"இதோ பாரு ரத்னம், நானும் உனக்கு எத்தனையோ முறை சொல்லிட்டேன். உன் பிரச்னையை எப்பவும் வெளியே சொல்லிட்டு திரியாதேனு. கேட்க மாட்டேங்கிறே. யாருக்கு இல்லை பிரச்னை. பணம் இல்லாதவனுக்கு அது இல்லையேனு கவலை. இருக்கிறவனுக்கு அதைக் காப்பாத்தணுமேங்கிற கவலை. பிள்ளை இல்லாதவனுக்கு வாரிசு வேணுமேனு பிரார்த்தனை. இருக்கிறவனுக்கு இப்படி ஒண்ணை பெத்து தொலைச்சிட்டோமே. ஈஸ்வரா . இதை எப்படி கறை சேர்க்கிறதுங்கிற தீராத தலைவலி. நம்ம மனபாரத்தைக் குறைக்க நம்ம கவலையை மத்தவங்ககிட்டே சொல்லி புலம்பறோம். அதில் நூத்தில் ஒருத்தனுக்குத்தான் அதைக்கேட்கிறதிலேயும் நம்ம பிரச்னை சால்வ் ஆகணுமேங்கிறதிலேயும் ஒரு ஃபீலிங் இருக்கும். நம்ம பிரச்னையாலே தனக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்குமான்னு கணக்கு போடுறவன் ஒன்பது பேர். இவங்க ரொம்பவும் டேஞ்சரெஸ் ஃபெல்லோஸ். இவங்க எல்லாரும் கலங்கின குட்டையில் மீன் பிடிக்கிற ரகம். எரிகிற வீட்டில் பிடிங்கினமட்டும் லாபம்னு நினைக்கிற ரகம். மீதி உள்ள தொண்ணூறு பேர் நம்ம கஷ்டத்தைக் கண்டு மனசுக்குள் ஆனந்தக் கூத்தாடுகிற வக்கிர புத்தி ஜென்மங்கள். அடுத்தவங்க கஷ்டப்பட்டால் இவங்களுக்குப் பரமானந்தம்.. பேரானந்தம் .. ஆனா டைம் பாஸ் பண்ண நாம சொல்றதை ரொம்பவும் சின்சியரா கேட்பாங்க. புரிஞ்சுக்கோ "
"புரிஞ்சுக்கிட்டேன் சத்யா.. மத்தவங்களுக்கு காசு பணம் கொடுத்து உதவுற நிலையில் நானில்லை. மற்றவர்களை சந்தோஷப்படுத்த என்னாலே எதுவும் செய்யமுடியாது. ஆனா என் கஷ்டத்தைக்கேட்டு தொண்ணூறு பேர் சந்தோசப் படுவாங்கன்னா நயாபைசா செலவில்லாமல் அவங்களை எப்பவும் சந்தோசப் படுத்த நான் தயார். சரி.. நான் கிளம்பட்டுமா !"
"சரி. நம்ம ஏரியாவில் நல்ல ஒரு இரும்புத்தூண் எங்கேயாவது இருந்தால் சொல்லேன்."
"எதுக்கு ?"
"எனக்கு இதுவும் வேணும் .. இன்னமும் வேணும்னு சொல்லி அதில் நச்சு நச்சுன்னு முட்டிக்குவேன் " என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டான் சத்யா.
No comments:
Post a Comment