நேற்று ரயில்வே ஸ்டேஷனில், படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்தபோது எனக்கு முன்பாகி ஏறிக்கொண்டிருந்த இருவர் பேசிக் கொண்டது :
"நீ பேசாமே இரு மச்சி. ஆட்டோ ஸ்டாண்ட் இப்போ ஹை கோர்ட். பிளாட்பார்ம் சுப்ரீம் கோர்ட். ஏதாவது பிரச்சினைனு வந்தால் ரெண்டு கோர்ட்டையும் விசாரிச்சாலே போதும் "
(வெளியில் வந்து பஸ் பிடிக்கும் அவசரத்தில் அவர்களைக் கடந்து வேகமாக வெளியில் வந்து விட்டேன்.)
இப்படி ஏதாவது காதில் விழும்போது சிரிப்பு வரும். அல்லது சிந்திக்க வைக்கும். அவர்கள் பேச்சின் தலையும் தெரியாது. வாழும் தெரியாது. ஆனால் அந்த காமெடியை ரசித்தேன். நிஜமா இப்படி நடந்தா எப்படி இருக்கும் ? ஆனால் லாஜிக் சரியாக இல்லையே என்று யோசிக்கிறேன்.
இனி தொடர்ந்து கேட்டதும் ரசித்தும் இந்தப் பகுதியில் வெளியாகும். அதற்கு முன்னாலே உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
No comments:
Post a Comment