வீட்டில் எல்லோரும் டீவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சுவாரஸ்யமான வில்லங்கத்தனமான காட்சி ஒன்று திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. நல்லவள் வேடத்தில் அந்த வீட்டுக்குள் நுழைந்து விட்ட வில்லியின் சுயரூபம் தெரியாமல் அவளை நம்புகிறார்கள். அவளோ கூட இருந்தே எல்லாருக்கும் குழி பறித்துக்கொண்டு இருக்கிறாள்.
(டீவியைப் பார்த்தபடியே)
மருமகள்: சரியான லூசு இதுங்க. அவ எப்படி பட்ட ஆளுங்றது கூட தெரியாமே எல்லாத்தையும் அவகிட்டே உளறிக்கொட்டிட்டு மாட்டிட்டு லோல் படுதுங்க .
மகள்: அந்த அளவுக்கு அவ நல்லவ மாதிரி ஆக்ட் குடுத்து எல்லாரையும் நம்ப வைக்கிறா.
பாட்டி: இவதான் வேண்டாத வேலை அம்புட்டையும் செய்தானு இங்கே.. டீவிக்கு வெளியிலே இருக்கிற நமக்கே தெரியுதே. அவங்க எல்லாரும் டீவிக்கு உள்ளே ஒரே இடத்திலதானே சேர்ந்து இருக்காங்கம்மா. அப்படி யிருக்கச்ச நம்மளுக்கே தெரிஞ்ச ஒண்ணு அவங்களுக்கெல்லாம் எப்படிம்மா தெரியாமே போச்சு.
No comments:
Post a Comment