"எனக்கொரு டவுட் மச்சி "
"சொல்லித்தொலை "
"என்னவொரு பிரச்னைனாலும் கஷ்டம்னாலும் நம்ம வீட்டு பெரிசுக கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாயிடும்னு சொல்றாங்களே. கொஞ்சநாள்லே சரி பண்ற பிரச்னையை இப்பவே சரி பண்ண முடியாதா ?"
"அடே வாத்து... பிரச்னை ஏதும் சால்வ் ஆகாது. ஆனா அது நமக்கு பழகிப் போயிடும். அதைப்பத்தி கேர் பண்ணாம இருந்திடுவோம். இப்போ உனக்கு ஏன் இந்த டவுட் "
"காலேஜ் போயிட்டு வர வண்டி வேணும். வாங்கித் தாங்கனு வீட்டில் கேட்டேன். ஆஸ்டல்ல தங்கிக்கோனு சொன்னாங்க.. அது எனக்கு சரிப்படாதுனு சொன்னேன். கொஞ்ச நாள் ஆனா சரியாய் போயிடும்னாங்க. அது எப்படினு ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். நீ சொன்னப்பறம்தானே மேட்டர் புரியுது."
No comments:
Post a Comment