Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, December 02, 2016

ஹா ஹாஹ் ஹா ! ஐயோ .. ஐயோ !!

Image result for image of crack
பிரெண்ட்ஸ்,
இன்னிக்கு ஒரு கதை. அதை சொல்றச்சயே எனக்கு சிரிப்பாணியா இருக்குது. நடந்த கதை .. நடக்கும் கதை..
ஆங்கிலத்தில் ஒரு கதை உண்டு. ஒரு ராணி.. தோட்டத்தை சுற்றி வந்து கொண்டு இருந்தபோது  அவள் கண்ணில் ஒரு பூ தென்பட்டது. அதோட அழகு அவளுக்குப் பிடிச்சிருந்தது. ரொம்பக் குட்டியூண்டு பூ. அது மத்தவங்க கால் பட்டு அழிஞ்சிடக் கூடாதுனு நினைச்சு ஒரு ஆளை அந்த இடத்தில் காவலுக்கு நிற்க வச்சா. இப்படியே ரெண்டு மூணு தலைமுறையா அங்கே காவல் நடந்தது. ராணியும் போய்ச் சேர்ந்தாச்சு..  பூவும் போன இடம் தெரியாது. ஆனால் காவலுக்கு மட்டும் ஜவான்கள் நின்றார்கள், எதுக்கு நிற்கிறோம் என்பதுகூட தெரியாமல். இது ஒரு கதை.
ஒரு சினிமாவில் வந்த காட்சி. படத்தின் பேர் ஞாபகம் இல்லே. ஒரு பெண்ணிடம் வில்லன் வம்பு பண்ணுவான். அந்தப் பெண் அவனை அடித்து விரட்டுவாள். அதை சிவாஜி பார்த்துடுவார். ஆனால் வில்லனோ அந்தப் பெண்ணிடம் அடிவாங்கின கதையை வெளியில் சொல்ல மாட்டார்.  "அவ நம்மாளு " என்று கதை சொல்லிக் கொண்டு திரிவார். (சில சீன்ஸ் எனக்கு மறந்து போச்சு ). வில்லன் அடி வாங்கினதை ஒரு சைகை மூலம் சிவாஜி எல்லாருக்கும் சொல்லிடுவார். யாரிடமாவது அவன் வாலாட்டும்போது சிவாஜி சொல்லிக் கொடுத்தபடியே எல்லாரும் சைகை காட்டுவார்கள். அவமானப்பட்ட வில்லன் அங்கிருந்து ஓடுவார். 
அது மாதிரியே ஒரு உண்மை சம்பவம்.
எங்க ஊர்ப்பக்கம் ஒரு கதை சொல்லுவாங்க. ஒரு  வீட்டுக்கு வரும் ஒருவரை அவர் சகவாசம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் . " என்ன இன்னுமா கிளம்பலே?" என்று அடித்து விரட்டாத குறையாக விரட்டினாலும், அவன் வெளியில் போய், "என் கையைப் புடிச்சுகிட்டு போகவே கூடாதுனு தடுத்தாங்க. எனக்கு வேறே வேலை இருக்குனு சொல்லி அங்கிருந்து ஓடியாந்தேன் " என்று சொல்லிக் கொள்வானாம்.
ஒரு மனுஷனுக்கு முக்கியமா தெரிஞ்சிருக்க வேண்டிய ஒரு விஷயம் நம்மள பத்தி மத்தவங்க என்ன நினைக்கிறாங்க என்பது. 
தனக்கு தானே ஓவரா கற்பனை பண்ணிகிட்டு  திரிந்தால் பைத்தியக்காரப் பட்டம்தான் கிடைக்கும். ஒரு சிலருக்கு நாம் மரியாதை கொடுப்போம் - அதுக்குத் தகுதியான நபர் அவர் இல்லையென்றாலுங்கூட. அது, மத்தவங்களை மதிச்சு நடக்கிறது  நம்ம குடும்ப பழக்கமாக   வழிவழியாக வந்த ஒன்றாக இருக்கலாம். ஆனால் சில ஜென்மங்களுக்கு மரியாதை க்கும் நேசத்துக்கும் வித்தியாசம் தெரியாது.  
நல்லா கவனிக்கணும் .. இது உண்மை சம்பவம்.. எனது தோழி சொன்ன விஷயம்.. ஒரு பொண்ணு மேலே ஒருத்தனுக்கு ஆசை வந்துச்சு. அதை சேரி, பட்டிதொட்டியெல்லாம் சொல்லிப் புலம்பினான் (அங்கெல்லாம் அவனது உறவினர்கள் இருக்கலாம். அவர்களிடம் புலம்புவதை தப்பு என்று சொல்ல முடியாது). அந்தப் பெண்ணைக் கவர் பண்ண தனக்குத் தெரிஞ்ச வித்தை எல்லாம் காட்டிப் பார்த்தான். ரொம்ப புத்திசாலித்தனமா செய்றதா நினைச்சுகிட்டு அவன் பண்ற கோமாளித்தனத்தையெல்லாம் அந்தப்பெண் ஒரு சிறு சைகை மூலம் விமரிசிப்பாள். (எதனை தரம் தோற்றாலும் அதை தோல்வினு ஒத்துக்க மறுப்பவர்களைப் பார்த்து , "பரவாயில்லை. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலே. மீசை இல்லாத முகத்தில் மண் ஒட்டவே ஒட்டாது " என்று சொல்வது உலக வழக்கம்தானே) அந்தப்பெண் இவன் ஒவ்வொரு நாளும் புதுப்புது வித்தையா காட்டும்போது "மீசையில் மண் ஒட்டலே.. ஒட்டாது " என்ற ரீதியில் விமரிசிப்பாள். இதைவிடவா வேறு அவமானம் வேண்டும். அதுகூட புரியாத அந்த பைத்தியம் அவ செய்றதை அவகிட்டயே அவ   முன்னாலேயே  செய்யும், அது என்னவோ "கோடு வேர்ட்" என்று கற்பனை செய்து கொண்டு. எப்பவுமே பைத்தியக்காரனை சுத்தி பத்து பேர் உண்டு தானே. அதுகளும் மூக்குக்கு மேலே விரலால் தடவி எங்களுக்கு எதுவும் இல்லைனு ஒத்துகொள்ளுதுங்க. 
நாட்டில் என்னென்ன சாதனையை செய்யலாம்னு கிழவர்கள்கூட இளம் வயசுப் பிள்ளைங்களா கற்பனை பண்ணிக்கிட்டு துள்ளிக் குதிச்சுக்கிட்டு இருக்காங்க. ஒரு பதினெட்டு வயசு வாலிப பிஞ்சு இப்படி பைத்தியமா அலையறதை நினைச்சு சிரிப்புதான் வருது.  
இதையெல்லாம் விட தமாஷ் "என் மேலே  உனக்கு காதல்னு ஊருக் கெல்லாம் கதை சொல்றியே. உன்வீட்டு பிள்ளைகுட்டிங்க, மீடியா பீப்பிள் எல்லாரையும் கூட்டிட்டு போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு  வா. அங்கே வந்து உன் புலம்பலை சொல்லு !" என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள் அந்தப் பெண்.
அப்படி மட்டும் வந்துவிட்டால் மீடியாவுக்கு நிறைய நியூஸ் கிடைக்கும். அந்த நாளை எதிர்பார்ப்போம்.


No comments:

Post a Comment