Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, August 28, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(27)

Image result for cartoon of cock and hen eating wheat
கையில் டைரியுடன் பிரபு வீட்டைவிட்டுப் போனதை வள்ளி கவனித்தாலும் அதைப்பற்றி பிரபுவிடம் எதுவும் கேட்கவில்லை.
பவித்ராவின்குடிலின்முன்பாக நின்றுகொண்டு,"என்னங்க..உள்ளே வரலாமா?" என்று பிரபு கேட்டான்.
"வரலாமே!" என்று சொல்லியபடி வெளியில் வந்த பவித்ரா, பிரபுவின் கையில் டைரியைப் பார்த்ததும், "அடடே.. அதுக்குள்ளே படிச்சு முடிச்சாச்சா? செம பாஸ்ட்   ரீடிங் போலிருக்குது !" என்றாள்.
"அதைவிட வேறு வேலை என்ன இருக்குது? நீங்க  ப்ரீயா? உங்க கிட்டே நிறைய பேசணும் "
"ஓ..பேசலாமே.. உள்ளே வாங்க!" என்ற பவித்ரா அவன் முன்பாக நாற்காலியை இழுத்துப்போட்டாள்.
உள்ளேவந்து உட்கார்ந்த பிரபு, "என்ன தைரியத்தில் நீங்க  முன்பின் தெரியாத என்னை வீட்டுக்குள் அலவ் பண்றீங்க? என் மேலே அந்த அளவுக்கு நம்பிக்கை யா ?" என்று கேட்டான்.
"எனக்கு என் மேலே நம்பிக்கை இருக்கிறது "
"குட்.. அது இருந்தால்தான் லைபில் ஜெயிக்க முடியும் !"
"இன்னொரு முக்கியமான விஷயம், ராம்குமார் ஸார் அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்பிவிடமாட்டார்.  ஒருசிலரை  முதல்முறையா பார்க்கும்போதே பிடித்துப்போயிடுமாம். அவங்களோட பிரெண்ட்ஷிப்பை இவரே தேடிப்போய்   ரினியூ  பண்ணிக்குவாராம். இதை அவரே சொல்லி இருக்கிறார். அவர் யாரை முழுமனசா நம்புறாரோ அவங்களைத்தான் வயல்வெளியில்.. அவர் வீட்டில் தங்கிறதுக்கு அலவ் பண்ணுவார்..   இங்கே வந்த சில நாளிலேயே  நான் அதை தெரிஞ்சுகிட்டேன். ஸாரே  உங்களை இங்கே அனுப்பி இருக்கிறதாலே எனக்கு உங்க மேலே குட் ஒபினியன் இருக்குது "
"ஓ .. காட் ..தேங்க்ஸ் எ  லாட் !"
"சரி.. என்ன சாப்பிடறீங்க ?"
"அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.. நீங்களும் உட்காருங்க.. நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க "
"ஓஹோ.. ஸார் கதை எழுதற வேலையை விட்டுட்டு எப்போ பேட்டி  எடுக்கிற வேலையில் பிள்ளையார் சுழி போட்டார் ?"
"ஜஸ்ட் நவ் ! நீங்க இங்கே வந்து எவ்வளவு நாள் இருக்கும் ?"
"ஒரு சின்ன கரெக்சன் உங்க கேள்வியில் பண்ண வேண்டி இருக்குது !"
"அப்படியா? என்ன ?"
"எவ்வளவு நாள் இருக்கும்கிற உங்க கேள்வியைத் திருத்தி எத்தனை வருஷம் இருக்கும்னு கேளுங்க !"
"சரி.. நீங்க இங்கே வந்து எத்தனை வருஷம் இருக்கும் ?"
"எட்டுவருஷம் ஆகுது.. என்னோட பிப்டின்த் பெர்த்டே வந்தப்ப நான்  இங்கே வந்தேன்.  இப்போ எனக்கு டுவென்ட்டி தேர்ட் பெர்த்டே வரப்போகுது "
"அட்வான்ஸ் க்ரீட்டிங்ஸ்... ட்ரீட் உண்டுதானே ?"
"குடுத்திட்டா போச்சு."
"உங்க சிஸ்டர்க்கு உங்ககிட்டே ரொம்பவும் பாசம் போலிருக்குது ?"
"ஆமாம்.. எனக்காக அவ எவ்வளவோ தியாகம் பண்ணி இருக்கிறா "
"இங்கே வருவாங்களா ? நீங்க அவங்களைப்பார்க்க போறதுண்டா ?"
"ரெண்டும் இல்லே "
"என்னங்க இப்படி சொல்றீங்க ? அவங்களை கடைசியா எப்போ பார்த்தீங்க?"
"அதுவா? நான் ராம்குமார்ஸாரோடு சென்னைக்குவர ஏர்போர்ட்க்கு வந்தப்ப  எனக்கு  டாட்டா சொல்ல சுமி வந்தா "                   
"அதுக்குப்பிறகு நீங்க அவங்களைப் பார்க்கவே இல்லையா ?"
"இல்லை!"
சில நிமிடங்கள் மவுனத்தில் கரைந்தது.
"குடிக்க கொஞ்சம் தண்ணீர் தர்றீங்களா ?"
பவித்ரா கொண்டு வந்து கொடுத்த தண்ணீரை மடமடவென்று குடித்து முடித்த பிரபு, "நீங்க ரொம்பவும் கேஷுவலா இல்லைனு சொல்றீங்க. அதை என்னால் ஜீரணிக்க முடியலே.. அதான் தண்ணீரைக் குடித்து டைஜஸ்ட் பண்ணினேன் " என்றான்.
பேச்சை திசை திருப்புவதற்காக, "டில்லியில் விவசாயிகள் போராட்டம் பத்தி என்ன நினைக்கிறீங்க ?" என்று கேட்டாள் 
"டில்லிக்குப்போய்அத்தனைபேரையும்அள்ளிப்போட்டுக்கிட்டு தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கணும்  போலிருக்குது "
"ஏன் ?"
"தமிழ்நாட்டை காப்பாத்துவேன். தமிழ்நாட்டை முன்னேத்திவிட்டுதான் என் மூச்சையே நிறுத்துவேன்னு மேடைக்கு மேடை சீன் போட்டவங்க எல்லாரும் இப்போ வெள்ளையும் சொள்ளையுமா பதவிக்கும் பணத்துக்கும் குடுமிப்பிடி சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. அதை தவிர வேறு எதுவும் நடக்கலே. ஸ்கூல் பசங்க பிக்னிக் போன மாதிரி லைபை என்ஜாய் பண்ணிட்டு இருக்கி றாங்க. ரோம் பத்தி எறிஞ்சப்ப எவனோ பிடில் வாசிச்சானாம். அந்தக் கதையை பொறுப்பான பதவியில் இருக்கிறவங்க கொஞ்சமும் பொறுப்பில்லாமே செஞ்சிட்டு இருக்கிறாங்க. இந்த விவசாயிங்க பரதேசிக் கோலத்தில் ஒட்டு மொத்த ஜனங்களுக்கும் சேர்த்து குரல் கொடுத்து போராட்டம் நடத்திட்டு இருக்கிறாங்க.  பாவம்.. இந்த விவசாயிங்க ஏன் தன்னை வருத்திகிட்டு அங்கே போய் தவம் கிடைக்கணும்.  உங்களுக்கு இல்லாத அக்கறை எங்களுக்கு ஏன் ? பசியோபட்டினியோ..அதை மத்தவங்ககூட சேர்ந்து நாங்களும் அனுபவிச்சுக்கி றோம். தண்ணி கொண்டுவந்தா விவசாயம் பண்றோம்..இல்லாட்டா உங்ககூட சேர்ந்து நாங்களும் வானத்தை பார்த்துகிட்டு உக்காருறோம்னு கிளம்பி வந்திடணும் .. இவங்க உயிரைக் குடுத்து போராட்டம் நடத்தி ஜெயிச்சா, எங்க ஆட்சியில்தான் தண்ணீரைக் கொண்டுவர முடிஞ்சுதுனு அவனவன் மெடலை தனக்குத்தானே குத்திக்குவான். கோழி ஒண்ணு  கோதுமை விதைச்ச மாதிரி ஆயிடும்.  "    
"கோழி எப்போ கோதுமை விதைச்சது ? எங்கே விதைச்சது ?"
"அது ஒரு கதையிலே.. நான் சின்ன வயசில் ஸ்கூலில் கேட்ட கதைங்க அது. உங்களுக்குக்கூட ஸ்கூலில் அந்தக்கதையை  சொல்லிக் கொடுத்திருப்பாங்க. நீங்க  மறந்துருக்கலாம்.    "
"அப்படியா? நான்அப்படி ஒரு கதையை படிக்கிறப்ப கேட்டதே இல்லை. ப்ளீஸ் சொல்லுங்க "
"இந்தக் கதையை ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்லுவாங்க "
"ஒவ்வொரு மாதிரினா ? எனக்குப் புரியலே "
"அதாங்க... ஒருசிலர் கோதுமை விதைச்ச கதைனு சொல்லுவாங்க. கொஞ்ச பேர் கோழி கீரை விதைச்ச கதையா இருக்குதேனு சொல்லுவாங்க."
"ஓஹோ.. உங்களுக்கு தெரிஞ்ச கதையை சொல்லுங்க "
"எங்க மிஸ் எங்களுக்கு கோழி கோதுமை விதைச்சதா கதை சொன்னாங்க. விவசாயம், நெல்லறுக்கிறது, வேகவைக்கிறது, வெந்த நெல்லைக்கொண்டு போய் நடுரோட்டிலே இல்லாட்டா ஏதாவது மைதானமா இருக்கிற இடத்திலே காய வைக்கிறது எல்லாமே வில்லேஜ்ஜில் நடக்கிற சாதாரண விஷயம். அதே போலவீட்டுக்குவீடு கோழி வளர்க்கிறதும் சர்வசாதாரண விஷயம்.  வெயிலில் காய வச்சிருக்கிற நெல்லைக்கொத்தித்தின்ன அக்கம்பக்கத்துவீடுகள்ல  உள்ள கோழிங்க வரும். அந்தக்கோழிகளை அங்கே காவலுக்கிருக்கிறவங்க கல்லை எடுத்து எரிஞ்சு துரத்துவாங்க. இந்தக் கல்லடியை பட விரும்பாத ஒரு கோழி கொஞ்சம் மாத்தி யோசிச்சுது. "
"ஓ "
"இப்போ நீங்க நெல்லை மறந்துடுங்க. கோதுமைனு ஞாபகம் வச்சுக்கோங்க. மாத்தி யோசிச்ச அந்தக்கோழி  அதோட சொந்தபந்தங்கள் கிட்டேஇனிமே நம்ம தேவைக்கு நாமளே விதைச்சு அறுவடை பண்ணி சாப்பிடலாம்.. எதுக்காக நாம கல்லடி படணும். என்னோடு சேர்ந்து யாரெல்லாம் நிலத்தை உழுது கோதுமை விதைக்க  வாரீங்கனு கேட்டுச்சு. சொந்தபந்தங்கள்  எந்த பதிலும் சொல்லலே. அதனாலே இதுமட்டுமே தனியாளாக நின்னு நிலத்தைஉழுது கோதுமையை விதைச்சுது. கொஞ்சநாளிலே கோதுமைசெடி நல்லா வளந்துட்டுது. அதுக்கு தண்ணீர் ஊத்தவோ, வளர்ந்தசெடியை பாதுகாக்கவோ, சொந்தபந்தங்கள் எதுவும் துணைக்கு வரலே. ஆனா கோதுமையை அறுவடை பண்ணி வீட்டுக்கு எடுத்து வந்ததும் எல்லா சொந்தபந்தங்களும் இந்தகோழிகிட்டே அவங்களுக்கு கோதுமை வேணும்னு கேட்டதாம். கோதுமையை விதைக்கவோ, கோதுமை செடிக்கு தண்ணீர் ஊத்தவோ, விளைஞ்ச கதிரை அறுக்கவோ, அதைக் கட்டி எடுத்துட்டு வரவோ நீங்க யாருமே வரலை. இப்போ கோதுமை கேட்டு வந்து நிக்கிறீங்க.. பாடுபட்டவன் பலனை எதிர்பார்த்தால் அது நியாயம். எந்தவொரு வேலையும் செய்யாத உங்களுக்கு இதில் பங்கு கிடையாதுன்னு சொல்லி விரட்டுச்சாம் பாடுபட்ட கோழி... கோழி இருக்கட்டும். பேச்சை மாத்தாமே நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க.. டில்லியிலிருந்து இங்கே வந்தபிறகு நீங்க உங்க அக்காவை பார்க்கணும்னு கூட  நினைக்கலியா?"
"அதெப்படி நினைக்காமே இருக்கமுடியும்.ஓடிப்போய் அவளைக் கட்டிப்பிடிச்சு  'ஓ'னு  கதறி அழணும் போலிருக்குது."
"அப்படின்னா போய்ப்பார்த்துட்டு வர்ரதுதானே ?"
"நான் இங்கிருந்து திரும்பி வரமாட்டேன்னு அவகிட்டே சொல்லிட்டு வந்திரு க்கிறேன். "
"அப்படின்னா அவங்களை இங்கே வந்து கொஞ்சநாள் இருந்துட்டுப்போக சொல்றதுதானே ?"
"ரெண்டும் நடக்காது "
"ஏனுங்க..நீங்க உங்க பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தவே மாட்டீங்களா ? அதுக்கு ஒரு லிமிட்டே கிடையாதா?"
"இது ஒண்ணுதான் நான் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு "
"உங்க மேலே உயிரையே வச்சிருக்கிற ஒரு ஜீவனை நீங்க பார்க்கப் போகாமே இருப்பதும், அவங்களை இங்கேவரவிடாமே தடுப்பதும் ரொம்பவும் புத்திசாலி த்தனம்னு உங்களுக்கு சொன்ன அதிமேதாவி யாருங்க? நீங்க பண்றது சரின்னு உங்க மனச்சாட்சியைத் தொட்டு சொல்லுங்க பார்க்கலாம். பாசம்னா என்னனு தெரியாத ஜென்மமா இருக்கீங்களே"  என்று கோபமாக சொன்னான் பிரபு.
"அக்காகிட்ட இருக்கிற அளவுகடந்த பாசத்தால்தான்  இப்படியொரு முடிவில்  இருக்கிறேன் "
"நீங்க என்னை ஒரு மென்டல் பேஷண்டா, மென்டலி  டிஸ் ஆர்டர்டு பெர்சனா மாத்திதான் ஊருக்கு அனுப்புவீங்கன்னு நினைக்கிறேன். இன்னொரு டம்ளர் தண்ணீர் கொடுங்க " என்று கோபமாக சொன்னான் பிரபு.

                                                                           ------------------------- தொடரும் --------------------

No comments:

Post a Comment