புதிர் எண் - 22 ன் விடை - கிளிக்கு சொல்லத் தெரிந்த ஒரே ஒரு வார்த்தை " நான்கு ". அதற்க்கு தகுந்த மாதிரி கேள்விகளை அமைத்திருந்தான் அந்த ஏமாற்றுப் பேர்வழி. இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள்.
புதிர் எண் - 23
தாத்தா பாட்டி அம்மா அப்பாவுடன் அவர்களது குலதெய்வம் இருக்கும் கிராமத்துக்குப் பயணித்துக் கொண்டிருந்தான் சத்யா. வழியில் ஒரு இடத்தில் அதிக கும்பல் நின்று கொண்டிருக்க, கார் போக வழியின்றி அவர்கள் பயணம் தடைப்பட்டது. "என்னவென்று பார்த்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லி காரை விட்டு இறங்கி சென்றார் தாத்தா.
"தாத்தா திரும்பி வந்து கும்பல் ஏன் கூடுச்சுனு சொல்ல மாட்டார். ஒரு புதிர்தான் போடுவார்" என்றான் சத்யா.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த தாத்தா " எல்லாம் பாயாசத்தில் போடற வாசனை பொருளில் ஒன்றுதான். ஆடுமாடு ... " என்று பாட்டியிடம் சொல்ல, "அப்படின்னா அது இப்போ முடியாது. கார் போக வழி கிடைக்காது . நாம வேறே வழியில் போகலாம்" என்று பாட்டியும் அப்பாவும் ஒரே சமயத்தில் சொல்ல, " என்னது ? பாயாசத்தில் ஆடு மாடா ? " என்று அதிர்ந்து போய்க் கேட்டார்கள் சத்யாவும் அவனது அம்மாவும். விஷயத்தை தாத்தா அவர்களுக்கு விளக்கியதும் " ச்சே .. இதுதானா ! " என்று அசடு வழிந்தார்கள்.
தாத்தா பாட்டி அம்மா அப்பாவுடன் அவர்களது குலதெய்வம் இருக்கும் கிராமத்துக்குப் பயணித்துக் கொண்டிருந்தான் சத்யா. வழியில் ஒரு இடத்தில் அதிக கும்பல் நின்று கொண்டிருக்க, கார் போக வழியின்றி அவர்கள் பயணம் தடைப்பட்டது. "என்னவென்று பார்த்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லி காரை விட்டு இறங்கி சென்றார் தாத்தா.
"தாத்தா திரும்பி வந்து கும்பல் ஏன் கூடுச்சுனு சொல்ல மாட்டார். ஒரு புதிர்தான் போடுவார்" என்றான் சத்யா.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த தாத்தா " எல்லாம் பாயாசத்தில் போடற வாசனை பொருளில் ஒன்றுதான். ஆடுமாடு ... " என்று பாட்டியிடம் சொல்ல, "அப்படின்னா அது இப்போ முடியாது. கார் போக வழி கிடைக்காது . நாம வேறே வழியில் போகலாம்" என்று பாட்டியும் அப்பாவும் ஒரே சமயத்தில் சொல்ல, " என்னது ? பாயாசத்தில் ஆடு மாடா ? " என்று அதிர்ந்து போய்க் கேட்டார்கள் சத்யாவும் அவனது அம்மாவும். விஷயத்தை தாத்தா அவர்களுக்கு விளக்கியதும் " ச்சே .. இதுதானா ! " என்று அசடு வழிந்தார்கள்.
இப்போது கேள்வி என்னவென்றால் - தாத்தா சொன்ன பதில் என்ன ?
No comments:
Post a Comment