Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, February 12, 2017

ஹாய் குட்டீஸ் , (PUZZLE NUMBER - 22)


புதிர் எண் - 21 ன் விடை  - அவனது தாத்தா இரண்டாவது உலகப் போரின் போது பணிபுரிந்தார் என்பதற்கான சான்றிதழ்களைக் காட்டியிருக்கலாம். 

புதிர் எண்  - 22
Image result for image of parrot
கடைத் தெருவில் தனது கண்ணில் பட்ட 5 மாணவர்களை அழைத்த டீச்சர் "லீவு நாளென்றால் படிக்காமல் ஊரை சுத்த வேண்டுமென்ற கட்டாயம் ஏதாவது இருக்கிறதா?" என்றுகேட்க, "பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் 
உள்ள கிளி நாம கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறது. ஒரு கேள்விக்கு 10 ரூபாய் கொடுக்கணும். நாங்கள் அங்குதான் போய் வருகிறோம் " என்ற பதில் வந்தது மாணவர்களிடமிருந்து.  
"ஆச்சரியமா இருக்கே. என்ன கேள்வி வேணும்னாலும் கேட்கலாமா ? " என்று டீச்சர் கேட்க, " ஒரு பாட்டிலில் நிறைய துண்டு சீட்டு இருக்கும். ஒவ்வொரு சீட்டிலும் ஒரு கேள்வி இருக்கும். பாட்டிலுக்குள் கை விட்டு ஒரு சீட்டை எடுத்து அதிலுள்ள கேள்வியைக் கேட்கணும். நாம் கேட்கிற கேள்விக்கு சரியான விடையை கிளி சொல்கிறது. எல்லாரும் சேர்ந்து உள்ளே போகக் கூடாது. ஒருத்தர் போய் வந்ததும் அடுத்தவர் போகணும் " என்றான் அப்பு.
"யார் யார் என்னென்ன கேள்வி கேட்டீங்க?" என்று கேட்ட  டீச்சரிடம், " எங்களுக்கு வந்த கேள்விகள், திசைகள் எத்தனை? வேதங்களின் எண்ணிக்கை எத்தனை ? தசரதனுக்கு எத்தனை மைந்தர் ? மகாபாரத தர்மரின் தம்பிகள் எத்தனை பேர் ? 16 ன் route என்ன ? " என்று சொல்லிய மாணவர்களிடம், " இது சரியான ஏமாற்று வேலை. வாங்க .. அவனை ஒரு வழி பண்ணலாம் " என்றார். விவரம் புரியாமல் விழித்த மாணவர்கள், டீச்சர் சொன்ன விளக்கத்தைக் கேட்டு " அடடா ஏமாந்து விட்டோமே !" என்றனர்.
இப்போது கேள்வி என்னவென்றால் இது எந்த வகையில் ஏமாற்று வேலை ?

No comments:

Post a Comment