Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, May 30, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (18)

Image result for image of a boy
"தம்பி ..உங்க அப்பா இருக்கிறாரா ?"
"இல்லே .. பேசப் போயிட்டார் "
"அப்படியா ..எங்கே ? எப்போ ? எதைப்பத்தி ? எனக்கு தெரியாமே போச்சே. தெரிஞ்சா போயிருப்பேனே ?"
"இங்கே இல்லே.. வேறே ஊரில் .. மனித நேயம் ... மனுஷனை மனுஷன் மதிக்கணும்னு பேசப் போயிருக்கிறார்.."
"ஓ .. அப்படியா?"
"அங்கிள், உங்களுக்கு என்ன வேணும்."
"கோவில் டொனேஷன் விஷயமா வந்தோம். அப்புறம் வர்றோம்."
வீட்டுக்குள்ளிருந்து ...."கண்ணா யாரோட பேசிட்டு இருக்கிறே. அம்மா குளிச்சிட்டு இருக்கிறேன். அப்பா வீட்டில் இல்லைனு சொல்லு. வந்தது யார்னு கேட்டு வை."
"கேட்க வேண்டாம்மா.. அப்பா அடிக்கடி சொல்வாரே - பக்கத்து வீட்டு பரதேசி,, எதிர்வீட்டு கடன்காரன்னு .. அவங்க ரெண்டு பேருந்தான் வந்திருக்காங்க" என்று சிறிதும் தயங்காமல் பதில் சொன்னான் பையன்.

No comments:

Post a Comment