஸ் பண்ணுவேன்.. இன்னிக்கு என்னவோ மாடிப்படி இறங்கணும்போல ஒரு ஃபீலிங் வந்துச்சு..  உங்க சிஸ்டர் தூங்கிட்டு இருக்கிறாங்க போலிருக்கு !"
"தூக்கத்துக்கு இன்ஜெக்சன் போட்டிருக்காங்க."
"ஏன் இப்படியொரு விபரீத முடிவு ? படிப்பில் ஏதாவது சப்ஜெக்டில்  பெயிலா அல்லது லவ் மேட்டரா ?"
"ரெண்டுமே இல்லை..அவ வாயைத் திறந்து எந்த விஷயமும் சொல்லலே.. நீங்க என்னோட தங்கை உயிரைக் காப்பாத்தி இருக்கீங்க..  உங்ககிட்டே  ஓபன் ஆக பேசியே ஆகணும்.."
பவித்ரா பிறந்ததிலிருந்து அன்றுவரை நடந்த அனைத்தையும் சொன்ன போது "சில சமயங்களில் ரியல் ஸ்டோரீஸ் ரீல் ஸ்டோரீஸ்ஸை மிஞ்சிடுது. வொரி பண்ணாதீங்க. ஏன் அங்கே போனாங்கிறதை கேட்டு தெரிஞ்சுக்கிட்டு நாம மேல் கொண்டு என்ன செய்யலாம்னு பார்க்கலாம். நான் எப்படியும் இன்னும் ஓன் வீக் டில்லியில்தான் இருப்பேன். உங்க ஸிஸ்டர் நார்மல் ஹெல்த்துக்கு வந்ததும் எனக்கு ரிங்க் பண்ணுங்க.." என்றார்.
"ஸார் .. இன்னிக்கே இவளை இங்கிருந்து அழைச்சிட்டு போயிடலாம்னு திங்க்  பண்றேன் "
"அப்படியா  ?"
"நீங்க பேசிப்பார்க்கிறதா சொல்றீங்களே.."
"எனக்காக இன்னும் ஒரேஒரு நாள் மட்டும் இங்கே வச்சிருங்க. அதற்குள் அவங்ககிட்டே இருந்து விஷயத்தை வாங்கிடுவேன். நான் பேசறப்ப அவங்க கண்ணில்படாமே மறைவா இருங்க. அவங்க சொல்றதை கவனமா மைண்ட்ல ரிக்கார்ட் பண்ணிக்கோங்க. அப்பத்தான் எனக்கு டவுட் வர்றப்ப உங்ககிட்டே கேட்டு க்ளியர் பண்ணிக்க வசதியா இருக்கும். ராத்திரி மணி பன்னிரெண்டா இருந்தாலும் பரவாயில்லை. அவங்க  கண்ணைத் திறந்ததும் எனக்கு போன் பண்ணுங்க.. நான் போர்த்  ப்ளோர்ல இருக்கிறேன்."
"ஓகே ஸார் "
பவித்ரா கண்ணைத் திறந்தபோது இரவு மணி எட்டைத் தாண்டி இருந்தது.
பாலை ஊற்றிக் கொடுக்கும்படி ரூம் அட்டெண்டர்க்கு சிக்னல் கொடுத்துவிட்டு வெளியில் வந்து ராம்குமார் ஸாருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி விட்டு ரூமுக்குள் வந்து மறைவாக உட்கார்ந்து கொண்டு அங்கு நடப்பதை கவனிக்க தயாரானேன்.
அறைக்குள்வந்த  ராம்குமார் "ஹாய் பேபி! எப்படி இருக்கிறே?"னு   கேட்டார்.
அவரைக்கூர்ந்து கவனித்த பவித்ரா, "நீங்கதானே என்னை ஓடவிடாமே பிடிச்சு கொடுத்தீங்க?" என்று கோபமாக கேட்டாள் பவித்ரா.
"தப்புதான்.. தோப்புக்கரணம் வேணும்னா போடட்டுமா ?"னு கேட்டபடி காதுகள் இரண்டையும் பிடித்தபடி தோப்புக்கரணம் போட ஆரம்பித்தபோது பவித்ரா சிரிப்பை அடக்க மிகவும் கஷ்டப்பட்டாள் .
"போதும்... போதும்... மன்னிச்சிட்டேன்.. நீங்க ஏன் என்னை தடுத்தீங்க ?"
"நீ ஏன் அப்படியொரு முடிவுக்கு வந்தே ?"
"என்னாலே எல்லாருக்கும் கஷ்டம் !"
"கஷ்டம் ? அப்படினு யார் சொன்னது ?"
"யாரும் சொல்லலே.. எனக்கே தெரியும் "
"உனக்கு பிரதர்ஸ் இருக்கிறாங்களா ?"
"இல்லே "
"இனிமே நான்தான் உனக்கு பிரதர்.. நீ என்னோட பாசமலர்.. செல்ல தங்கை. நீ இந்த அண்ணன்கிட்டே எதையும் ஓப்பனா பேசணும் . ஓகே ?"
"ஓகே பிரதர் "
"அன்னிக்கு உங்க வீட்டில் என்ன விசேஷம் ?"
"சுமிக்கு மேரேஜ் எங்கேஜ்மென்ட் "
"அக்காவுக்கு  எங்கேஜ்மென்ட்ன்னா உனக்கு சந்தோஷந்தானே ?"
"யெஸ் .. ஸ்சுயர்!"
"கெஸ்ட், ப்ரெண்ட்ஸ்..மாப்பிள்ளைவீட்டுஆளுங்கனு நிறையபேர்வந்திருப்பா  ங்க தானே ?
"ஆமாம் "
"எல்லாரும் உங்கவீட்டுக்கு, உங்க அக்காவோட மேரேஜ் எங்கேஜ்மென்ட்க்கு வந்திருக்கிறப்ப அவங்களை நல்லா கவனிக்கவேண்டிய ரெஸ்பான்சிபிலிட்டி  உனக்கு  இருக்குதானே ?"
"ஆமா "
"உன்னோட டியூட்டியை  நீ கரெக்ட்டா பண்ணினியா ?"
இதைக்கேட்டதும் தலையைக் குனிந்தபடி  அமைதியாக இருந்தாள்  பவித்ரா,
"பதில் சொல்லாமே அமைதியா இருந்தா எப்படி? உன்னோட டியூட்டியை  நீ கரெக்ட்டா பண்ணினியா ?"
"இல்லை"
"ஏன் ?
"நான் வீட்டை விட்டு வெளியில் வந்தேன்."
"எதுக்காக ?"
"எனக்கு ஒரு போன் வந்துச்சு .. அதைக் கேட்டதும் நான் ஷாக் ஆயிட்டேன் "
"போனில் யார் பேசினாங்க ? என்ன சொன்னாங்க?"
"நான் போனை எடுத்து ஹலோ சொன்னதும் "செக்யூரிட்டி பேசறேன்"னு சொன்னதும் "இருங்க..  நான் டாடிகிட்டே போனை குடுக்கிறேன். டாடிக்கு இல்லாட்டா அக்காவுக்கு போன் பண்றதுதானே?"னு கேட்டேன்.
"வேண்டாம்மா.. ரொம்ப முக்கியமான விஷயம். டாடி ஹார்ட் பேஷண்ட். மேடம் இப்போ அங்கே இருந்தே ஆகணும். நம்ம கம்பெனியில் வெடிகுண்டு வச்சிருக்கிறதா ஒரு போன் வந்துச்சு. நீங்க உடனே கிளம்பி வந்தால்  அதுபத்தி மேற்கொண்டு என்ன செய்றதுன்னு பார்க்கலாம்"னு சொன்னார்.
"அதைக்கேட்டதும் உனக்கு எப்படி இருந்தது? என்ன தோணுச்சு ?"
"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு!"
இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார் ராம்குமார்.

                                                                            -----------------------தொடரும் -------------------------

     

No comments:

Post a Comment