Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, July 02, 2017

Scanning of inner - heart ( Scan Report Number - 154)

Image result for cartoon of  two old  persons of tamilnadu
      சிந்திச்சு பார்த்து செய்கையை மாத்தணும்.!
"குமாரநாதா " என்ற குரல் கேட்டதுமே வாசலுக்கு விரைந்து வந்தவர், "ஏம்ப்பா ரங்கா  .. உள்ளே வர்றதுதானே!" என்று கேட்டபடியே கதவைத் திறந்தார். 
"வீட்டில் வேலை எதுவும் இல்லாமே சும்மா இருந்தால் கிளம்பி வாயேன். அப்படியே பார்க் வரை வாக்கிங் போயிட்டு வரலாம்"
மனுஷன் ஏதோ பிரச்னையில் இருக்கிறார் என்பதை நொடியில் புரிந்து கொண்ட குமரன், "நம்மளப் போல பென்சன் கேஸுங்க எல்லாருமே இருபத்து நாலுமணி நேரமும் வீட்டில் சும்மா இருக்கிறவங்கதானே. அதைக் குத்திக் காட்டிதானே வீட்டிலுள்ள நண்டு நசுக்கு கூட நம்மை கலாய்க்குதுங்க. வா. எனக்கும் பொழுது போகணுந்தானே. வா. பார்க் பெஞ்சில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு அப்படியே கோயிலுக்கும் போயிட்டு வரலாம். இன்னிக்கு பிரதோஷம் ஆச்சே !"
"நானே ஒரு  தோஷம். எனக்கு  பிரதோஷம் ஒரு கேடா ?"
"என்னப்பா ஆச்சு.   ரொம்பவும் நொந்து  போயிருக்கே போலிருக்கு. வீட்டுக்குள் வராமல் வாசலில் நின்னு நீ குரல்  குடுத்தப்பவே நீ ஏதோ அப்செட் ஆகி இருக்கிறதை புரிஞ்சுக்கிட்டேன். என்ன விஷயம் ?"
"எனக்கு வீட்டில் இருக்கிறது பிடிக்கலே "
"ஏன்?.. வீடு என்ன பண்ணுச்சு. ?"
"எனக்கு வீட்டில் இருக்கிறது பிடிக்கலேனு சொல்றதைவிட நான் வீட்டில் இருக்கிறது மத்தவங்களுக்குப் பிடிக்கலேன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்."
"மருமக ஏதாவது சொன்னாளா ?"
"அவ எதுவும் சொல்லலே. என் பிள்ளைதான் இன்னிக்கு வெளிப்படையாவே சொல்லிட்டான். உங்களுக்கு வேலை வெட்டி இல்லேங்கிறதுக்காக அரசியல் பேசி வீட்டிலுள்ளவங்க நிம்மதியைக் கெடுக்காதீங்க. வேலை வெட்டி எதுவும் இல்லாதவங்ககிட்டே உங்க உதவாக்கரை தத்துவத்தை எல்லாம்  சொல்லுங்க எங்க நிம்மதியைக் கெடுக்காதீங்கனு சொல்லிட்டான்."
"நீ வீட்டில் அரசியல் பேசினியா? உனக்கு அதில் இன்ட்ரெஸ்ட் கிடையாது அது எனக்கு நல்லாவே தெரியும்.  என்னதான் நடந்துச்சு.?"
"நாம ஹை ஸ்கூலில் படிக்கிறப்ப நமக்கு ஹிந்தி பாடம் உண்டுதானே.?"
"ஆமாம்..1967 ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வந்தப்ப அந்த பாட வகுப்பு நின்னு போச்சு."
"நமக்கு ஹிந்தி கிளாஸ் எடுத்த ஜார்ஜ் ஸார், "நான் வாங்கிற சம்பளத்துக்கு விசுவாசமா உங்க முன்னாடி நின்னு ஒரு நாப்பது நிமிஷம் நான் குரைச்சிட்டு போயிடறேன் கேக்கிறதும் கேக்காததும் உங்க இஷ்டம்னு சொல்வார். அதைக் கேட்டு ஒட்டு மொத்த க்ளாஸும் சிரிக்கும். மறக்கவே முடியாத நாட்கள் .."
"அப்போ நமக்கு ஹிந்தி கிளாஸ் இருந்துச்சு. டெஸ்ட் இருந்துச்சு . பாஸோ ஃபெயிலோ அதைப் பத்தி எல்லாம் யாருக்கும் பிரச்னை கிடையாது.அதில் வாங்கிற மார்க்கை அடுத்த நிலைக்குப் போறதுக்கான தகுதியாக அப்போ இருக்கலே. கத்துக்கொடுக்கிறோம்.. படிச்சா படி. வேண்டாட்டா எக்கேடோ கெட்டுப் போ என்ற நிலைமைதான் இருந்துச்சு .."
"இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கே. "ஆராதனா"னு ஒரு ஹிந்திப் படம் தமிழ் நாட்டில் சக்கை போடு போட்டுச்சு. மொழி தெரியாமல் அதை ரசிச்சு பார்த்தவங்க ஏராளம். அந்தப் படத்தை பார்த்தப்ப "ஜார்ஜ் ஸார் ஹிந்தி கத்துக் குடுத்தப்ப ஒழுங்கா கத்து தெரிஞ்சிட்டு இருந்தா இன்னிக்கு இந்தப் படத்தோட வசனத்தை நாம நல்ல ரசிச்சிருக்க முடியும்னு அப்போ நாம புலம்பு வோம்தானே. "
"ஆமாம்டா.. அதெல்லாம் கோல்டன் டேஸ்"
"அப்புறம் நாம வேலையில்  சேர்ந்தப்ப ஆபீஸிலிருந்து நம்மள ஹிந்தி கிளாஸ் அனுப்பினாங்க. ஆபீஸ் செலவிலே .. ஆபீஸ் நேரத்திலே. பாஸ் பண்ணினா ஒரு இன்கிரிமெண்ட் உண்டு.  ஆனா பெயிலான எந்தவொரு பனிஷ்மெண்டும் கிடையாது. ஹிந்தியில்தான் ஆபீஸ் வேலை நடக்கணும்னு நம்மள யாரும் கட்டாயப்படுத்தலே..ஆமா.. இதுக்கும் உன் பிரச்னைக்கும் என்னடா சம்பந்தம்." என்று வியப்புடன் கேட்டார் குமாரநாதன்.
"இன்னிக்கு காலையில் வீட்டில் ஹிந்தி பத்தி ஏதோ பேச்சு வந்துச்சு. அப்போ நான் "வெளிநாட்டு மொழியை காசு குடுத்து கத்துக்கிறாங்க. ஹிந்தி இந்திய மொழியில் ஒண்ணுதானே. ஸ்கூல் நேரத்தில், அதுவும் எந்தவொரு எக்ஸ்ட்ரா செலவும் இல்லாமல் ஒரு மொழியைக் கத்துக்குடுக்கிறப்ப அதை கத்து தெரிஞ்சுக்கிறதை விட்டுட்டு ஏன் சண்டை போடணும். "கத்துக் குடு . கத்துக்கிறோம். ஆனா அதை அடுத்த நிலைக்கான தகுதித் தேர்வாக கட்டாயப் படுத்தக் கூடாது. அதில்தான் எல்லா பேச்சு வார்த்தையும் இருக்கணும்னு கண்டிஷன் போடக்கூடாதுனு எல்லாரும் சேர்ந்து ஒருகண்டிஷன் போட்டுட்டு பைசா செலவில்லாமல் ஒரு மொழியை கத்துக்கிற  படிக்கிற சான்ஸை ஏன் நழுவ விடணும்னு கேட்டேன். நாம படிக்கிற காலத்தில் வீம்புக்காக படிக்காமே இருந்துட்டு பின்னாலே அதை நினைச்சு நான் வருத்தப்பட்டதை எடுத்து சொன்னேன். அது என் பிள்ளைக்கு பிடிக்கலே. வீட்டுக்குள்ளே நான்  அரசியல் பண்றதா வாயில் வந்தபடி பேசிட்டான். இதுக்கு மேலே ஒருத்தர் முகத்தை ஒருத்தர்  பார்க்காமே அங்கே இருக்கிறது எனக்குப் பிடிக்கலே. அதான் ஏதாவது ஒரு ஹோமில் அட்மிஷன் கேட்கலாம்னு இருக்கிறேன். உனக்குத் தெரிஞ்ச நல்ல ஹோம் ஏதாவது இருந்தால் சொல்லேன் !"
"காலம் கலிகாலம். கடனை வாங்கியாவது லீவுநாளில் கூட பிள்ளைகளை 'அந்த கிளாஸ் போ .. இந்த க்ளாஸ் போ'னு படுத்துறங்க. விட்டுத் தள்ளுடா.. நம்ம காலம் முடியப் போகுது. யாரோ எக்கேடோ கெட்டுப் போகட்டும்." என்று வெறுப்புடன் சொன்னார் குமரன்  

No comments:

Post a Comment