புதிர் எண் - 20 ன் விடை - ONE என்று ஆரம்பித்து HUNDRED வரை சொல்லி முடியுங்கள். நிஜம்தான். ONE லிருந்து HUNDRED வரை உள்ள வார்த்தை களில் A B C என்ற இந்த மூன்று எழுத்துக்களுமே இடம் பெறவில்லை. இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள்.
புதிர் எண் - 21
தனியார் நிறுவனம் ஒன்று " ஊர்க் காவல் படை " என்ற அமைப்பை நிறுவி அதற்க்கு ஆட்கள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது. நிறைய பேர் வந்து அந்த அமைப்பில் சேர காத்து நின்றார்கள். அவர்களிடம் " இந்த அமைப்பில் சேர உடல் திறமை, வலிமை மட்டும் இருந்தால் போதாது. எந்த ஒரு சூழ்நிலையையும் கையாள்கிற அளவுக்கு சமயோசித புத்தி அவசியம் . அதற்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்று அறிவித்தது.
புதிர் எண் - 21
தனியார் நிறுவனம் ஒன்று " ஊர்க் காவல் படை " என்ற அமைப்பை நிறுவி அதற்க்கு ஆட்கள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது. நிறைய பேர் வந்து அந்த அமைப்பில் சேர காத்து நின்றார்கள். அவர்களிடம் " இந்த அமைப்பில் சேர உடல் திறமை, வலிமை மட்டும் இருந்தால் போதாது. எந்த ஒரு சூழ்நிலையையும் கையாள்கிற அளவுக்கு சமயோசித புத்தி அவசியம் . அதற்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்று அறிவித்தது.
நேர்முகப் போட்டிக்கு முதல் ஆளாக நுழைந்த சேதுவின் சான்றிதழ்களை
சரிபார்த்துக் கொண்டிருந்த அதிகாரியிடம், " எங்கள் குடும்பமே இந்த தேசத்திற்காக உழைத்த ஒன்று. இரண்டாம் உலகப் போர் நடந்த போது எங்கள் தாத்தா இந்திய ராணுவத்தில் இருந்து சேவை செய்தார். அதற்கான சான்றிதழ் உள்ளது. என்னுடைய அப்பாவும் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அதற்கான சான்றிதழ்கள் இதோ உள்ளன. உயரக் குறைவு காரணமாக ஆசையிருந்தும் என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை. அந்த ஆசையை நிறைவேற்றவே நான் இங்கு வந்தேன்" என்று பணிவுடன் சொன்னான்.
"இப்போது உன் புத்திக் கூர்மை, சமயோசித புத்தியை டெஸ்ட் பண்ணப் போகிறோம் " என்ற அதிகாரி, " இந்த அறையிலிருந்து கொண்டு, 70 வருடத்துக்கு முற்பட்ட ஒரு பொருளைக் காட்ட உன்னால் முடியுமா ? " என்று கேட்க, அறையை சுற்றும்முற்றும் பார்த்தான் சேது. அங்கிருந்த எல்லாமே நவீனமான ஒன்றாக இருந்தது. பழமையாக எதுவுமே அவன் கண்ணில் படாததால் தலை குனிந்து நின்றான்.
கையில் வெண்ணையிருந்தும் நெய்யைத் தேடுகிற உன்னை புத்திசாலி கள் வரிசையில் சேர்க்க முடியாது. இந்த அமைப்பிலும் சேர்க்க முடியாது என்று சொல்லி வெளியேற்றியது.
இப்போது கேள்வி என்னவென்றால், என்ன செய்திருந்தால் அதிகாரியின் பாராட்டைப் பெற சேதுவால் முடிந்திருக்கும் ?
No comments:
Post a Comment