"இப்போ கார் என்னத்துக்குடா ? அதான் உங்க கம்பெனியிலே அரேஞ்ச் பண்ணித் தந்திருக்காங்களே. காருக்குப் போடற பணத்தை ஏதாவது நிலத்தில் போடுடா"
"அம்மா, ஐ.டி கம்பெனி ஜாப் அந்தரத்தில் கயிறு கட்டி ஆடற ஊஞ்சல் மாதிரிதான். அப்படியே நிரந்தரமா ஆட முடியுமா இல்லாட்டா எப்போ வேணும்னா கீழே விழுமானு யாராலயும் கணிச்சு சொல்ல முடியாது. எப்போ வெளியே போக சொல்வாங்கனு யாருக்கும் தெரியாது. இன்னிக்கு கையிலே கிடைக்கிறது பலாப்பழமா இருக்கும். நாளைக்கு இலந்தைப் பழத்துக்குக் கூட வழியில்லாமல் தெருவில் நிக்கிற நிலை வரலாம். கையிலே காசு இருக்கிறப்ப ஒரு காரை வாங்கி வச்சுட்டா நாளைக்கு வேலை போனால்கூட கால்டாக்சி ஓட்டி பிழைச்சுப்பேனே. அட்லீஸ்ட் அக்கம்பக்கத்து வீட்டு குழந்தைங்களை ஸ்கூலில் கொண்டுபோய் விடற வேலையைப் பார்த்தால் அது நமக்கு ஒரு இன்கம் தானே!" என்று ரொம்பவும் காஷுவலாக சொல்லிவிட்டு கிளம்பினான் மகன்.
அவன் சொன்ன வார்த்தைகள் தாயின் மனசுக்குள் ஒரு பாரத்தை ஏற்றி வைத்தாலும். எந்த சூழ்நிலையிலும் உழைச்சு வாழுகிற மனநிலை அவனுக்குள் இருப்பதை நினைத்து பெருமிதமும் கூடியது.
No comments:
Post a Comment