Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, July 20, 2017

நாட்டோரே, நல்லோரே உங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள்!

Image result for image of dance around fire
இங்கு பதிவு செய்யப்படுவது எனது வேண்டுகோள்தானே தவிர பாலிடிக்ஸ் அல்ல.
பற்றி எரியும் நெருப்பை தண்ணீர்தான் அணைக்குமே தவிர எண்ணெய் அல்ல.
தண்ணீர் ஊற்றுவதற்குப் பதில் ஒவ்வொருவரும் அவரவர் பங்குக்கு எண்ணெயும் நெய்யும் வார்த்திருக்க வேண்டாம்.
ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருப்பார்கள். அந்த நாலுபேரின் குணாதிசயம், பழக்கவழக்கம் வெளியில் எப்படி இருக்கும் என்று அவர்களை பெற்றவர்களால் கூட சொல்ல முடியாது.
ஆப்டர் ஆல் நாற்பது பேர் உள்ள ஒரு அலுவலகத்தில் கூட யார் யார் என்ன செய்கிறார்கள் என்பதை தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களால் கண்டு பிடிக்க முடியாது.
காரணம் எல்லோருமே நல்லவர்கள் வேடத்தை அணிந்து கொள்வதால்.
ஊரறிந்த நாடறிந்த உலக அளவில் புகழும் பெயரும் கொண்ட ஒருவர் ஒரு விமரிசனத்தை முன் வைக்கும்போது, "என்னதான் கண்காணிப்பு இருந்தாலும் விதிமீறல்கள் சில சமயம் நடந்து விடுகிறது. இப்படி ஒரு தவறை எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. அடுத்த நடவடிக்கை என்ன என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம்"  என்று பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் சொல்லி இருந்தால் பிரச்னை அன்றே முடிந்திருக்கும்.
ஆளாளுக்கு  ஊதி ஊதி பிரச்னை பெரிதானதுதான் மிச்சம்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ன என்பதை முழுநேர அரசியலில் இருப்பவர்களே நினைவில்கொள்ளாமல் ஆளாளுக்கு  அறிக்கை விடுவது காமெடியாக இருக்கிறது.
அரசியல் ஒரு சிலருக்கு தொழில். அவர்கள் முழுக்கவனமும் அதில் இருக்கும். அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஒரு சிலருக்கு அரசியல் ஒரு பொழுது போக்கு. அரசியல் என்றால் என்ன என்பதே தெரியாத அரசியல் பற்றிய ஆர்வம் எதுவும் இல்லாதவர்கள் அநேகர் உண்டு. 
இவர்களுக்கு அரசியல் ஆர்வம்தான் இல்லையே தவிர நாட்டு நடப்பு மீது நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கறை இருக்கும். ஆனால் எதுவும் செய்ய இயலாத வகையில் / நிலையில் இருப்பார்கள். 
நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. 
நாடு என்றால் இந்தியா மட்டுமல்ல; நம்மை விட்டுப் பிரிந்து சென்ற பாகிஸ்தான், உலகிலுள்ள அத்தனை பேரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
சொன்னால் நம்புவதற்கு கடினம்; ஆனால் உண்மை அதுதான். தினமும் காலையில் எழும்போதும் இரவில் படுக்கும் முன்பாகவும், "கடவுளே , உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் சரி; எல்லாருக்கும் நல்ல புத்தியை நல்ல சிந்தனையைக் கொடு. அடுத்தவரைக் கெடுத்து வாழும் புத்தியைக் கொடுக்காதே " என்றுதான் வேண்டிக் கொள்வேன்.  
Now I remark a branch story here.
சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் முன்னோரின்  மூச்சு காற்று எங்கள் சுவாசத்தில் கலந்துள்ளது. 
(எங்கள் அம்மா வழியில் அவர் பிறந்து வளர்ந்த குடும்பம் எங்களுக்கு உறவுமுறை என்பது மட்டும் தெரியும். அம்மாவிடம் கேட்டால், எங்கள் அப்பாவும்  அந்த ஆச்சி வீட்டு தாத்தாவும் பங்காளிகள் என்று பதில் சொல்வாள்.  
சிரிக்காதீங்க. எனக்கு உறவுமுறைபற்றி அதிகம் தெரியாது. 'ஒண்ணு விட்ட / உடன்பிறந்த' என்று ஒருசிலர் உறவுமுறை சொல்லும்போதே. 'போதும் .  புரிஞ்சுக்கிட்டேன் ' என்று சொல்லிவிடுவேன்.
என்னுடைய மாமா அத்தை சித்தி சித்தப்பா வழி உறவுகளைக்கூட எங்கள் வீட்டுகுழந்தைகளுக்கு சரியாக தெரியாது. அந்த அளவுக்கு உலக அறிவில் வளர்ந்து உறவு அறிமுகங்களில் சுருங்கி வளர்க்கப்பட்டு விட்டார்கள். 
We shall continue the main topic now.
கல்வி / அரசியல் போன்ற பொது விஷயங்கள் ஒரு நீரோடை மாதிரிதானே.
விருப்பமுள்ளவர்கள் கைகளால் அள்ளிப் பருகலாம். அதில் நீராடலாம். நான்தான் குடிக்கணும். நீ குடிக்கக்கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாதுதானே. குதர்க்க புத்தி உள்ளவர்கள் பாழ் படுத்தலாம். அது அவர்கள் வாழ்வுரிமை. அவர்களை தண்டித்தால் அவர்களுக்கு வக்காலத்து வாங்கவும் சிலர் வருவார்கள். 
ஒருவருடைய உண்மையான தரம் என்னவென்று தெரிய வேண்டு மென்றால் அவன் மற்றவர்களோடு  தகராறு / தர்க்கம் செய்யும் நேரத்தில் கூர்ந்து கவனியுங்கள் என்பது பெரியவர்களின் வாக்கு.
ஊரறிந்த உலகறிந்த ஒரு நபரை 'இவரெல்லாம் ஒரு ஆளா ?" என்று சிலர் கேட்கிறார்கள். 
அரசியல் என்ற போர்வை இவர்களிடம் இல்லாவிட்டால் இவர்கள் யார் என்பது தமிழ்நாட்டினருக்கே தெரியாதே.
இந்த வேலை இவர்க்கு என்று எந்த முத்திரையும் கிடையாதே. அப்படியிருக்க  இவன் அதை செய்தானா இதை செய்தானா என்ற வீண் தர்க்கம் எதற்கு.
அப்பாடா காந்திஜி உயிரோடு இல்லை. இருந்திருந்தால் தென்னாப்பிரிக்காவுக்கு படிக்கப்போன நீ அதை விட்டு விட்டு இங்கே ஏன் வந்தே  என்று யாராவது கேட்டிருந்தால்கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை.
படிக்கப்போன அவர் இந்தியர் நிலை கண்டு அதை விட்டுவிட்டு இந்தியா திரும்பினார்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சூழ்நிலையில் ஒவ்வொரு வயதில் ஏதாவது ஒன்றின் மீது ஈர்ப்பு ஏற்படும்.  அது நீ பிறந்த அன்றைக்கு ஏன் வரலே என்று நாம் கேட்டால் - அதை பார்ப்பவர்கள் / கேட்பவர்கள் யாரை தரக்குறைவாக எடை போடுவார்கள் ? சிந்தித்து பார்ப்போம்.
ஒரு சினிமாக்காரன் ஒரு இடத்துக்கு வந்திருக்கிறானென்றால் யாரும் அழைக்காமல் அந்த இடத்தில் கூட்டம் சேரும். 
அரசியல் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு கூட்டம் சேர்ப்பதற்காக சினிமாக்காரர்களை காசு கொடுத்து அழைத்து வரும் நிலையில் ஒரு சிலர் இருப்பதை மறக்கக்கூடாதுதானே.
சினிமா மூலம் கிடைக்கும் வருமானம் என்ன ? அதை நம்பி சினிமா தொழிலுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத லட்சக்கணக்கான குடும்பங்கள் பிழைக்கின்றன என்பதையெல்லாம் கணக்கு போட்டு பார்க்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசி ஒருவரை ஒருவர் ஏன் தாக்கிக் கொள்ளவேண்டும். 
எத்தனையோ குற்றசாட்டுகள் இருந்தாலும் பெருவாரியான நாட்டு மக்களின் வாக்குகள், மீண்டும் உங்களுக்கு ஒரு வாய்ப்பை மக்கள் பணி செய்வதற்காக கொடுத்திருக்கும்போது, அதை கவனியாமல் ஒருவர் மீது ஒருவர் சேற்றை அள்ளி  வீசுவதில் ஏன் காலத்தை விரயம் செய்ய வேண்டும் ?
சிறு வயதில் நான் படித்த ஒரு கதை : ஒரு அரசன் தன்னைப் பற்றி குறை சொல்லுபவர்கள் வாக்கை வேத வாக்காக எடுத்துக் கொள்வானாம். அதை கண்ட மந்திரிகள் அரசனுக்கு புத்தி சொல்லும் போதெல்லாம், "என்னைவிட என் நாட்டு மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் அவர்கள். அதனால் நான் கவனியாமல் விட்ட வேலைகளை எனக்கு நினைவு படுத்துகிறார்கள். நானாக எதையும் தவறாக செய்யவில்லை. என்னுடைய  கவனக்குறைவால் சில தவறுகள் நடக்கின்றன. அதை சுட்டி க்காட்டும் அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்"என்பானாம்.
இரண்டுநாட்களுக்கு முன் ஊழல்களை பட்டியலிடுங்கள் ஒருவர் சொல்ல , இன்றைய தொலைகாட்சி செய்தியில் இரண்டு அமைச்சர்களின் பெயரை சொல்லி அவர்கள் மீது என்ன நடவடிக்கை  என்று  பொதுமக்கள் கேட்கிறார்கள்.
ஒன்றை மட்டும் உறுதியாக சொல்வேன். அரசு அலுவலகங்களில் ஊழல் லஞ்சம் உள்ளது என்ற கருத்தும் நடைமுறையும் பரவலாக உள்ளது. ஆனால்  அதற்கு அரசு ஊழியர்கள் மட்டும் காரணம் அல்ல. ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு கட்சியினர் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.  (நான் முப்பத்து இரண்டு  வருடம் அரசுப்பணியில் (மத்திய அரசு) இருந்தபின் 2013ல் ரிட்டையர் ஆனேன்.  யாரிடமும் கைநீட்டி ஒரு காசு கூட வாங்கியது கிடையாது. என்னைப் போன்ற பலர் இன்னும் இருக்கிறார்கள். )
இனிமேலாவது ஆக்கபூர்வமான வேலைகளில் நமது முழுக்கவனத்தை செலுத்துவோம்.


No comments:

Post a Comment