"என்ன சிந்தனை?" என்று கேட்ட நண்பரிடம், "அநேக குடும்பங்கள்.. வீடுகளில்.. அதாவது நூத்துக்கு தொண்ணுத்திஒன்பது வீடுகளில் வசதி இருக்கு. ஆனா சந்தோசம் .. நிம்மதி இல்லையே. அது ஏன்னு யோசிச்சிட்டு இருந்தேன்" என்றார் மற்றவர்.
"அதை யாரும் எதிர்பார்க்கலே .. வேணும்னு நினைக்கலே. வேணும்னு நினைச்சிருந்தா அதைக்கொண்டுவர முயற்சிபண்ணி இருப்பாங்கதானே ?" என்ற பதில் விரக்தியான குரலில் வந்தது மற்றவரிடமிருந்து.
"என்ன சொல்றே ?"
"எல்லாருமே வீட்டுக்குக் காட்டற அக்கறையை குடும்பத்தில் காட்டற தில்லே."
"ரெண்டும் ஒண்ணுதானே ?"
"அப்படியா ? உனக்கு பத்திரிகை ரிப்போர்ட்டர் வேலை பார்த்த அனுபவம் உண்டுதானே..இப்ப இந்த பார்க்கில் நிறையபேர் நடைப்பயிற்சி பண்ணி ட்டு இருக்காங்க.. ஒவ்வொருத்தர் கிட்டேயும் "என்ன இருந்தால் உங்க வீடு.. குடும்பம் சந்தோஷமா இருக்கும்னு அவங்ககிட்டே கேட்டுப்பார்.. நானும் உன்னுடனே யே வர்றேன்."
நண்பர்கள் இருவரும் அங்கிருந்தவர்களை கேள்வி கேட்டார்கள்.
அவர்களுக்கு கிடைத்த மெஜாரிட்டி பதில் : சொந்தமா வீடு இருக்கணும். கார் இருக்கணும்..வெளிநாட்டில் வேலைகிடைக்கணுங்கிற ரீதியில்தான் இருந்தது.
இருவரும் பழைய இடத்துக்கே வந்து உட்கார்ந்தார்கள்.
"இங்குள்ள எல்லாரையும் கேள்வி கேட்டோம். ஒருத்தராவது "என் பிள்ளைங்க நல்ல சிட்டிசன் ஆக வரணும். எங்க அம்மா அப்பா நல்லா இருக்கணும். நோய்நொடி இல்லாமே இருக்கணும் .. ஒளிவு மறைவு இல்லாமல் எதையும் பேசித்தீர்க்கும் பக்குவம் எங்க வீட்டினருக்கு இருக்கணும்னு சொன்னார்களா ? இல்லையே...வீட்டுக்குத் தேவையான பொருட்கள் .. வசதி வாய்ப்புகளில் காட்டற அக்கறையை யாரும் வீட்டு மனிதர்களிடம் குடும்பத்தினரிடம் காட்டறதில்லே. இன்னும் சொல்லப் போனால் அதைப்பத்தி நினைச்சு கூட பார்க்கிறதில்லே. பிறகு சந்தோசம் நிம்மதி எங்கிருந்து வரும் ? காரையும் வீட்டையும் கட்டிப்பிடிச்சுக்கிட்டு அழட்டும். நிறைய பேர் அவங்க வீட்டை அவங்க தங்குகிற இடமா மட்டுந்தான் பார்க்கிறாங்க. உறவுகள் சேர்ந்து வாழுகிற இடமா நினைச்சு பார்க்கலே ! " என்றார் விரக்தியுடன்.
No comments:
Post a Comment