Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, July 17, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (28)

Image result for cartoon of two old persons of tamilnadu
"என்னப்பா .. பார்த்தும் பார்க்காதது போலே போறே ?"
"இப்பல்லாம் யாரையும் பார்க்கவோ பேசவோ பயமா இருக்குது ?"
"ஏன்ப்பா .. இவ்வளவு விரக்தி.?"
"சாதாரணமா சொல்ற வார்த்தைகள்கூட சண்டையில் முடியுமோன்னு பயமா இருக்குது ?"
"புரியும்படி சொல்லு. பொடி வேண்டாம்."
"வயதான யாராவது ஒருத்தர் இளமையா சுறுசுறுப்பா இருந்தா நமக்கு ஏற்படுற சந்தோஷத்தில் அவங்க மனசு குளிருறாப்லே 'அப்படி இருக்கீங்க..', 'இப்படி இருக்கீங்க..'னு வாய் விட்டே சொல்லுவோம். அவங்களுக்கு இன்னும் ரெண்டு வயசு கொறஞ்ச மாதிரி அவங்களும் அதைக்கேட்டு சந்தோச ப்படுவாங்க. இது காலங் காலமா இருக்கிற விஷயம். அந்தமாதிரி பேச்சு பாலியல் ரீதியான பேச்சாம். எனக்கு தலையை பிச்சுக்கலாம் போலிருக்கு . லஞ்சம் பெருகி போச்சுன்னு ஒருத்தர் சொல்ல மத்தவங்க இல்லேனு சொல்லி சண்டை போடறாங்க. ஹவுசிங் போர்டில் என் சேல் டீட்டை வாங்க, நாலு வருஷம் அலைஞ்சு பார்த்துட்டு, போன வருஷம் 35000 ரூபா மொய் எழுதினேன். உடனே சேல் டீட் கிடைச்சுது. ஜாதி சான்று வாங்கவும் மொய் .. பிறப்பு இறப்பு சான்று வாங்கவும் மொய் எழுத வேண்டி இருக்குது. செத்தவனுக்கு போடற வாய்க்கரிசியைவிட இவங்களுக்கு போடற அரிசிதான் அதிகமா இருக்குது. இதை எங்கே சொல்லி முட்டிக்கிறது.?"
"இதுக்கு ஏன் நீ முட்டிக்கணும். கடந்த ரெண்டு வருஷத்தில் யார் யார் எந்தெந்த வேலைக்கு எந்தெந்த ஆட்களுக்கு எவ்வளவு மொய் எழுதினீங்க என்கிறதை இந்த அட்ரஸ்க்கு எழுதுங்கனு ஒரு அறிக்கை விட சொல்லுவோம். அதை யாராவது ஒரு பொது குழுவை வச்சு பரிசீலிக்க சொல்லுவோம். அந்த முடிவு வெளியானதும் அவனவன் முட்டிகிட்டும். அதை விட்டுட்டு நீ ஏன் முட்டிக்கணும். ஆமா ... நீ எங்கே போறே ?"
" ஒரு சர்டிபிகேட் வாங்கத்தான்."
"கையில் பணம் இருக்குதானே? வேலையை முடிச்சிட்டு வா. நிதானமா உட்கார்ந்து பேசலாம்."

No comments:

Post a Comment