Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, June 18, 2017

Scanning of inner - heart ( Scan Report Number - 153)

     Image result for image of  meeting in cartoon               

                   பாதையை மாற்றிய பாடங்கள் ?!

"மிஸ்டர் செந்தில் .. வேறு ஏதாவது கேட்கணுமா ?" என்று நிருபரின் காதோடு மெல்லிய குரலில் கேட்டார் செக்ரெட்டரி.
"யெஸ் ஸார். இங்கு இருக்கிற நிறைய பேர் அவங்க இந்த ஹோமுக்கு வந்ததுக்கு அவங்க பிள்ளைங்கதான் காரணம்னு சொன்னாங்க. சிலர் அதுபத்தி பேசவே விரும்பலேனு சொன்னாங்க. ரெண்டு லேடீஸ் மட்டும் இந்த ஹோமுக்கு நாங்க வர காரணம் நாங்கதான்.. குழந்தைங்க விஷயத்தில் எங்களோட அணுகுமுறை, எங்க நடவடிக்கைதான் காரணம்னு சொன்னாங்க. மேற்கொண்டு அவங்க பிரச்னை பத்தி பேசுவாங்கனு எதிர்பார்த்தேன். ஆனா அவங்க வேறு எதுவும் சொல்லலே."
"ஆமாம்.. வத்சலா மாமி, ராதிகா மேடம் .. அவங்க ரெண்டு பேருந்தான் அப்படி சொன்னாங்க  ரெண்டுபேரும் இங்கு வந்தப்பறம் குட் பிரெண்ட்ஸ் "
"இந்த ஹோமில் பேட்டி .. குரூப் டிஸ்கஷனுக்கு உங்க கிட்டே பெர்மிஷன் கேக்கும்போதே "வற்புறுத்தி யாரையும் எதுவும் கேட்கக்கூடாது. அவங்க சொல்ல பிரியப்பட்டா சொல்லட்டும். நீங்க ஃ போர்ஸ் பண்ணிக் கேட்கக் கூடாதுனு எங்கிட்டே  சொல்லி இருந்ததாலே நான் அவங்க கிட்டே விவரம் கேக்கலே. அவங்க எந்த வகையில் காரணம்னு தெரிஞ்சுக்கணும். அவங்க கிட்டே தனியா பேச பெர்மிஷன் தரணும் " என்றான் செந்தில்.
"ஓகே..நோ ப்ராப்ளம் "  என்ற செக்ரெட்டரி எழும்பி நின்று  "உங்க எல்லாரோட கோஆப்ரேஷனுக்கு ரொம்ப நன்றி. நீங்க உங்க ரூமுக்குப் போகலாம்.  அப்புறம் வத்சலா மாமி, ராதிகா மேடம் .. நீங்க ரெண்டு பேரும் இங்கே இருங்க .. ஸார் உங்ககிட்டே பேசணுமாம்" என்றவர் அங்கிருந்து மற்றவர்களோடு சேர்ந்து வெளியேறினார்.
வத்சலா ராதிகா அருகில் வந்து உட்கார்ந்த செந்தில் "இந்த ஹோமுக்கு நீங்க வந்துசேர நீங்கள் எந்தவிதத்தில் காரணம்ங்கிறதை தெரிஞ்சுக்காட்டா என் தலை வெடிச்சிடும் " என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.
"அது ஒண்ணும் ராணுவ ரகசியம் இல்லே " என்ற அலட்சியமான பதில் வந்தது வத்சலாவிடமிருந்து.
"அப்படின்னா சொல்லலாமே .."
செந்தில் அப்படி சொன்னதுமே கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் "என்னோட பேரண்ட்ஸ், என்னோட தாத்தா பாட்டி எல்லாருமே என்னோட சின்ன வயசிலே  "வேண்டாம்னு எந்தவொரு  பொருளையும் தூக்கி எறியக்கூடாது. எல்லாமே எதோ ஒரு சமயத்தில் உதவும்னு சொல்லுவாங்க. மனுஷங்க ளையாகட்டும் .. ஒரு பொருளையாகட்டும் தூக்கி எறியறதுக்கு முன்னாலே ஒண்ணுக்கு நாலுமுறை நல்லா யோசனை பண்ணிப்பார்க்கணும்னு சொல்லுவாங்க.   எதையும் பாதுகாக்க சொல்லித் தந்தாங்க.. எங்க வீடுன்னு இல்லே. நிறைய வீடுகள்லே அதான் வழக்கம். கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிற பாட்டிலைக் கூட எங்க அம்மா நல்லா கழுவி சுத்தம் பண்ணி வெயிலில் காய வச்சு பத்திரமா எடுத்து வைப்பாங்க. நாங்க கிண்டல் பண்ணுவோம். வாசலில் வர்ற வியாபாரிங்க.. இல்லாட்டா வழியோடு போறவங்க வர்றவங்க .. பிச்சைக்காரங்க.. இப்படி யார் வந்து "குடிக்காத தண்ணி "னு கேட்டால் போதும். பத்திரப்படுத்தி வச்சிருக்கிற பாட்டிலை எடுத்து அது நிறைய தண்ணீர் ஊத்தி அவங்க கையில் கொடுத்து அனுப்புவாங்க. பழைய துணிகளை துவைச்சு இஸ்திரி போட்டு சுத்தம் பண்ணி வச்சிருப்பாங்க. எந்த வீட்டிலாவது குழந்தை  பிறந்திருக்குனு தெரிஞ்சா போதும். இந்த துணிகளைக் கொண்டு போய் கொடுப்பாங்க. பிறந்த குழந்தை அடிக்கடி யூரின் பாஸ் பண்ணும். தொட்டிலுக்குக் கீழே துணியைப் போட்டு வச்சா ஈரத்தை துணி வாங்கிக்கும்.. அதை அப்படியே  தூக்கி எறியலாம்னு சொல்வாங்க.  இப்படி ஒவ்வொண்ணும் .. ஐ மீன் .. ஒவ்வொரு பொருளும் மறுபிறவி எடுக்கும். இதை பைத்தியக்காரத் தனம்னு நாங்க கேலி பண்ணுவோம். எங்க குழந்தைகளுக்கு யூஸ் அண்ட் த்ரோ  என்று சொல்லி சொல்லியே வளர்த்தோம். இப்போ தேவை இல்லாட்டா உடனே தூக்கி எறி .. வீட்டுக்குள் குப்பையை சேர்க்காதே. அந்த பொருள் திரும்ப தேவையா இருக்கிறப்ப வாங்கிக்கலாம்னு ப்ரைன் வாஷ் பண்ணியே வளர்த்தோம். நாங்க சொல்லிக்கொடுத்த  பாடத்தை எங்க குழந்தைங்க எங்க கிட்டேயே திருப்பிட்டாங்க. குழந்தைங்க கையில் நாங்க குடுத்த அம்பு எங்களை குறிபார்த்துட்டுது. எங்களுக்கு வயசாகிடுச்சு .. எங்களால் ஒண்ணும் செய்யமுடியாதுனு நாங்க சொன்னதுமே, "எனக்கிருக்கிற டென்சனில் என்னாலே எக்ஸ்ட்ரா கேர் எடுத்து உங்களை பார்க்க முடியாது. உங்களை ஒரு நல்ல ஹோமில் சேர்க்கிறேன்னு என் புள்ளைங்க ரெண்டு பேருமே சொன்னாங்க.. உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம்.. நாங்களே ஹோம் தேடிக்கிறோம்னு சொல்லி கிளம்பி வந்துட்டோம். நாங்க சொல்லிக்கொடுத்த "யூஸ் ஆகாட்டா தூக்கி எறி ஸ்லோகத்தை எங்களை வச்சு பாதுகாக்கிற விஷயத்திலேயும் குழந்தைங்க ஃ பாலோ  பண்ணிட்டாங்க.." என்று சொல்லி நிறுத்தினாள் வத்சலா. 
குறைபட்டுப் பேசும்போதுகூட அவள் குரலில் வருத்தமோ தடங்கலோ இல்லாததை நினைத்து ஆச்சரியப்பட்ட செந்தில் , "ராதிகா மேடம்.. உங்க அனுபவம்." என்று அடி எடுத்துக் கொடுத்தான்.
"நான் ஒரு ரிட யர்ட் டீச்சர்..ஸ்கூல் மாதிரியே வீட்டையும் வச்சிருந்தேன். என் ஹஸ்பேண்டும் ஸ்கூல் டீச்சர்தான்.. இறந்துபோய் மூணு வருஷம் ஆகுது. எங்க வீட்டில் ஆர்மி ரூல்ஸ்தான். என் குழந்தைங்க படிச்சு முடிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்ச பிறகும்கூட என் கண்ணுக்கு அவங்க எல் கே ஜி பசங்க மாதிரிதான் தெரிஞ்சாங்க.. நான் சொல்றதை .. நான்னு மட்டும் இல்லே. வீட்டில் இருக்கிற பெரியவங்க என்ன சொன்னாலும் ஆர்க்கியூ  பண்ணாமே வாயை மூடிக்கிட்டு அவங்க சொல்றதைக் கேக்கணும் .உன் விளக்கம் எதுவும் தேவை இல்லைங்கிறதை சொல்லி சொல்லியே வளர்த்தோம். அவன் படிச்சவன். அவனுக்கும் ஒரு ஒபினியன்  இருக்கும். அதைக் காது கொடுத்து கேப்போம்னு நாங்க நினைச்சுகூடப் பார்க்கலே. அவங்களை நாங்க சுயமா எந்தவொரு முடிவையும் எந்த விஷயத்திலும் எடுக்க விடலே. யாரையும் எதுக்காகவும்  எதிர்த்துப்பேசாத வீட்டுக்கு அடங்கின பிள்ளைன்னு மத்தவங்க பாராட்டி பேசினப்போ பெருமையா இருந்துச்சு..கல்யாணம் ஆனதும் எங்க சம்பந்தி வீட்டினர் அவங்க வீட்டோடு வந்து இருக்க சொன்னப்ப சரினு சொல்லி தலையை ஆட்டிட்டு  என்னோட பெரிய பையன் கிளம்பிட்டான். ரெண்டாவது பையன் விஷயத்தில் நான் தலையிடவே இல்லை. உனக்கு எப்படி தோணுதோ எங்கே இருக்க தோணுதோ அங்கே போய் இரு. நான் ஹோம்க்கு போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் " என்றாள் ராதிகா டீச்சர்.
அவர்கள் இருவரும் பேசியதைக் கேட்ட செந்தில் " நம்மோட ஒரு சில செயல், சொல்லுக்கு இப்படியெல்லாம் பின்னாளில் ஒரு ரீயாக்க்ஷன் இருக்குமா!?" என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். அதே சமயம் "வச்ச செடி முள்ளானால் வளர்த்த கடா முட்ட வந்தால் போன ஜென்ம பாவம்டி அம்மாளு" என்ற பழைய சினிமா பாடல் வரிகள் நினைவுக்கு வர, அதை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தான்.
ஒரு ஊசி கீழே விழுந்தால் அந்த சத்தம் கூட தெளிவாகக் கேட்கும் என்கிற அளவுக்கு  அங்கே  அமைதி சூழ்ந்திருந்தது. அதைக் கலைக்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை. "வருகிறேன்" என்பதுபோல செந்தில் தலையசைக்க, "சரி" என்கிறமாதிரி இருவரும் தலையசைத்தார்கள் .    

No comments:

Post a Comment