Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, May 27, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (16)

Image result for image of teaching indian father to his son
"மிருகங்கள் குட்டி போடும். பறவைகள் முட்டையிடும். பறவைகள் அனைத்துமே  கூடு அல்லது கூண்டில்தான் இரவு நேரங்களில் முடங்கிக் கொள்ளும்" என்று விவரித்த தந்தையிடம் "அது என்ன கூடு ? கூண்டு ? ரெண்டும் ஒன்றுதானே ? என்று சந்தேகம் கேட்ட மகனுக்கு, "பறவைகள் தாங்களாக அமைத்துக்கொள்வது கூடு. மனுஷங்களாகிய நாம் அமைத்துத் தருவது கூண்டு. முட்டை போடும் அனைத்துமே கூடு  அல்லது கூண்டில்தான் ஓய்வெடுக்கும், தூங்கும்" என்று விளக்கிய அப்பா, மகனின் ஆழ்ந்த சிந்தனையைக் கண்டு, "என்னடா யோசனை? என்ன சந்தேகம்?" என்று கேட்க "எங்க க்ளாஸ் மிஸ் இப்போ வீட்டில் இருப்பாங்களா இல்லாட்டா கூட்டில் இருப்பாங்களா?" என்று கேள்வி கேட்டான் மகன்.

No comments:

Post a Comment